Monday, October 27, 2008

சிங்கத்தின் வாயிலுள்ள மணங்களைப்பற்றி முயலிடம் கேட்பதைப்போல்


ஒரேயொரு ஊரில் காட்டில் ராஜாவாக சிங்கம் தெரிவுசெய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும் காட்டில் அரசன் சிங்கமென்பதால் இதனை பழையகதையென்று நீங்கள் எண்ணக்கூடும். இருப்பினும் இந்த சிங்கம் வழமையாகவே மீருகங்களைக் கொன்று பச்சையாக உண்டுவிட்டபின் தமக்குக்கீழுள்ள பொதுமக்களிடம் தனது வாயின் துர்நாற்றத்தைப் பற்றி விசாரிப்பது வழமையாகவே இருந்தது. ஒரு நாள் சிங்கம் இக்கேள்வியை முயலிடம் கேட்டது முயல் முகங்கொடுத்த நிலைமை பரிதாபமாக இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்து துர்நாற்றமெழுவதாகக் கூறினால் சிங்கத்தை ஏழனஞ் செய்வதாகப்போய்விடும்இ இதனால் முயலிற்கு மரணதண்டனை வழங்கப்படும். சிங்கத்தின் வாய் நறுமணமுள்ளததெனக் கூறினால் பொய்கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரணம் சம்பவிக்கப்படும். இதனால் முயல் தன்னை காப்பாற்றிக்கொள்ள கூறியவிடயமென்னவெனில் தற்பொழுது தடிமல் இருப்பதால் மணங்குணந் தெரியாமலுள்ளது எனக்கூறி தன்னை காப்பாற்றிக்கொண்டது.

இலங்கை பேத்ல்யூராவறு

மட்டக்களப்பில் மாகாணசபைத் தேர்தல் பங்குனி மாதம் 10ம் திகதி இடம்பெற நியமிக்கப்பட்டிருந்தது. கடத்தல், கப்பம்பெறல், காணாமற்போதல், பிள்ளைகளை யுத்தத்தில் இணைத்துக்கொள்ளல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பினும் ஆயதங்களுடன் பிரசித்தியாக நடமாடுவதற்கும்இ தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டோம் என்ற எண்ணத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நிலைமை இருப்பினும், ஆயுதங்களைக் கைவிடுமெண்ணம் இல்லாமல் திரியும் ஒரு சிறிய கூட்டமாக இயங்கும் ஓட்டுக் குழுவாகிய பிள்ளையான் குழுவென்று அழைக்கப்படும் ரி.எம்.வி.பி. குழு ஒரு வீரராவார். இவர்களுடன் இணைந்து 17வது அரசியலமைப்பைச் சீர்திருத்தஞ் செய்வது தடுக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒழிக்கு சகல சுயாதீன நிறுவனங்களையும் தமக்கேற்ற விதத்தில் செயற்படுத்த தமது செயற்பாடுகளை வெளிப்படையாகச் செயற்படுத்துவது ஜனாதிபதியின் தலைமையின் கீழுள்ள ஒரு குழுவாகும் அல்லது நிறுவனமாகும். (இந்தக் குழுவிற்கு தற்போதுள்ள கட்சிகளின் எண்ணிக்கையினை சரியாகக் குறிப்பிடுபவர்களுக்கு இலவசமாக பங்கொக் சென்றுவர பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது). இவ்விரு தரப்பினரும் ஒன்றாகக்கூடி போட்டியிடும்போது இவற்றுடன் இணைந்து போட்டியிட வருவது அரசின் பங்காளரான EPDP கட்சியும் அரசின் இராணுவத்துடன் மிகநெருங்கி செயற்படும் EPRLF (பத்மநாபக் குழு) உம் ரெ.லோ குழுவுமாகும். இதற்கெதிராகப் போட்டியிடும் கட்சியாக இயங்குவது அரசிலிருந்து விலகிக்கொண்ட முஸ்லிம் காங்கிரசாகும்.

பாதுகாப்பற்ற சூழ்நிலை

இவ்வாறான ஒரு பின்ணண்pயில் தேர்தல் கண்காணிப்பு Hiacce வான் ஒன்றில் கொடியொன்றினை ஏந்தியவண்ணம் ஒவ்வொரு வீதியாகச் செல்வதேயொழிய வேறொன்றுமில்லை. TNA மற்றும் UNP ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உத்தரவாதமில்லாத நிலையில், தேர்தலில் போட்டியிடாமலிருக்கும் சூழ்நிலையில், தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு பிரதேசத்தில் பொதுமக்கள் கூட்டமைப்பில் முகவர்கள் அல்லது பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ளுதல் இலேசான காரியமல்ல, கஷ்டமாக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டால் தேர்தலின்பின் அவர்களது பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித உத்தரவாதமும் வழங்கமுடியாது. ஆயுதங்களுடன் இருக்கும் நபர்களினால் செய்யப்படும் தேர்தல் வன்முறை செயற்பாடுகளினால் மற்றும் துஷ்பிரயோக செயற்பாடுகளுக்கெதிராக துணிச்சலுடன் செயற்படும் நபர்களுக்கேற்படப்போகும் துர்ப்பாக்கியமான நிலையினைப் புரிந்துகொள்ளல் கஷ்டமான விடயமல்ல. இப்பொழுது கிழக்குப் பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்டு வன்னிக்காட்டில் அடைக்கப்பட்டுள்ளனரென்று குறிப்பிடப்படும் LTTE குழுவினரும் தேர்தலுக்கெதிராக ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளதால் மேற்பார்வையாளர்களுக்கேற்படும் பாதிப்பை LTTEஇன் கணக்கிலும் இலகுவாக வரவு வைக்கக்கூடியதாக இருக்கும்.
இத்தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு தேவையான சிறந்த ஒரு சூழ்நிலை இல்லையென்பதனை தெளிவாகக் கணக்கிட்டு அதனை வெளிப்படுத்திய தேர்தல் வன்முறைகள் மேற்பார்வை நிலையம் (CMEV) தேர்தலை மேற்பார்வை செய்வதிலிருந்து விலகிக்கொண்டது. இருப்பினும் சிவில் சமூகத்துடன் தொடர்புடைய ஏனைய பிரதான தேர்தல் மேற்பார்வை குழுவாகிய PAFFREL (பவரல்) நிலையம் தேர்தலை மேற்பார்வை செய்தது.

கண்காணிர்பாளர்களின் காட்சி அல்லது நடிப்பு

பொலிஸிற்கே முறைப்பாடு செய்வதற்கே பொதுமக்கள் முன்வராதபோது, தேர்தல் கண்காணிப்பு நடமாடும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் முறைப்பாடு செய்வார்களென்றெண்ணுவது பைத்தியகாரத்தனமான ஒரு விடயமாகும். இதனால் மேற்பார்வையாளர்களால் அதிகபட்சமா செய்யக்கூடியது, பொலிஸிற்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கையின்மீது அறிக்கை சமர்ப்பிப்பதாகும். முறைப்பாடுகள் குறைவாகக் காணப்படின் தேர்தல் அமைதியாகவும், சமாதானமாகவும், சாதாரணமானதாக இருக்குமென்பது இதன் கருத்தாகும். இவ்வாறான ஒரு தேர்தலின்போது வேட்பாளர்கள் இடம்பெறுவது மிருகங்களைக் கொன்று உணவாக உண்ணும் சிங்கத்தின் வாயின் மணத்தை அனுபவிக்கச்சொல்லும் முயலின் நிலையாகும். முயலைப்போன்றே மட்டக்களப்பில் தேர்தலிடுவோரின் நிலையென்னவெனில் தமக்கு இந்நாட்களில் தடிமல் ஏற்பட்டுள்ளதால் மணங்குணம் அறியமுடியாமலுள்ளதென்றுகூறி தப்பிக் கொள்வதாகும். தேர்தல் கண்காணிப்பாளர்களால் உயர்ந்தபட்சமாக செய்யக்கூடியது, சிங்கத்தின் வாயில் இறந்த உடலின் துர்நாற்றம் வீசுகிறதென்று எந்தவொரு முயலும் முறைப்பாடு செய்யாத காரணத்தினால் சிங்கத்தின் வாய் மணக்கவில்லையென்று பக்கச்சார்பாக பிரச்சாரித்து அறிக்கையிடுவதாகும்.

Back to HOME page....

No comments: