Monday, October 27, 2008

சிங்கத்தின் வாயிலுள்ள மணங்களைப்பற்றி முயலிடம் கேட்பதைப்போல்


ஒரேயொரு ஊரில் காட்டில் ராஜாவாக சிங்கம் தெரிவுசெய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும் காட்டில் அரசன் சிங்கமென்பதால் இதனை பழையகதையென்று நீங்கள் எண்ணக்கூடும். இருப்பினும் இந்த சிங்கம் வழமையாகவே மீருகங்களைக் கொன்று பச்சையாக உண்டுவிட்டபின் தமக்குக்கீழுள்ள பொதுமக்களிடம் தனது வாயின் துர்நாற்றத்தைப் பற்றி விசாரிப்பது வழமையாகவே இருந்தது. ஒரு நாள் சிங்கம் இக்கேள்வியை முயலிடம் கேட்டது முயல் முகங்கொடுத்த நிலைமை பரிதாபமாக இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்து துர்நாற்றமெழுவதாகக் கூறினால் சிங்கத்தை ஏழனஞ் செய்வதாகப்போய்விடும்இ இதனால் முயலிற்கு மரணதண்டனை வழங்கப்படும். சிங்கத்தின் வாய் நறுமணமுள்ளததெனக் கூறினால் பொய்கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரணம் சம்பவிக்கப்படும். இதனால் முயல் தன்னை காப்பாற்றிக்கொள்ள கூறியவிடயமென்னவெனில் தற்பொழுது தடிமல் இருப்பதால் மணங்குணந் தெரியாமலுள்ளது எனக்கூறி தன்னை காப்பாற்றிக்கொண்டது.

இலங்கை பேத்ல்யூராவறு

மட்டக்களப்பில் மாகாணசபைத் தேர்தல் பங்குனி மாதம் 10ம் திகதி இடம்பெற நியமிக்கப்பட்டிருந்தது. கடத்தல், கப்பம்பெறல், காணாமற்போதல், பிள்ளைகளை யுத்தத்தில் இணைத்துக்கொள்ளல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பினும் ஆயதங்களுடன் பிரசித்தியாக நடமாடுவதற்கும்இ தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டோம் என்ற எண்ணத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நிலைமை இருப்பினும், ஆயுதங்களைக் கைவிடுமெண்ணம் இல்லாமல் திரியும் ஒரு சிறிய கூட்டமாக இயங்கும் ஓட்டுக் குழுவாகிய பிள்ளையான் குழுவென்று அழைக்கப்படும் ரி.எம்.வி.பி. குழு ஒரு வீரராவார். இவர்களுடன் இணைந்து 17வது அரசியலமைப்பைச் சீர்திருத்தஞ் செய்வது தடுக்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒழிக்கு சகல சுயாதீன நிறுவனங்களையும் தமக்கேற்ற விதத்தில் செயற்படுத்த தமது செயற்பாடுகளை வெளிப்படையாகச் செயற்படுத்துவது ஜனாதிபதியின் தலைமையின் கீழுள்ள ஒரு குழுவாகும் அல்லது நிறுவனமாகும். (இந்தக் குழுவிற்கு தற்போதுள்ள கட்சிகளின் எண்ணிக்கையினை சரியாகக் குறிப்பிடுபவர்களுக்கு இலவசமாக பங்கொக் சென்றுவர பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது). இவ்விரு தரப்பினரும் ஒன்றாகக்கூடி போட்டியிடும்போது இவற்றுடன் இணைந்து போட்டியிட வருவது அரசின் பங்காளரான EPDP கட்சியும் அரசின் இராணுவத்துடன் மிகநெருங்கி செயற்படும் EPRLF (பத்மநாபக் குழு) உம் ரெ.லோ குழுவுமாகும். இதற்கெதிராகப் போட்டியிடும் கட்சியாக இயங்குவது அரசிலிருந்து விலகிக்கொண்ட முஸ்லிம் காங்கிரசாகும்.

பாதுகாப்பற்ற சூழ்நிலை

இவ்வாறான ஒரு பின்ணண்pயில் தேர்தல் கண்காணிப்பு Hiacce வான் ஒன்றில் கொடியொன்றினை ஏந்தியவண்ணம் ஒவ்வொரு வீதியாகச் செல்வதேயொழிய வேறொன்றுமில்லை. TNA மற்றும் UNP ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உத்தரவாதமில்லாத நிலையில், தேர்தலில் போட்டியிடாமலிருக்கும் சூழ்நிலையில், தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு பிரதேசத்தில் பொதுமக்கள் கூட்டமைப்பில் முகவர்கள் அல்லது பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ளுதல் இலேசான காரியமல்ல, கஷ்டமாக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டால் தேர்தலின்பின் அவர்களது பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித உத்தரவாதமும் வழங்கமுடியாது. ஆயுதங்களுடன் இருக்கும் நபர்களினால் செய்யப்படும் தேர்தல் வன்முறை செயற்பாடுகளினால் மற்றும் துஷ்பிரயோக செயற்பாடுகளுக்கெதிராக துணிச்சலுடன் செயற்படும் நபர்களுக்கேற்படப்போகும் துர்ப்பாக்கியமான நிலையினைப் புரிந்துகொள்ளல் கஷ்டமான விடயமல்ல. இப்பொழுது கிழக்குப் பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்டு வன்னிக்காட்டில் அடைக்கப்பட்டுள்ளனரென்று குறிப்பிடப்படும் LTTE குழுவினரும் தேர்தலுக்கெதிராக ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளதால் மேற்பார்வையாளர்களுக்கேற்படும் பாதிப்பை LTTEஇன் கணக்கிலும் இலகுவாக வரவு வைக்கக்கூடியதாக இருக்கும்.
இத்தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு தேவையான சிறந்த ஒரு சூழ்நிலை இல்லையென்பதனை தெளிவாகக் கணக்கிட்டு அதனை வெளிப்படுத்திய தேர்தல் வன்முறைகள் மேற்பார்வை நிலையம் (CMEV) தேர்தலை மேற்பார்வை செய்வதிலிருந்து விலகிக்கொண்டது. இருப்பினும் சிவில் சமூகத்துடன் தொடர்புடைய ஏனைய பிரதான தேர்தல் மேற்பார்வை குழுவாகிய PAFFREL (பவரல்) நிலையம் தேர்தலை மேற்பார்வை செய்தது.

கண்காணிர்பாளர்களின் காட்சி அல்லது நடிப்பு

பொலிஸிற்கே முறைப்பாடு செய்வதற்கே பொதுமக்கள் முன்வராதபோது, தேர்தல் கண்காணிப்பு நடமாடும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் முறைப்பாடு செய்வார்களென்றெண்ணுவது பைத்தியகாரத்தனமான ஒரு விடயமாகும். இதனால் மேற்பார்வையாளர்களால் அதிகபட்சமா செய்யக்கூடியது, பொலிஸிற்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கையின்மீது அறிக்கை சமர்ப்பிப்பதாகும். முறைப்பாடுகள் குறைவாகக் காணப்படின் தேர்தல் அமைதியாகவும், சமாதானமாகவும், சாதாரணமானதாக இருக்குமென்பது இதன் கருத்தாகும். இவ்வாறான ஒரு தேர்தலின்போது வேட்பாளர்கள் இடம்பெறுவது மிருகங்களைக் கொன்று உணவாக உண்ணும் சிங்கத்தின் வாயின் மணத்தை அனுபவிக்கச்சொல்லும் முயலின் நிலையாகும். முயலைப்போன்றே மட்டக்களப்பில் தேர்தலிடுவோரின் நிலையென்னவெனில் தமக்கு இந்நாட்களில் தடிமல் ஏற்பட்டுள்ளதால் மணங்குணம் அறியமுடியாமலுள்ளதென்றுகூறி தப்பிக் கொள்வதாகும். தேர்தல் கண்காணிப்பாளர்களால் உயர்ந்தபட்சமாக செய்யக்கூடியது, சிங்கத்தின் வாயில் இறந்த உடலின் துர்நாற்றம் வீசுகிறதென்று எந்தவொரு முயலும் முறைப்பாடு செய்யாத காரணத்தினால் சிங்கத்தின் வாய் மணக்கவில்லையென்று பக்கச்சார்பாக பிரச்சாரித்து அறிக்கையிடுவதாகும்.

Back to HOME page....

வடக்கில் கிளைமோர் வைக்கும் சுமணசிறி தம்பியும் கிழக்கில் தற்கொலை செய்துகொள்ளும் செல்லம்மா தம்பியும்

மன்னாரில் வசிக்கும் இளம் பெண்களின் வாழ்க்கைகழிவது யுத்தத்தின் மத்தியிலும் வாழ்வது பாதுகாப்பற்ற நிலையிலுமாகும். அவளது கடின வாழ்க்கைக்கோலம் புத்தளத்தில் வசிக்கும் இளைஞனுக்கு புரியாத ஒரு புதிராகும். வேறுவிதமாகக் கூறினால் வடக்கில் தங்கை செல்லம்மா படும் அவதியினை கிழக்கிலிருக்கும் தம்பி சுமணசிறிக்குப் புரியாது.

இதனை செயற்படுத்துவதற்கான செயற்திட்டத்தை சாதாரணமாக மூன்று டிரக் இன் கீழ் அடக்குவர்.


முதலாவது டிரக் - யுத்தத்திலீடுபடும் தரப்பினரிடையே இணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை.


இரண்டாவது டிரக் - யுத்தத்திலீடுபடும் தரப்பினருக்கேற்ற சமூகத்துடன் ஒன்றிணைந்திருக்கும் அறிவாளிகள் மற்றும் கலைஞர்கள் போன்றோருக்கிடையில் இணக்கத்தினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை.


மூன்றாவது டிரக் - யுத்தத்திலீடுபட்டுள்ள தரப்பினருக்கேற்ப சமூகத்திலுள்ள சாதாரண பொதுமக்கள் மத்தியில் இணக்கத்தினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை.


சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக செயற்பட்ட காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினரிற்கேற்ற விஷேடமாக இரண்டாவது பகுதியினரிற்காக செய்யப்பட்ட முயற்சி யாதெனில் தங்கை செல்லம்மா மற்றும் தம்பி நடராஜா அனுபவித்த கஷ்டங்களை தம்பி சுமணசிறிக்கும் செனெஹெலதாவிற்கும் விளக்கிக் கொடுத்தலாம் அல்லது விளக்குதலாகும். இதற்காக கிழக்கிலிருந்து வடக்கை நோக்கி யாத்திரிகைகள், கண்காட்சிகள், செயற்திட்டங்கள், பேச்சுவார்த்தைகள், விளக்கேற்றல், மெழுகுதிரி ஏற்றல், கொடியேற்றல் இவ்வாறு பல்வேறு செயற்பாடுகள் ஊரூராக செயற்படுத்தப்பட்டது. இச்செயற்பாடுகளின் மூலநோக்கம் சமூகத்தை தெளிவுபடுத்துவதாகும். (Awareness Raising). இதற்காக அதிகபட்டசமான விடயங்கள் சேகரிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது, அச்சடிக்கப்பட்டது, பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. இச்செயற்பாட்டின்மூலம் நேரடியாகவே பலாபலன்களை பெற்றவர்களிடையே மொழிபெயர்ப்பாளர்கள், அச்சடிப்போர் மற்றும் சிறு கடைகளை தெருவோரத்தில் அடங்குவர். (பார்சல் சுற்றுவதற்காக பத்திரிகைகளைப் பயன்படுத்தினர்).


சமாதானம் முடிவுக்கு வந்ததும் யுத்தம் மீண்டும் ஆரம்பமானது. இதன்போது மூன்று பிரிவினருக்குமுரிய செயற்பாடுகள் முடக்கப்பட்டதுடன் சமாதானமும் மழுங்கியதும் வெளிநாட்டுப் பறவைகளும் பறந்து சென்றன. சுமாதானப் பாடலை இசைத்த தேசியப் பறவைகளும் யுத்தப் பாடல்களை பாடத்தொடங்கின. நாங்கள் யுத்தகாலத்திலிருக்கும் தங்கை செனெஹெலதாவிடம் மன்னாரிலிருக்கும் தம்பி நடராஜாவின் இன்னல் நிறைந்த வாழ்க்கை தொடர்பில் கேள்வியெழுப்பினால் எமக்குக் கிடைக்கும் பதில் என்னவாக அமையும்?


தம்பி நடராஜாவின் கஷ்டங்களை அனுபவிப்பது யுத்தத்தினால், அதிலிருந்து தப்பி நடராஜாவை பாதுகாப்பதாயின் பிரபாகரனை இல்லாதொழிக்க வேண்டுமென்றும் இதனால் தம்பி நடராஜாவுக்கு கௌரவமான இறப்பைப் பெற்றுக்கொடுப்பதாயின் யுத்தத்திலீடுபட வேண்டுமென்றும் தங்கை செனெஹெலதா குறிப்பிடுகின்றார். இவ் யுத்தத்தில் தற்பொழுது புலி தரப்பினருடன் இணைந்துள்ள தம்பி நடராஜாவின் அண்ணனை கொலைசெய்ய நேரிடுமென்றும், இதனால் இவர்களது உறவினர்களை மதவாச்சியை தாண்ட அனுமதிக்கக் கூடாதென்றும், கொழும்யிற்கு வந்துள்ள நடராஜாவின் மச்சானைக் கைதுசெய்து தொடர்ந்து தடுத்து வைக்கவேண்டுமென்றும், நடராஜாவின் குடும்ப அங்கத்தவர்களை தமது பிறப்பிடத்தை விட்டுச்சென்று முகாம்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகுமென்பது அவனது பதிலாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர்


‘பெயரைச் சொல்லுங்கள்.‘
‘படாசாரா‘
‘முழுப்பெயர்?‘
‘படாசாரா தம்பிமுத்து‘
‘என்ன நடந்தது?‘
‘என்னுடைய மகனை சுட்டுக்கொன்றுவிட்டார்கள்’
‘யார் செய்தார்கள்?‘
‘…………………‘
‘யார் சுட்டார்கள்?
‘மகனது குழந்தைகள் மூவரையும் நான்தான் பராமரித்து வருகின்றேன்.
ஏன்னையும் கொன்று விடுவார்கள்..’
‘நான் கேட்பது சுட்டவர்களைக் கண்டீர்களா?’
‘ஆம்’
‘எனவே யார் சுட்டது?’
‘இறந்தவர் இறந்து போய்விட்டார். புதைத்துவிட்டோம். மூன்று குழந்தைகளையும்
வாழவைப்பதற்கு ஒரு தொழில் கிடைத்தால்’
‘தங்களது கணவர்?’
‘அவர் இறந்து 18 வருடங்களாகின்றது’
‘தீடீர் மரணம்?’
‘ஆம்’
‘காரணம்?’
‘சுட்டுக்கொன்றார்கள்இ நான்கு நாட்கழுக்குப்பின் உடலைக் கண்டுபிடித்தோம்.
அரைவாசி எரிந்த நிலையில்’
‘யார் கொலை செய்தார்கள்?’
‘……………………..’
‘நான் கேட்பது யார் கொலை செய்தார்களென்று?’
‘அப்பா மரணிக்கும்பொழுது மகனுக்கு 10 வயதுஇ மகனை கஷ்டப்பட்டுப் படிப்பித்தேன். அவர்தான் எங்களை பராமரித்தது’
‘மகனின் மரணத்தின் தொடர்பில் பொலிஸிற்கு வாக்குமூலம் கொடுத்தீர்களா?’
‘ஆம்’
‘எங்களால் உங்கள் சார்பில் வழக்குத் தொடர்ந்து உதவமுடியும். சாட்சி சொல்ல விருப்பமா?’
‘………………………’
‘சர்வதேச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் தகவல்களை அனுப்பமுடியும்’
‘மகனின் இளைய மகனுக்கு ஐந்து வயதாகின்றது. இன்னுமொரு 10 வருடங்களின்பின் அவனையும் கொண்டுசென்று சுட்டுக்கொன்று விடுவார்களோ தெரியவில்லை. இங்கு மிஞ்சுவது பெண்கள் மாத்திரமே’
‘படாசாராஇ நான் கேட்பது ஒரு விடயம்இ நீங்கள் கூறுவது வேறொருவிடயம்.
உங்களுக்குப் பைத்தியமா?’
‘ஐயா நான் கூறுவது ஒரு விடயம்இ நீங்கள் கேட்பது வேறொருவிடயம்.
உங்களுக்குப் பைத்தியமா?’

பரக் ஒபாமா பின்லாடன் மூலம்

Back to HOME Page....

Wednesday, October 8, 2008

எல்லா குற்றங்களுக்கும் மரணம்தான் தண்டனை

7ம் நூற்றாண்டில் ட்ரக்கோ என்பவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின்கீழ் எல்லா குற்றங்களுக்குமான தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அலைந்து திரிதல், மரக்கறி, பழங்களை களவாடுதல் போன்றவற்றுடன் கொலை செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்பொழுது சிறுகுற்றங்களுக்கும் பாரியகுற்றங்களுக்கும் மரணதண்டனை விதிப்பது பாரபட்சம் என்ற கருத்து எழுந்தபோது ட்ரக்கோ அதற்கு இவ்வாறு விளக்கமளித்தார்.


ட்ரக்கோ கூறிய விதம்


“சிறுகுற்றங்களுக்கும் மரணதண்டனையே உகந்தது. பாரிய குற்றங்களுக்கு மரணதண்டனையைவிட மேலான தண்டனை இல்லாதபடியினால் அக்குற்றங்களுக்கும் மரணதண்டனையே அங்கீகரிக்கின்றேன்”



மனிதனை சட்டத்தின்கீழ் கைதுசெய்வதற்கும், மாட்டை கொலைசெய்வதற்கு கொண்டுசெல்வதற்குமிடையில் தெளிவான வித்தியாசமுண்டு. லிபரல் அரசின்கீழ் (இலகுவான) இன்று வாழும் மனிதர்கள் ட்ரக்கோ காலகட்டத்தில் வாழ்ந்ததைவிட அதிஸ்டசாலிகள் என்று எண்ணுகின்றனர். ஒருவர் கைதுசெய்யப்படுவதும், தடுத்துவைக்கப்படுவதும் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதாகும். சுதந்திர சமூகத்தில் இவ்வாறு சட்டத்தின்மூலம் மட்டுமே செய்யமுடியும். அவ்வாறு இல்லாமல் சுதந்திரத்தை மட்டுப்படுத்துதல் என்பது உரிமையை கட்டுப்படுத்துவதாகும். இக்கருத்தின்படி தேவையற்றவிதத்தில் மனிதர்களை கைதுசெய்து தடுத்துவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் அரசினை விபரிப்பதாயின் அவ்வரசை சுதந்திர அரசு என்று கூறமுடியாது. அதனை அதிகாரமுடைய அரசு என்றே அழைக்கவேண்டும்.



புத்தகத்தில் உள்ளவிதம்



நேரத்திற்கு மழை பெய்கிறது, நேரத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது சுதந்திர, சோசலிச, ஜனனாயக அரசின் கீழ் வாழுகின்றோம் என்று எண்ணும் மக்களுக்கு அவர்களது உரிமையும் சிறந்ததாகவே தெரிகிறது. சட்டத்திற்கு அடிபணிந்தே இச்சுதந்திர அரசு செயற்படுவதாக இம்மக்கள் எண்ணுகின்றனர். ஒருவர் கைதுசெய்யப்பட காரணம் இருக்கவேண்டும். கைதுசெய்யப்பட்டவுடன் உறவினர்களுக்கு ஒரு பற்றுசீட்டின்மூலம் அதனை தெரியப்படுத்தவேண்டும். அல்லது வேறு எந்த வகையிலாவது கைதினை தெரியப்படுத்தவேண்டும். சித்திரவதை செய்தல் முழுமையா தடைசெய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்து ஆஜர்படுத்தாமல் தடுத்துவைத்தல் ஒரு குறிப்பட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின், மனித சுதந்திரத்தை பாதிக்காதவிதத்தில் அரசின் செயற்பாடு சட்டத்தினால் மட்டுப்படுத்தப்பட்டதாக இம்மக்கள் எண்ணுகின்றனர்.



மேற்குறிப்பிட்ட விதத்திற்கு மாறாக ஒருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்டுவைக்கப்படுவாராயின் அது மனிதஉரிமையினைமீறும் செயற்பாடு என மக்கள் எண்ணுகின்றனர். இதன்போது இச்செயற்பாட்டை நீதிமன்றத்திற்கு முன் கொண்டுசென்று தேவையற்றவிதத்தில் தடுத்து வைக்கப்பட்டவரை விடுதலை செய்து அவரது உரிமையினை பாதுகாப்பதுடன் சட்டத்தை கையிலைடுக்கும் அலுவலருக்கும் பாடம் கற்பிக்கவேண்டுமென்று இம்மக்கள் எண்ணுகின்றனர்.



வேலை செய்யப்படும் விதம்



இச்சந்தர்ப்பத்திலே மக்கள் பாரிய இழப்பை எதிர்கொள்கின்றனர். இதன்போதுதான் இவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டம்இ அவசரகாலச்சட்டம் என்பவற்றை காணுகின்றனர். அத்துடன் இம்மக்கள் பின்வருவனவற்றையும் உணர்கின்றனர்.



சாதாரண சட்டத்தின்கீழ் மக்களைப் பாதுகாக்க அரசின்மீது சுமத்தப்பட்ட மட்டுப்பாடுகள் பல பயங்கரவாதத்தை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களின்மூலம் நேர் எதிர் மறையாக்கப்பட்டுள்ளது. இப்பயங்கரவாத சட்டங்களானது நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்களை எந்தவித குற்றமுமின்றி நீண்ட காலத்திற்கு மனிதாபிமானமற்ற கட்டளைகளின் பிரகாரம் தடுத்துவைத்தலை சட்டரீதியாக்கயுள்ளது.



நாம் எனது உரிமைகளை எமக்கு எடுத்து கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றோம். எனவே தான் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தமுடியுமென அவர் கூறினார்.



செய்யதக்கவை



இந்நிலைமையின்கீழ் பொதுமக்களுக்கு இரண்டு வழிமுறைகளுண்டு. ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்தவர்களுக்கெதிராக ஏதம் முறைப்பாடுகளிருப்பின் அவர்களுக்கெதிராக சாதாரண சட்டத்தின்கீழ் தொழிற்படும் வண்ணமும் முறைப்பாடு இருப்பின் ஆஜர்படுத்தும்படியும் இல்லாவிடின் அவர்களை விடுதலை செய்யும்படியும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன் அத்துடன் நிறுத்தாது மனிதசுதந்திரத்தை மட்டுப்படுத்த வழிசெய்யும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்கும் சட்டம் மற்றும் அதற்கேற்ற சமமான விதிகள் அடங்கிய அவசரகாலச்சட்டம்போன்ற கொடூரமான சட்டங்களை செயற்பாட்டிலிருந்து நிறுத்தும்வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கலாம்.



இரண்டாவது வழிமுறை குடியரசு “நாங்கள்” மற்றும் தீவிரவாதி “மற்றைய நபர்” என்ற இருவர் மத்தியில் தெளிவான பிரிவினை ஏற்படுத்தல். இதன்போது எம்மை இச்சந்தர்ப்பத்தில் த செயற்பபாதிப்பது சாதாரண சட்டம் என்பதுடன் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டும் ரக்கோனியானு சட்டம் உகந்ததென எண்ணி மனசை தேற்றிக்கொள்ள முடியும். இக்கருத்துகளுக்கேற்ப சென்று, தீவிரவாதத் தடுப்புச் சட்டம் அரசின்மூலம் தீவிரவாதிகளுக்கு மாத்திரம் ஏற்புடையதாக்கியதால் கைதுசெய்யப்பட்டவர்கள் சில சந்தர்ப்பங்களில் தீவிரவாதிகளென்பது யாருக்குத் தெரியுமென்று கூறிக்கொண்டு அவர்கள்து வேலையை மாத்திரம் செய்துகொள்வர்.



டேய் நாங்களும் மனிதர்கள்தான்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது அவரது பிரதான கொள்ளை அடிமைத்தனத்தை ஒழிப்பதாகும். இலிங்கனின் எதிர்த்தரப்பு நீதியரசராக இருந்தவர் டக்லஸ் என்பவராவார். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக செயற்பட்ட இலிங்கனின் கருத்துக்கு இவர் எதிர்ப்பாக இருந்தார்.

அடிமைத்தனத்தின் பௌதீக தோற்றம்

எண்ணக்கருஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களுள் பலர் அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்த விவசாய நிலங்களில் வேலைசெய்வதற்காக விவசாயிகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்வதென்பது கிழக்கமெரிக்காவின் பாரிய விவசாய நிலங்கள் அதன் வாழ்வாதாரங்களை இழப்பதென்பதாகும். இதற்கப்பால் அம்மக்கள் சுதந்திரக்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டதுடன் கிழக்குப்பிராந்தியத்தில் பொதுமக்களின் தராதரத்தில் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த விடயமென்னவெனில் சுதந்திர ஆபிரிக்காவின் அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலேற்பட்ட வளர்ச்சியாகும். இது அடிமைத்தனத்தினை மேலும் மேலோங்கச்செய்தது.

அடிமைத்தனத்தினை ஒழிப்பது தொடர்பிலான யோசனையின் பௌதீக எண்ணக்கருவை வெளியிட்டது வடபகுதி விவசாய மக்கள் முகங்கொடுத்த பிரச்சனையாகும். அடிமைத்தனமென்பது “சட்டரீதியானதாக” இருப்பினும் அம்மனிதாபிமானமற்ற வாழ்க்கைக்கோலத்தின் கொள்கைகளின்கீழ் மேற்கொண்டும் வாழ்வதை எதிர்த்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் அவர்களது உயிர்களைக்கூட மதியாது அடிமைகளாக வைத்திருப்பவர்களது பிடிpயிலிருந்து தப்பி வடபகுதிக்குச் சென்று குடியேறுவதற்கான காரணம் இதுவாகும். இதன் காரணமாக வடபகுதிகளில் மக்களின் செறிவு விஷேடமாக நகரப்பகுதிகளில் பொதுமக்களின் செறிவு அதிகரித்ததுடன் ஆபிரிக்க அமெரிக்கர்கள் போன்ற சட்டவிரோத குடிமக்கள் சேவை குறைந்த ஊதியத்துடன் பெற தொழில்வழங்குனர்கள் முன்வந்ததால் வெள்ளையினத்து அமெரிக்கர்களை தொழிலுக்கமர்த்துவதில் கட்டுப்பாடொன்று நிலவியது அல்லது குறைவொன்றைக் காணக்கூடியதாக இருந்தது. அடிமைத்தனம் சட்டரீதியாக இருந்த சந்தர்ப்பத்தில் தப்பியோடிவந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் சட்ரீதியானவர்களாக பதிவுசெய்யப்பட முடியாமலிருந்ததன் காரணத்தினால் அடிமைத்தனத்தையொழிப்பது தொடர்பில் சட்டங்கொண்டுவரப்படல் அவசியமானதாகும்.

பரிசுத்த எண்ணக்கரு

இருப்பினும் இவ் பௌதீக எண்ணக்கருவிற்குப்பதிலாக இவ்விவாதத்தில் பரிசுத்த எண்ணக்கருவும் நிலவியது. ஆபிரகாம் லிங்கனின் விவாதமென்னவெனில் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பில் குறிப்பிட்டதைப்போன்று “அனைத்து மக்களும் சமமென்பதையும்இ இதனால் சமமாக கவனிப்புக்கும் உரித்துடையவர்களாவர்” என்பதனையும் விவாதித்திருந்தார். இவ்வாறு குறிப்பிட்டுடிருப்பதனால் சுதந்திர மக்கள் மற்றும் அடிமைகளென்றவகையில் இரு பிரிவினரை நடத்துதல் அசாதாரணனெ;பதாகும் என்பதுடன் பிழையெனவும் வலியுறுத்தினார். அனைவரும் சமமான விதத்தில் படைக்கப்பட்டுள்ளனரென்பது கிறிஸ்தவ மதத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு படிப்பினையென்பதனால் இவ்வாதம் மக்கள் மத்தியில் பிரபல்யமடையத் தொடங்கியது.
தற்போது எதிர்த்தரப்பை ஆதரிப்பவரான டக்ளஸ் பாரிய சிக்கலினை எதிர்நோக்கினார். “அனைத்து மக்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்ற எண்ணக்கருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இவரால் முடியாதுள்ளது. மறுபுறத்தில் இது அரசியலமைப்பை நிர்மாணித்தவர்களால் குறிப்பிட்ட விடயமாகும். (இலங்கை போன்றல்ல அமெரிக்க அரசியலமைப்பை மீற ஒருவரும் முன்வருவதில்லை அல்லது ஒருவருக்கும் தைரியமில்லை. மறுபுறத்தில் அது கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கொள்கையினை கற்றுக்கொடுப்பதாகவுள்ளது.

மாவீரரின் பிரச்சனை

இதன்தோற்றம் எவ்வாறெனின் எலார அரசைத் தோற்கடித்து அனுராபுரத்தைக் கைப்பற்றி இலங்கையை ஒருவரது ஆட்சியின்கீழ் கொண்டுவந்து துடுகமுனு அரசன் தமது யுத்தத்தினால் இறந்த மக்களை நினைவுகூர்ந்து வெறுப்பேற்பட்டதன்பின் அவ்விடத்திற்கு வந்த மாவீரர் ஏற்பட்ட குழறுபடியைப் போன்றது. பௌத்தசமயத்தின் கற்பித்தலின்படி மனிதர்களைக் கொலைசெய்வது பாவமல்ல என்று எவராலும் குறிப்பிட முடியாது. இது நற்பண்புக் கொள்கையாகும். இருப்பினும் மறுபுறத்தில் “சிங்கள இனத்தவர் பௌத்த கொள்கையின் பிரகாரத்திற்காகவும்” போர்செய்து வென்ற அரசர்கள் வாய்மணக்க வைக்கவும் முடியாது என்ற விடயத்தை அல்லது கருதுகோளை மறுக்கமுடியாது.

நீதியரசர் டக்ளஸ் இச்சந்தர்ப்பத்தில் செய்ததென்னவெனில் மாவீரர் உள்ளிட்ட இவ்வாறான சந்தர்ப்பத்திற்கு முகங்கொடுத்த வேறு பலர் இவ்வாறான சந்தர்ப்பத்திலெடுக்கும் வழிமுறைகளை பின்பற்றியமையேயாகும்.

டக்ளஸ் குறிப்பிட்டிருந்ததாவது அரசியலமைப்பில் சகலரும் சமமானவர்களென்று குறிப்பிட்டிருப்பது தம்மைப்போன்ற வெள்ளையினத்தவரை அன்றி கறுப்பினத்து அடிமைகளையல்ல. இதுதான் அரசியலமைப்பை நிர்மாணிப்பவர்களுக்கு பொறுப்பாக அல்லது சொந்தமாக இருந்தே அரசியலமைப்பை உருவாக்கியவர்களுலொருவரான பேவர்சனை எடுத்துக் காட்டினார். அடிமைகளும் சாதாரண மக்களைப் போன்று சமமானவர்களென்றால் பேவர்சன் அடிமைகளின் சொந்தக்காரன் அல்லது பொறுப்பாளனாக செயற்படமுடியாது. இவ்விவாதத்தின்போது ஆபிரகாம் லிங்கள் குறிப்பிட்டதாவது அரசியலமைப்பை நிர்மாணித்தவர்கள் சகலரும் சாமானவர்கள் உன்று குறிப்பிட்டிருப்பது தற்பொழுது உலகில் எல்லோரும் சமமானவர்கள் என்று தெளிவாகத் தெரியும் பொய்யினை ஏற்றுக்கொண்டலாகாது. மறுபுறத்தில் அரசியலமைப்பின் சீர்திருத்தத்தின்மூலம் ஒரு மாயாஜாலம் சக்தியில் சகல மக்களும் சமமானவர்களென்று குறிப்பிடவில்லை. அவர்கள் செய்தது சகலரும் சமமானவர்களென்ற உரிமையினை சீர்திருத்தமொன்றின்மூலம் அறிவிப்பதாகும். உரிமையினை முதலில் வலியுறுத்தியதனூடாக அல்லது குறிப்பிட்டதனூடாக அதனை பலாத்காரம் செய்தல் கூடியளவு விரைவில் அடுத்தபடியாக செய்யப்படல்வேண்டும். சமத்துவத்தை உண்மையாகவே ஈட்டுவதாயின் நாங்கள் மிக நீண்டபயணஞ் செய்யவேண்டியிருந்தது. அதனை ஒருபோதும் பூரணமாக அடையமுடியாது போகலாம். இருப்பினும் அதனை அண்மித்துச்செல்லக்கூடியதாக இருக்கும். சமத்துவத்தையடைதலென்பது ஒரு போராட்டமாகும்.

அடிமைத்தனத்தை ஒழித்தலும் சிவில்யுத்தமும்

ஜனாதிபதி தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் வெற்றியடைந்தார். அவர் அடிமைத்தனத்தையொழித்து சமத்துவத்தையடைய செய்த பயணத்தின்போது இன்னுமொரு படிமுறையினை முன்னெடுத்துவைத்தார். இருப்பினும் எதிர்ப்பு இல்லாமலில்லை. கிழக்கு இராச்சியம் இத்தீர்மானத்திற்கெதிராக ஐக்கிய சமஸ்டி முறையிலிருந்து விலகி றிச்மன்ட் இராச்சியத்தை தலைநகராக்கி கூட்டாட்சிமுறையினை உருவாக்கி தழுவிய சங்கத்தை உருவாக்கினார். வுடக்கு மற்றும் கிழக்கு இராணுவத்தினரிடையே அமெரிக்க சிவில் யுத்தம் ஆரம்பித்தது. இச்சந்தர்ப்பத்தில் அடிமைகளாக இருந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் யுத்தத்தின்போது ஆயுதமேந்திப் போராடினர். இறுதியில் கிழக்குக் கூட்டாட்சி இராணுவத்தினரை தோற்கடித்து வொஷிங்டன் வெற்றியடைந்தது. அடிமைத்தனத்தை முடிவுக்குக்கொண்டுவர சட்டங்கள் இயங்கத்தொடங்கின அல்லது சட்டங்கள் செயற்பட்டன.

இருப்பினும் இவற்றினால் சமத்துவம் உருவாக்கப்படவில்லை. அமெரிக்கப் பெண்கள் தேர்தலில் வாக்கிட மற்றும் சமமான உரிமைகளை அனுபவிக்க மேலும் நீண்ட காலத்திற்கு போராடவேண்டியிருந்தது. ஆபிரிக்க அமெரிக்கர்கள் சட்டத்தினால் சமத்துவத்தை அடைய மேலும் நீண்டபயணம் செல்லவேண்டியிருந்தது.

இன்றுவரை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சி ஆதரவாளரைத் தெரிவுசெய்வதில் முன்னணியில் தோள்கொடுத்து நிற்பவர்கள் அன்றிருந்த டக்ளஸ் இற்கேற்க மனிதர்களாகக் கருதப்படாத இரண்டு நபர்களாவர். ஹிலாரி க்கிளின்டன் வெள்ளையினத்துப் பெண்ணாவார். பரக் ஒபாமா ஆபிரிக்க அமெரிக்கரொருவர். இவர்கள் இருவருளொருவர் ஜனாதிபதித் தேர்தலில் வென்று ஜனாதிபதியானால் இது சமத்துவத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் இன்னுமொரு அத்தியாயமாகும். இருப்பினும் சட்டத்தினூடாக சமத்துவத்தையடைந்துள்ள பெண்களுக்கு லடினோவரிற்கு இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும் ஆசிய அமெரிக்கர்களுக்கும் உண்மை நிலையினையடைவதற்கு இன்னும் நீண்டபயணம் போராடிச்செல்ல வேண்டியிருக்கும்.

பணப்பலம்மிக்க அமெரிக்காவில் வாழும் பலபிரிவினர் சமத்துவத்தை உண்மையாகவே அடைந்துகொள்வதற்கும், அத்துடன் நாடுபூராகவும் வாழும் ஏழைப்பொதுமக்கள் சமத்துவத்தையடைவதற்கும் எதிர்காலத்தில் போராடவேண்டியிருக்கும். அவ்வாறானதொரு சமத்துவத்தையடையும்வரை உண்மையிலே சமத்துவம் சமூகத்தில் நிலவமாட்டாது. இருப்பினும் இவ்வுரிமை பிரசுரிக்கப்பட்டிருப்பதனால் தற்பொழுது செய்யவேண்டியது என்னவெனில் அவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்த அதாவது கனவை நனவாக்க போராடவேண்டியுள்ளது.

சமத்துவமென்பது சகலரும் சட்டத்தின்முன் சமமாகப் பாதுகாக்கப்படவேண்டுமென்ற மனிதஉரிமையாகும். ஐக்கிய நாட்டின் மனிதஉரிமை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதனை எல்லா நாடும் ஏற்றுக்கொண்டு அதனை தமது நாட்டு எல்லையினுள் நடைமுறைப்படுத்த சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யுமென்று வாக்குக்கொடுத்துள்ளது. இதனால் சமத்துவத்திற்குரிய உரிமையும் மற்றைய மனிதஉரிமைகளைப்போன்று காலத்தை மிஞ்சும் உரிமைகளாகும்.

Back to Home page...

மனிதஉரிமை பாதுகாவலர்கள் சிவில் பாதுகாவலர்களாதல்

மனிதஉரிமை செயற்திட்டத்தின்போது சந்தித்த பிரதேசரீதியிலான மனிதஉரிமை செயற்பாட்டின் குழு என்னிடம் கூறியதாவது அவர்கள் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு சபையில் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனரெனக் கூறினார்.

பொலிஸ் அதிகாரிகள் தங்களது கிராமத்திற்கு வந்து சிவில் பாதுகாப்பு செயற்குழுவில் தங்களையும் இணையுமாறு அவர்களிடம் கேட்டுள்ளனர். “நீங்களில்லாவிடில் பொலிஸ் பாதுகாப்பற்ற நிலையிலிருக்குமென்று பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். யுத்தப்பிரதேசங்களில் சேவையாற்றுவதற்காக அலுவலர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பொலிஸில் தற்போது சேவையாற்றுபவர்கள் தேவையானளவில் அதாவது 100ற்கு 25 வீதமானோர் மாத்திரமாகும். இதனால் பொதுமக்களின் சேவை இக்குறைபாட்டினைத்தீர்க்க அவசியமாகவுள்ளது. சிவில் பாதுகாப்பு செயற்குழு இருப்பது அந்நோக்கத்திற்காகவேயாகும். முன்னர் குறிப்பிட்ட மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டிருப்பது இச்செயற்பாட்டிற்கேயாகும்.

“தற்பொழுது பொலிஸ் முன்னர் போன்றில்லை” என்று அவர்கள் கூறினர். “மனிதஉரிமைகள் தெபாடர்பில் பொலிஸாரும் கவனஞ்செலுத்துகின்றனர்”. பின்னர் ஒரு தினத்தில் அவர்களது ஒரு பிரதேச செயற்குழுவாக மனிதஉரிமைகள் தொடர்பில் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தியது. விரிவுரையாளர்களாக கலந்துகொண்டவர்களுள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணியும் பொலிஸ் உபபரிசோதகர் ஒருவரும் இருந்தார். “பொலிஸ் உபபரிசோதகர் அதிகாரி மனிதஉரிமை தொடர்பாக மிக உயர்வாகப் பேசினார்” கூட்டத்தின் தலைப்பு பின்வருமாறு அமைந்தது. “சிறந்த ஆட்சிக்கு மனிதஉரிமை தடையாகுமா?”

தற்பொழுது இவ் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் பொலிஸில் வரவேற்புப்பகுதிகளில் கடமையாற்றுகின்றனர். சோதனைச்சாவடிகளில் பொதுமக்களது உடமைகளை பரிசோதிப்பதில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் மற்றும் அவர்களது நடத்தை தொடர்பில் கண்காணித்து பொலிஸிற்கு அதுதொடர்பில் செய்திகளைப் பரிமாறுகின்றனர் அல்லது நபர்களை பொலிஸிடம் பொறுப்புக்கொடுக்கின்றனர். பொலிஸில் பொதுமக்களின் செயற்பாடு தொடர்பில் பொறுப்பாக ஒரு உத்தியோகத்தர் உள்ளார். சீருடையிலிருப்பதுமில்லை சிவில் பாதுகாப்பு செயற்குழு உறுப்பினர்களை தொடர்புபடுத்துவது இவரூடாகவேயாகும்.

எவ்வாறிருப்பினும் பொதுமக்களுக்கும் பொலிஸிற்குமிடையிலான தொடர்பு மிகவும் நெருங்கியதாகத் தோன்றுகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக சிவில் சமூகத்தினரை அரசுடன் இணைத்து அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின்மூலம் பொதுமக்களை இணைக்கும் கொள்கை பலாபலன்களையடைந்துள்ளதேயென்று கூறவேண்டும். “முதல் மாதிரியல்ல பொலிஸார் எம்மை நன்றாகக் கவனிக்கின்றார்கள்” என்று மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு புறத்தில் மனிதஉரிமை தொடர்பில் நல்ல அனுபவமுள்ளவர்கள் பொலிசுடன் இணைந்து உதவமுன்வரல் மனிதஉரிமை மீறப்படுதலைக் குறைக்க ஒருகாரணமாகும் என்பது இவர்களது கருத்தாகும். “ஒருவர் முறைப்பாடு செய்யவந்தால் முதல்மாதிரி என்னடா வந்தனி என்று கேட்பதில்லை. நாங்கள் என்னடா ஐயா தயவுசெய்து இங்குவந்து உங்கள் முறைப்பாட்டை செய்யுங்கள் என்றே கூறுகின்றோம்”. சிறு முறைப்பாட்டு பகுதி தமது பெயரை மாற்றியுள்ளது எவ்வாறிருப்பினும் இங்கு கொன்பிலிக்ட் ஒவ் இன்டரஸ்ட் ஒன்று ஏற்படாதென்று நான் கேள்வி எழுப்பினேன். இவ்வாறெடுத்துக்கொன்டால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் சித்திரவதைகள் அல்லது வேறுவிதமான மனிதஉரிமை மீறல்கள் அல்லது தமது கடமைகளை செய்யாதுவிடல் அல்லது கடமைகளிலிருந்து விலகல் என்பன தொடர்பிலான முறைப்பாடுகள் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் என்றவகையில் உமக்குக் கிடைக்கின்றது எனக்கொண்டால் இதன்போது நடப்பது என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபர் இதற்காக பொலிஸிற்கெதிராக செயற்படவேண்டுமென்பதாகும். இதன்போது இங்கு பிரச்சனை எழாதா? இல்லை அவ்வாறானதொரு பிரச்சனை எழுந்தால் எங்களால் பொலிசுடன் கதைத்து அதனை முடிவுக்குக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் அல்லது தீர்க்க்கூடியதாக இருக்கும்.

தற்கால யுத்தத்தின் தொனிப்பொருள் “எங்களுக்காக நாங்களென்பதாகும்” இவ்வாக்கியத்தின் ஆரம்பப்பகுதியில் அல்லது முதற்பகுதியில் அடங்குபவர்கள் அரசதரப்பினர்களான பொலிசும் இராணுவமுமாகும். பிற்பகுதியிலிருக்கும் நாங்களென்ற சொல் பொதுமக்களை வலியுறுத்துகின்றது. சுருங்கக்கூறின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது எங்களுக்காக நாங்களென்ற பனர்களை ஏந்தியவண்ணமாகும். இவ்வாறான ஒரு நிலையிருக்கும்போது எங்களது பிரதேச மனிதஉரிமை தொழிற்பாட்டாளர்கள் எங்களுக்காக உழைப்பதில் எந்தவிதமான புதுமையுமில்லை.

இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழும் சிங்களம் பேசும் பொதுமக்களுடன் மனிதஉரிமை பாகாப்புத்தொடர்பில் செயற்படும்போது மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொள்ளுதல் மிகஅவசியமாகும் இல்லது விளங்கிக்கொள்ளுதல் மிகஅவசியமாகும். பிரபாகரன் மற்றும் எல்.ரி.ரி.ஈ யினரை அழிக்கும் கடைசி யுத்தத்தில் கிழக்கு இணைந்துள்ளதுடன் “தீவிரவாதத்தை“ தோற்கடிப்பதற்கான யுத்தத்தில் தமது சுதந்திரத்தை மீது வைப்பதற்கும் பொதுமக்கள் இணங்கியுள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் மனிதஉரிமையினை பாதுகாப்பதற்காக குரலெழுப்புதல் தீவிரவாதற்குத் தேவையற்றவிதத்தில் ஒத்தாசை வழங்குதல் என்ற எண்ணக்கரு பொதுமக்கள்மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைத்தலென்ற விதத்தில் ஒழிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வாயால் அடிக்கடி அக்கருத்து வெயளியில்வரல் புதுமைக்கான காரணமல்ல.

1994ற்குப்பின் பல்வேறு இடையீடுகள்மூலம் குறைந்தபட்சமேனும் சட்டத்தினுள் நின்றுகொண்டு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உரிமைகள் எல்லாவற்றையும் தட்டிக்கழித்துக்கொண்டு அரசு செயற்பட்டது. இவ்வாறான ஒரு நிலைமை நிலவும்போது அதற்கு சிறிதளவேனும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அல்லது குரலெழுப்பாமல் பொதுமக்கள் அதனை யதார்த்தமாக எண்ணி அவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்குவதை காணக்கூடியதாக உள்ளது.

மீன் பிடிக்கும் குசல்ஹாமிக்கு கவுன்சிலின் நுழைவாயிலை முடிவிடவும்

மனிதஉரிமைகள் கவுன்சிலின் உறுப்புரிமைபெறும் அரசுகளைத் தெரிவுசெய்யும் தேர்தல் வைகாசி மாதம் 21ம் திகதி நியுயோர்க் நகரில் ஐக்கியநாடுகளின் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 47 ஆகும். அதில் உறுப்புரிமை பெறுவதாயின் ஒரு நாடு குறைந்தபட்சமேனும் 96 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். 2006ம் ஆண்டு தொடக்கம் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக இருந்ததுடன் அதன் உபதலைவராகவும் பணியாற்றியது.

வைகாசி மாதத்தில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தலின்போது உறுப்புரிமைநாடு தெரிவுசெய்யப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிருந்தது. இருப்பினும் இலங்கை உறுப்புரிமை நாடாக கடந்த இரண்டு வருடங்கள் தொழிற்பட்டது. இதன்போது எல்லா இனத்தவரும் மனிதஉரிமைகள் தொடர்ந்தேர்ச்சியாக மிகவும் பாரதூரமானவகையில் மீறப்பட்டதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. நாடுப+ராகவும் பல்வேறுதரப்பினர் (மக்கள்) வற்புறுத்தப்பட்டு கடத்தப்பட்டனர், கொலைசெய்யப்பட்டனர், காணாமற்போனர், சட்டரீதியற்றவிதத்தில் கைதுசெய்யப்படல் மற்றும் தடுத்துவைக்கபபடல் பல்வேறு கொடூர மற்றும் மனிதாபிமானமற்றமுறையில் நடாத்துதல் என்பவை வழமையில் பேசப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான மனிதஉரிமை மீறல்களை தடுத்துநிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை எடுக்கும்படி நாடடினுள்ளிருந்தும் மற்றும் சர்வதேசரீதியிலும் அழுத்தங்கள் இலங்கையரசிற்குக் கொடுக்கப்பட்டிருப்பினும் அரசு அவற்றை கவனிக்கவில்லை. மிகவும் தெளிவாகத் தென்பட்ட நிலையென்னவென்றால் வேண்டுமென்றே அரசு அக்கோரிக்கைகளை புறந்தள்ளியதென்பதாகும். அதுமாத்திரமல்ல மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்ற ரீதியில் குற்ற்ஞ்சாட்டப்பட்டவர்களுள் மிகவும் பாரிய எண்ண்pக்கையிலானோர் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டாலும் குற்றவாளியாக்கப்படடிரு;நதாலும் அதாவது சட்டத்தின் பிடிpயிலிருந்து தப்பி மிகவும் சுகமான வாழ்க்கையினை வாழ்கின்றனரென்பது தெளிவாகின்றது.



மனிதஉரிமை மீறல்களை ஆராய்வதற்காக நாட்டினுள் இயங்கும் மனிதஉரிமை ஆணைக்குழுக்களில் எவ்விதமான சுயாதீனத்தன்மையினையும் காணமுடியாதுள்ளதுடன் அவற்றின் தொழிற்பாடும் மந்தமாக இருந்ததென்பது எல்லோருக்கும் மிகவும் தெளிவாகத் தெரிந்த விடயமாகுமென்பதும் இது பாரிய பிரச்சனையாகவும் இருந்தது. பாரிய கொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகூட ஒரு வெள்ளை யானையின் நிலையினை ஒத்ததாக இருக்கின்றது. இவ்வாறிடம்பெறும் பாரிய மனிதஉரிமை மீறல்களுக்கு பரிகாரம் நாட்டினுள் கிடைப்பதில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. மனிதஉரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச மேற்பார்வை அலுவலகமொன்றினை நாட்டினுள் நிறுவுவது தொடர்பாக பல்வேறு மனிதஉரிமை தொழிற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தேவையினை எழுப்பியபோதும் அரசு அதுதொடர்பில் காட்டிய பாரிய எதிர்ப்புக் காரணமாக இன்றுவரைக்கும் எவ்வித பலாபலனையும் அனுபவிக்கமுடியாமலுள்ளது. இவ்வாறு மனிதஉரிமை தொடர்பில் எவ்வித மதிப்புமற்ற நாடு பாரியளவிலான மனிதஉரிமை மீறல்களை ஆசிர்வதிக்கும் ஒரு நாடு மேற்கொண்டும் மனிதஉரிமை கவுன்சிலில் அங்கம்வகிக்க வேண்டுமா? உலகம்பூராவும் மனிதஉரிமை வளர்ச்சியினை ஏற்படுத்த செயற்பாட்டு ரீதியில் எடுத்துக்காட்டாக இயங்கவேண்டிய கவுன்சிலின் உறுப்பினரொருவர் தமது நாளாந்தக் கடமைகளினால் அதனை மீறும்போது ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை தராதரங்களுக்கேற்படும் கதியென்ன? இன்னொருவகையில் கூறுவதனால் மீண்டும் கவுன்சில் உறுப்புரிமை இலங்கையரசிற்குக்கிடைத்தால் அதற்குரிய காரணம் தாங்கள் மனிதஉரிமையினை மதித்து செயற்படுவதுதானென தம்பட்டமடிக்குமென்பதுடன் தங்களைப் பாதுகாக்க (போர்வையொன்றை போர்த்துக்கொள்ள) செம்மறியாட்டைப்போன்ற (எருது) ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசிற்குக்கிடைக்கும். ஏதாவதொருவகையில் இம்முறை இலங்கையரசு கவுன்சிலின் உறுப்புரிமையிலிருந்து விலக்கப்பட்டால் மனிதஉரிமை தொடர்பில் சர்வதேசத்தின் வெறுப்புக்கும் பல பிரச்சனைகளுக்கும் ஆளாகுமென்பது தெளிவாகின்றது. இதனால் இலங்கையரசு தற்போதைக்கும் மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்புரிமையினை மீளப்பெறுவதற்கு கடும்முயற்சியினை ஆரம்பித்துள்ளது.



இந்தப் பின்னணியின்கீழ் மனிதஉரிமைகள் மற்றும் பல சிவில் சமூகங்கள் இலங்கையில் யதார்த்தத்தை விளக்கியுள்ளது. மீண்டும் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட வாக்களிப்பதென்பது ஐக்கிய நாடுகளின் மேன்மை தங்கிய கொள்கைகளை தராதரங்களை பகிடிக்கும் உள்ளாக்காவண்ணம் செயற்படும்படி சங்கத்திலுள்ள உறுப்புரிமை நாடுகளிடம் தனித்தனியாகவும் வௌ;வேறாகவும் கேட்கப்பட்டிருந்தது.



உங்களிடம் நாங்கள் மிகவும் பணிவுடன் கேட்பது என்னவெனில் இலங்கையினை இவ்வருடம் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கு துணைநிற்கவேண்டாம் என்பதாகும். எவ்வாறிருப்பினும் எங்களது நாட்டு சிவில் மக்களது உரிமைகள் மேலும் மீறப்படாமலிருக்க வழிசெய்யக்கூடிய முழுமொத்த சர்வதேச மேற்பார்வையின் கீழாகும். இதனால் மனிதஉரிமை சபைக்கு வாக்குகளை பரிசீலிக்கும் செயற்பாட்டின்போது நாட்டினுள் நிலவும் மனிதஉரிமைகள் தொடர்பான கவலைக்குரிய நிலைமை தொடர்பில் இலங்கையரசின் பொறுப்பினை காண்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் சங்கத்தின் சகல உறுப்புரிமை நாடுகளிடமிருந்தும் கேட்டுக்கொள்கின்றோம்.



இவ்வாண்டும் இலங்கை மீண்டும் தெரிவுசெய்யப்படாவண்ணமிருக்க வழிசெய்து கொடுக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். அதாவது இலங்கைக்கு உறுப்புரிமை ஆதரவு வழங்கவேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு செய்வதன்மூலம் இலங்கையரசிற்கு ஐக்கிய நாடுகளின் சங்கம் போன்றவற்றுக்கிடையிலான தேசிய நிறுவனங்களில் பங்காளராக மேலும் தொடர்ந்து செயற்படவேண்டுமானால் தமது கோவை செயற்படும் விதங்களை மாற்றியமைக்க உங்களது அரசுமூலம் முக்கிய செய்தியொன்று பரிமாறப்படுமென்பது தெளிவாகும். அரசியல் தேவைப்பாடொன்றில்லாமல் தொழிநுட்பஆதரவின்மூலம் மட்டும் இலங்கையின் மனிதஉரிமை நிலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

Back to Home page...

ஐஐஜிஈபி முறையினை வேருடன் அழித்தல்

சர்வதேச சுயாதீன மாண்புமிகுக் குழுவாக அழைக்கப்பட்ட ஐஐஜிஈபி குழு கடந்த காலத்தில் தமது கடமைகளை இடைநடுவே நிறுத்திவிட்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பியது. அவ்வாறு நாடுதிரும்புவதற்கு முன்பாக கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்கள் அவர்களது இறுதி அறிக்கையை வெளியிட்டவேளையில் கூறியிருந்ததாவது மனிதஉரிமைகள் மீறப்படுவது தொடர்பான உண்மை நிலையினை ஆராயவேண்டிய நிலைமை இலங்கையின் அரசிற்கு அரசியல் ரீதியில் தேசைப்பாடு இல்லையென்பதாகும். இச்செய்தியாளர் மாநாட்டின்போதும் அறிக்கையொன்றினை வெளியிட்டபின்பும் இந்த சுயாதீன மாண்புமிக்கவர்களுக்கெதிராக பல “சண்டித்தனங்கள்” முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் சட்டமாஅதிபர் கூறியதாவது “சர்வதேச மனிதஉரிமைகள் மேற்பார்வை குழுவொன்றை இலங்கை;ககுக் கொண்டுவரல் இவர்களது சூழ்ச்சியாக இருந்தது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியதாவது இவர்களுக்கு பொறுப்புக் கொடுத்திருந்த கடமையினை செய்யாது வேறொரு வேலையினை செய்ததாக இவர் கூறியிருந்தார்”. மந்திரி விஜித ஹேரத் கூறியதாவது “சூழ்ச்சியாளர்களுக்கு இலங்கைக்குள் நுழைய இடங்கொடுத்த அரசு கடைசியில் பல பேச்சுக்களுக்கும் ஆளாகியது இது அரசின் பிழையாகும்”. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ் சுயாதீன மாண்புமிகுக் குழுவினை அலரிமாளிகைக்கு அழைத்து அவர்களை பேய்க்காட்டியதாக (தெஹி கபுவே) பல வெப்தளங்களும் (தமிழில் போடுங்கள்) பத்திரிகைகளும் அறிக்கையிட்டது. திவயின ஞாயிறு தினங்களில் வெளிவரும் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததாவது “ஜனாதிபதி இந்த சுயாதீனக்குழுவினர்களை பேசும்போது” மாண்புமிக்கவர்கள்” ஏதும் கூறாமல் கீழே பார்த்தபடி உட்கார்ந்திருந்தனரென்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மாண்புமிக்ககுழு எல்.ரி.ரி.ஈஇற்கு சார்பாக செயற்பட்டனரென்று திவயின மேலும் கூறும்போது சில சட்டத்தரணிகளையும் மேற்கோள்காட்டியிருந்தது”.

இலங்கையில் வசிப்பவர்களின் இவ்வாறான பல கருத்துக்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் என்பவற்றைப் பார்க்கும்போது தென்படுவது என்னவெனில் சர்வதேச சுயாதீன மாண்புமிகுக்குழு “சூழ்ச்சியான, எல்ரிரிஈஇற்கு சார்பானவர்கள், இவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்னவென்று” புரியாதவர்களாக, இவர்களுக்கு பேசும்போது கீழேபார்த்துக்கொண்டிருக்கும் பொம்மைஆட்காட்டிகள் என்பது பலரது கருத்தாக இருந்தது.

இதற்கமைய சர்வதேச மாண்புமிக்கோர் இவர்களால் செய்யமுடியாத வேலையொன்றினை பாரமெடுப்பதன்மூலம் தற்கொலையினை எய்தினரா? அல்லது தற்கொலை செய்துகொண்டவர்கள் வேறு யாராவதா?
பதினொருபேர் உள்ளடங்கலாக சர்வதேச மாண்புமிகுக் குழுவினை இலங்கைக்கு வரவழைத்தது ஜனாதிபதியாகும். ஜனாதிபதி இவர்களிடம் கேட்டிருந்தது என்னவென்றால் பிரதானமாக அவர்களது காலத்தின்போது (2005 ஆவணி 1ம் திகிதி தொடக்கம் 2006 ஐப்பசி 16ம் திகதி வரை) இடம்பெற்ற பாரிய கொலைகள் யாரால்இ எவ்வாறு இடம்பெற்றதென்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் தொழிற்பாடு சர்வதேச தராதரத்திற்கேற்ப இருக்கின்றதா அல்லது தொழிற்படுகின்றதா என்பதனை மேற்பார்வை செய்து அதனை அறிக்கையிடும்படியாகும். இதற்கமைய 2007 மாசி மாதத்தில் மாண்புமிகுக் குழுவினர் அவர்களது தொழிற்பாடுகளை ஆரம்பித்தது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள் தொடர்பில் மாண்புமிகு குழு மேற்பார்வை அறிக்கைகள் பலவற்றை வெளியிட்டனர். முதலாவது அறிக்கையினை ஜனாதிபதிக்கு 2007ம் ஆண்டு 6ம் மாதம் 1ம் திகதி ஆணைக்குழு சமர்ப்பித்தது. இரண்டாவது அறிக்கை 2007ம் ஆண்டு 9ம் மாதம் 18ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையினூடாக அவர்கள் தொடர்ச்சியாக கூறியது என்னவென்றால் ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள் (பேசிக் இன்டநஸனல் நோம்ஸ் அன்ட் ஸ்ரடட்ஸ்)இற்கு ஏற்ப அமையவில்லையென்பதாகும். அவர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் சில.

1. சட்டமாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டை முன்வைக்கின்றனர். சாட்சியாளர்கள் சாட்சிகளை முன்னெடுக்கின்றனர். இக்கொடூர செயற்பாடுகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றது சட்டமாஅதிபரின் வழிகாட்டலின்படியோகும். அவ்விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லையென்பதனால்தான் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களது மேற்பார்வையின்கீழ் சரியான முறையில் மேற்கொள்ளப்படாத விசாரணைகளுக்கெதிராக சாட்சிகளை வழிநடத்த சட்டமாஅதிபரின் திணைக்களம் செயற்படுவதனால் அவர்களது கடமையினை நிறைவேற்றுவதில் (கொன்பிளிக்ட் ஒவ் இன்ரெஸ்ட்) உருவாகியுள்ளது.

2. ஆணைக்குழுவின் சாட்சிக்கு அழைக்கபபடும் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்புத்தொடர்பில் சரியானதொரு வழிமுறை இல்லாத காரணத்தினால் குற்றவாளிகளுக்கெதிராக சரியான சாட்சிகள் சாட்சிகொடுக்க முன்வருவதில்லை.

3. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தெளிவற்றதாக இருப்பதுடன் மந்தமாகவும் தென்படுகின்றது.

4. அரச திணைக்களம் அல்லது நிறுவனங்களிலிருந்து (சில விடயங்கள் சாட்சிகளை சேகரிக்கும்போது) ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்குத்தேவையான ஆதரவு கிடைப்பதில்லை.

5. ஜனாதிபதி அலுவலகத்தினூடாக ஆணைக்குழுவின் சகல செயற்பாடுகளும் அல்லது முக்கிய செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்படுவதனால் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் அதற்குக்கிடைக்கும் பணவசதியிலும் பற்றாக்குறைத்தன்மை நிலவுகின்றது.

இவ்வாறான முறைப்பாடுகளை கூறிய மாண்புமிகு குழு முன்னெடுத்துக்கூறியதாவது இவ்வாறான பழிச்சொற்களை சரிசெய்வதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றத்தவறுவதால் கிடைக்கும் பலாபலன் என்னவெனில் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரம் மற்றும் சக்தி சர்வதேச தராதரத்திற்கேற்ப அமையவில்லையென்பதாகும். 2007 ஆவணி 20ம் திகதி இந்த சுயாதீனக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது இந்த விடயங்கள் தொடர்பில் அவரது கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் மந்தமானநிலை தொடர்பாக மாண்புமிகுக் குழு முன்னிறுத்திய கருத்துக்கள் தொடர்பில் அரசு தொடர்ச்சியாகக் கவனியாது இருந்ததுடன் அவற்றினை எதிர்த்தும் செயற்பட்டனர். ஆணைக்குழுவின் தலைவர் இதுதொடர்பில் தமது விருப்பமற்ற தன்மையினை கருத்துவடிவில் ஊடகங்களினூடாக தெரிவித்தார். அதுமாத்திரதமன்றி அவர்களது கடமை தொடர்பில் மாண்புமிகு குழு செய்தமுன்மொழிகளை தற்போதைய அரசின் சட்டமாஅதிபர் அதுதொடர்பில் விடையளிக்கையில் செயற்பட்டவிதம் மிகவும் பிற்போக்கானதாக தென்பட்டது. சட்டமாஅதிபர் அதற்கு பதிலளித்த விதத்தை மாண்புமிகு குழு பின்வருமாறு எடுத்துக்கூறியது. சர்வதேச மாண்புமிகு குழுவின் முக்கியம் வாய்ந்த தகவல்களின் உள்ளடக்கம் தொடர்பில் தமது அதிருப்தியினை தெரிவிக்கும் உரிமை சட்டமாஅதிபருக்குண்டு. மாண்புமிகு குழுவின் அங்கத்தவர்கள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நேர்மையான விதத்தில் மதிப்பளிக்கின்றனர். அதேபோன்று சட்டமாஅதிபரின் பதவிக்கேற்றவிதத்தில் கருத்துக்கள் பரிமாற்றப்படுகின்றது என்பதனையும் அவர்கள் அவர்கள் நம்புகின்றனர். மாண்புமிகு குழுவினர்மூலம் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முக்கியபிரச்சனைகளை புறந்தள்ளியும் மியவும் கீழ்த்தரமான வார்த்தைப்பிரயோகங்களையும் பயன்படுத்தி குறிப்பிட்ட கடிதம் வரையப்பட்டுள்ளதென்பது மாண்புமிகுக் குழுவின் கருத்தாகும்.

முடிவில் மாண்புமிகுக் குழு தமது கடமைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதனடிப்படையில் 2008 பங்குனி 31ம் திகதி அவர்களது சேவையினை இடைநிறுத்தியது. சித்திரை 14ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் பின் அவர்களது இறுதி அறிக்கையினை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் உண்மையினைக் கண்டுபிடிப்பதற்கு அரசுக்கு எந்தவிதமான அரசியல் தேவைப்பாடும் இல்லையென்பதனை தெளிவாக குறிப்பிட்டிருந்தனர். மாண்புமிகுக் குழுவுக்கெதிராக பழிச்சொல்லும் அரசின் மற்றும் தேசப்பக்தியுடைய ஊடகசெயற்பாடுகள் அதன்பின்தான்; ஆரம்பித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டதன் பின் தேசிய பிரச்சனைகள் தொடர்பான வழிமுறையாகவிருந்தது. “அழித்து முடிவுக்குக் கொண்டுவரல் என்ற வழிமுறையாகும்”. யுத்தத்தில் ஈடுபடும் இவ்விருதரப்பினரும் இவ்வழிமுறையினை எதிர்த்துச் செயற்பட முடியாமல்போனதுடன் இதன் பலாபலனாக் கிடைத்தது யாதெனில் பாரியளவில் மனிதஉரிமை மீறல்கள் நாட்டினுள் இடம்பெற்றதாகவும் பாரியளவில் மனிதஉரிமை மீறல்கள் நாட்டினுள் இடம்பெறும்போது அதற்கெதிராகச் செயற்பட தேசிய மனிதஉரிமை பாதுகாப்பு நிறுவனங்களிற்கு முடியாமலுள்ளதென்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனடிப்படையில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்கு அறிக்கை செய்வதற்கு அல்லது வெளியிடுவதற்கு மற்றும் பிரசித்திப்படுத்துவதற்கு சர்வதேச மனிதஉரிமை அலுவலகமொன்றை இலங்கையினுள் நிறுவுவது அவசியமென்பது தொடர்பில் நாட்டினுள்ளும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஒரு கருத்து நிலவியது. ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை கவுன்சிலின்போது மட்டுமன்றி அதற்கு வெளியேயும் இக்கருத்து பாரிய அவதானத்திற்குள்ளாகியது. அரசு இந்த யோசனைக்கெதிராக செயற்பட்டது. அரசின் நோக்கமென்னவெனின் நாட்டினுள்ளிருக்கும் நிறுவனங்களினூடாக பிரச்சனைகளை முடிவுக்குள் கொண்டுவர முடியுமென்பதாகும். இதற்கேற்ப 2006 கார்த்திகை மாதம் 3ம் திகதி ஜனாதிபதி ராஜபக்ச மூலம் பாரியளவில் மனிதஉரிமைகள் மீறப்பட்ட 16 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைசெய்து இதற்குப்பொறுப்பானவர்களை கண்டுபிடிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதற்கிடையில் சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதன் நோக்கமாக ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வதேச தராதரத்திற்கேற்ப செயற்படுகின்றதா என்பதனை அவதானிப்பதற்கொருவர் என்ற அடிப்படையில் மிகவும் திறமைவாய்ந்த ஒருவரை அனுப்பும்படி பல நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கேற்ப அந்த நாடுகள் மிகவும் புத்திசாலிகளை தெரிவுசெய்து அனுப்பிவைத்தது. இந்தியா இதற்கு அனுப்பிய நபர் தங்களது நாட்டின் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசராக இருப்பினும் மனிதஉரிமை தொடர்பான விடயங்களை நன்கறிந்து அனுபவம் பெற்றவராகவுமிருந்த திரு. பி. என். பகவதி. பிரான்ஸினால் அனுப்பப்பட்டவர் திரு. பேனாட் குஸ்ஓனர் ஆவார். (அதன்பின் அவர் அந்நாட்டு சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அனுப்பப்பட்ட நபர் சுறறுலா மற்றும் அபிவிருத்தி அமைச்சராக இருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. பியரே கொட் ஆவார்). இந்தோனேஷியாவால் அனுப்பப்பட்ட நபர் திரு. மாசுகி தருஸ்மான் ஆவார். இவ்வாறு அமெரிக்கா, ஜப்பான, இங்கிலாந்து, நெதாடலாநடது, கனடா, சயிப்ரஸ் போன்ற நாடுகள் தமது நாட்டிலிருந்தும் பிரமுகர்களை அனுப்பிவைத்தனர். இதற்கேற்ப இந்த மாண்புமிக்கவர்கள் பேச்சுக்கு ஆளாகுபவர்களும் குறைகூறுபவர்களும் எண்ணுவதுபோல் அவர்களது பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருக்குமளவிற்கு பொம்மைகளல்ல. மாண்புமிக்க இவர்கள் மிகவும் கீர்த்தியுடைய சட்டரீதியான மற்றும் மனிதஉரிமை தொடர்பான விடயங்களில் மிகவும் பிரசித்திவாய்ந்த இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் நாடுபூராவுமுள்ள அனுபவங்களைப்பெற்ற திறமைசாலிகளாவர்.

மாண்புமிக்க மற்றும் இலங்கை அரசிற்கிடையிலேற்பட்ட பிரச்சனை என்ன?

ஆணைக்குழுவின் விசாரணைக்கென நியமிக்கப்பட்டிருந்த பல கொலைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த தரப்பினர் அரச இராணுவப்படையும் பொலிஸ_ருமாகும். விஷேடமாக தற்போது விசாரணையின் அரைப்பகுதியினை அண்டியுள்ள மூதூர் ஏசீஎவ் வழக்கின் 17பேர் கொலைவழக்கு மற்றும் திருகோணமலையில் கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களது கொலைவழக்கு தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்படுவது அரச தரப்பினராகும். இதனடிப்படையில் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் எவ்வாறிருப்பினும் தமது படையின் கீர்த்தியினை பாதுகாக்கவேண்டியது அரசுக்குரிய பாரியகடமை என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. சர்வதேச தராதரத்திற்கும் கொள்கைகளுக்குமேற்ப செயற்படும் ஆணைக்குழுவினால் அவ்வாறான ஒரு நோக்கம் நிறைவேறுவதென்பது உண்மையாகும். இதற்காக முடியுமானவரைக்கும் அத்தராதரங்களை கவனியாதுவிடல் முக்கியமாகும். இச்சுயாதீனக்குழு சூழ்ச்சியாளர்களாகவும் வேண்டப்படாதவர்களாகவும் அரசுக்கும் இராணுவப்படைக்கும் தென்பட மூலகாரணமாக அமைவதென்னவெனில் ஆணைக்குழுவினை சர்வதேச தராதரங்களுக்கு செயற்படும்படி தொடர்ச்சியாக இவர்கள் கட்டளையிட்டது. செய்திகளை வெளியிட்டது. சட்டமாஅதிபருடன் பேச்சில் ஈடுபட்டது. ஜனாதிபதியினை சந்தித்து இதுதொடர்பில் குறிப்பிட்டபடியினாலுமாகும்.

இருப்பினும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பொறுப்பு மத்தியில் பிரச்சினை தொடர்பில் அவர்களது மேற்பார்வை ஒரு துளியேனும் கவனஞ்செலுத்தவில்லை. ஒரு வருடத்திற்குள் முடிவுறுத்தப்படவேண்டுமெனக்கூறி பொறுப்புக் கொடுக்கப்பட்ட செயற்பாடுகளில் ஆணைக்குழு ஆரம்பமாகி இரண்டு வருடங்களாகியும் விசாரணைகளிடம்பெறுவது மூதூர் “அக்ஷன் பாம்” பணியாளர்கள் 17பேர் தொடர்பான கொலையும் திருகோணமலையில் இடம்பெற்ற ஐந்து மாணவர்களது கொலை தொடர்பான விடயமுமாகும். இதன்படி ஆணைக்குழுவின் செயற்பாடு மிகவும் மந்தமான நிலையிலுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உதாரணமாகக் கூறுவதாயின் கடந்த மாசி மாதத்தில் 10 நாட்களாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த பண்டபத்தில் “தயடகிறுள” என்ற நிகழ்ச்சி இடம்பெற்றபோது ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆணைக்குழுவில் சாட்சிகொடுக்கும் சாட்சியாளர்களது பாதுகாப்புத்தொடர்பில் எவ்விதமான முக்கிய ஏற்பாடும் இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சட்டமும் பாலகிரி தோஷத்திற்குட்பட்டுள்ளது. மாண்புமிக்கவர்களின் மேற்பார்வையின்படி ஆணைக்குழுவின்முன் சாட்சி கொடுப்பதற்கு கண்களால் சம்பவத்தை நேரில்கண்ட சிவில் சமூகத்தினரெவரும் முன்வரவில்லை. தமக்கு தெரிந்தவற்றை சொல்லுவதற்குப்பதிலாக திறமையற்றவிதத்தில் தோன்றுவதற்கு பாதுகாப்புப் படைத்தரப்பின் சாட்சியாளர்கள் விரும்புகின்றனர். இதனடிப்படையில் மாண்புமிக்கவர்களின் கருதுகோள் என்னவெனில் “கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு அல்லது அதிகாரம் எனபவற்றை சிறந்தவகையில் செயற்படுத்த ஆணைக்குழுவினால் முடியாததென்பதாகும்.

தற்போது அரசின் கோபத்திற்கு இக்கருத்தே காரணமாக அமைகின்றது. மாண்புமிக்கவர்களை சந்தித்தபோது ஜனாதிபதியால் கேட்கப்பட்டதாவது “எனக்கு அரசியல் நோக்கம் இல்லையெனில் ஆணைக்குழுவினை எதற்காக நியமித்தேன்” என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. மனிதஉரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு அரசியல் தேவைப்பாடொன்று அவசியமாகும். இருப்பினும் ஆணைக்குழுவொன்றினை அமைப்பதால் மட்டும் அவ்வரசியல் தேவைப்பாடு தோன்றவில்லையென்பது அதற்கும்மேலான ஒரு உண்மையர்கும். பலர் கூறுவதனால் மட்டும் ஆரவாரித்து ஆணைக்குழுவொன்றினை அமைத்து பின் அவற்றை வேண்டுமென்றே அங்கவீனமாக்கி பலனற்ற இயற்கை மரணத்திற்குட்படுத்திவிடல் எமது நாட்டின் சம்பிரதாயமாகும். அதற்கிருக்கும் மிகவும் நெருங்கிய உதாரணம் அரசியலமைப்பின் 17வது சீர்திருத்தத்தின்மூலம் நியமிக்கப்பட்ட அரசியலைமைப்புச் சீர்திருத்தச்சபை மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களாகவும் தென்படும் விதத்தில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கேற்பட்ட நிலையுமிதுவாகும்.

அரசின் கருத்துப்படி மாண்புமிகு ஆணைக்குழுவின் கூட்டங்களில் பங்குபெறாமல் அதனை குறைசொல்வதனையே தொழிலாகக் கொண்டிருந்ததென்பதாகும். இது சட்டத்தைப்பற்றி எதுவுமறியாது செய்யப்படும் இழுத்தடிப்புக்களேயாகும். வழக்கொன்றை நடத்துகின்றோமென்ற கருத்தில் காலையிலிருந்து இரவுவரைக்கும் நீதிமன்றத்தின் கதிரைகளை சூடாக்கத்தேவையில்லை. இதற்கு சட்டப்புத்தகமே போதுமானது. இன்னுமொருவகையில் கூறுவதாயின் 2007 மார்கழி மாதம் 17ம் திகதி வரைக்கும் இவ்விருவழக்குகளின் அமர்வுகள் 76ற்கு மாண்புமிக்கவர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் கலந்துகொண்டனரென்பது இவர்களது கருத்தாகும். அத்துடன் மகவும் உற்சாகத்துடனும் விருப்பத்துடனும் வழக்கின் அமர்வுகளை கண்காணிப்பதற்காகவும் மிகவும் உயர்ந்த தகுதிகளைக்கொண்ட உதவிமுகவர்கள்மூலம் கொழும்பு மற்றும் அதற்கேற்ற இடங்களில் விசாரணைகள் ஆராய்ச்சிகளை முற்றுமுழுதாக மேற்பார்வை செய்ததாக இவர்கள் கூறியிருந்தனர். ஆத்துடன் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை ஒன்றாகக்கூடி ஆணைக்குழுவின் நிலைமையினை கலந்தாலோசிப்பதற்கும் இவர்கள் பொறுப்பாக இருந்தனரென்பதுடன் அதனை சரிவரவும் செய்தனர்.

அரசின் எண்ணமென்னவெனில் அது நினைப்பதை மாண்புமிக்கவர்கள் கூறவேண்டுமென்பதாகும். இருப்பினும் துரதிஷ்டவசமாக பகவதி போன்ற இந்திய பிரதமநீதியரசர் எங்களது நாட்டரசிற்கு தேவையானதை கூறுபவர்களல்ல. அவர்கள் கூறுபவை சட்டத்திற்கேற்ற விடயங்களாகும். அரசிற்கேற்ற விடயங்கள் இடம்பெறாதபோதும் தேவையற்ற விடயங்கள் இடம்பெறும்போதும் சட்டம் மற்றும் சாதாரணத்துவத்தை அறிந்தவர்கள் அதற்கெதிராவது சாதாரண விடயமே. இதன்போது அவர்கள் சட்டத்தை மீறுபவர்களுக்கு தலைவலியாகின்றனர். இது தற்போதுள்ள நிலைமையாகும்.

கெட்டவர்களுக்கெதிராவதன் சவால்


ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை கவுன்சிலின் 7ஆவது அமர்வு கடந்த வாரம் ஜெனிவாவில் முடிவுற்றது. முன்னைய நேரஅட்டவணையின் பிரகாரம் மார்ச் 28ஆவது நாள் முடிவுறவேண்டியிருந்து பின் இன்னுமொரு அரைவாசி நாளுக்காக அமர்வு நீடிக்கப்பட்டது. ஜக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் வாரிசாக கிடைத்த மனிதஉரிமை கவுன்சில் இன்னும் அதன் இளமைப் பருவத்திலுள்ளது. இதனால் இம்முறை அமர்வின்போது கூடிய கவனம் மனிதஉரிமை கவுன்சிலின் வளர்ச்சியிலும் மனிதஉரிமை தொடர்பில் உயர்தானிகர் அலுவலகத்திற்கும் கவுன்சிலுக்குமான தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பன கலந்துரையாடப்பட்டது. (மனிதஉரிமை உயர்தானிகர் பதவி ஐக்கிய நாட்டு உயர்செயலாளரினால் நியமிக்கப்படுவதுடன் கவுன்சில் உயர்சபையின் கீழியங்கும் ஒரு நிறுவனமுமாகும்) கவுன்சில் இறுதியாக யாருக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை.

அமர்வுகள் ஆரம்பித்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடக்கம் 5ஆம் தேதி காலையமர்வு வரை அங்கத்துவ நாடுகளின் விசேட பிரதிநிதிகளின் தங்களது கருத்துக்களை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆமர்வுகள் ஆரம்பத்தின்போது மனிதஉரிமை உயர்தானிகர் திருமதி லூயிஸ் ஆபர் இவ்வாண்டின் 6ஆம் மாதத்துடன் நிறைவுறும் தனது முதலாவதாண்டு அங்கத்துவக்காலத்தின் பின் மீண்டும் அவ்வங்கத்துவப்பதவியினை வகிக்கப்போவதில்லையென்ற அவரது கருத்தை முன்வைத்தார். பலரது அதிருப்திற்குள்ளானதற்கான காரணம் நாளுக்குநாள அதிகரித்துவரும் பாரிய மனிதஉரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு மற்றும் அதனை அறிக்கையிடுவதற்காக இலங்கையினுள் தனது உயர்தானிகர் ஆலயத்தின் கள அலுவலகத்தை நிறுவ எடுத்த முயற்சியேயாகும்.

இம்முறை அமர்வானது இலங்கையின் அரசதரப்பினரை பொறுத்தமட்டில் அவர்களுக்கு எதிராக பல புகார்கள் எழுப்பப்பட்ட அமர்வாக இருந்தது. இருப்பினும் இலங்கையரசுக்கு ஆறுதல் தரும் விதத்தில் இலங்கைக்கெதிராக எவ்வித புகாரும் ஏற்படுத்தப்படாதவகையில் அமர்வுகள் நிறைவுற்றது. இந் நிறைவு மனிதஉரிமை கவுன்சிலின் சாதாரண செயற்பாடுகளை தெரிந்திருக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான விடயமல்ல. கவுன்சிலினுள் பல நாடுகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் மிகவும் கண்டிப்பான விதத்திலும் மென்மையான முறையிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தர்க்கத்தில் முடிவது (குறிப்பிட்ட நாட்டிற்கெதிராக ஏதாவது முடிவு எடுக்கப்படுவது) மிகவும் அரிதான சந்தர்ப்பத்திலேயேயாகும். அவ்வாறானதொரு தீர்மானமெழுவது கவுன்சிலின் அங்கத்துவ நாடுகளின் மேலதிக வாக்குகளின் முலமாகும். உதாரணமாக இலங்கையின் நிலைமையினைக் கருத்திற்கொள்வோமாயின் இலங்கையில் மேலோங்கியுள்ள மனிதஉரிமையின் நிலைமை அமர்வின்போது பல்வேறு நாடுகளின் முகவர்களினால் பேசப்பட்டது. அமர்வின் ஆரம்பத்தின்போது சுவிற்சர்லாந்தின் மனிதஉரிமைகள் அமைச்சர் இலங்கை மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் அதிககவனத்தைச் செலுத்தினார். அத்துடன் மனிதஉரிமையின் உயர்தானிகர் லூயிஸ் ஆபர் இலங்கையினுள் இன்றைய நிலைமையில் சர்வதேச தலையீடு அவசியமென்பதனையும் வலியுறித்தினார். வி.ஐ.பி முகவர்களின் அமர்வின்போது பிரித்தானிய, ஆபிரிக்க, ஆசியாவில் ஐக்கிய நாட்டு கடமைகள் தொடர்பில் உரையாடும் டிலோக் பிரவுன் அடியார்கள் நீண்ட நேரமாக இலங்கையின் நிலையினைப் பற்றி கவனம் செலுத்தினார். பாரிய விதத்தில் தீவிரவாத பயமுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைத் தீவிரவாதச் செயற்பாடுகளைக் கண்டனஞ் செய்வதுடன் தீவிரவாதத்திற்கெதிராக செயற்படும் சந்தர்ப்பத்தில் மனிதஉரிமைகளையும் மதித்து நடத்தல் வேண்டுமென்றும் கூறியிருந்தார். நாட்டினுள் காணாமற்போதல்கள்இ சட்டவிரோதமான படுகொலைகள்இ ஊடகங்களுக்கெதிராக செயற்படல் என்பவற்றும் அவற்றிற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்திலிருந்து தப்பியிருக்கும் இத்தருணத்தில் இலங்கையிலுள்ள மனிதஉரிமை நிறுவனங்களிற்கு முக்கிய பங்கொன்றினை செயற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அக்கடமையினை செயற்படுத்துவதற்கு அவ்வமைப்புக்கள் சுயாதீனமாக இயங்கவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். மேலும் கூறுகையில் லூயிஸ் ஆபரின் கருத்து உயர்தானிகர் அலுவலகத்தை இலங்கையில் நிறுவ ஐக்கியநாடு தமது பாரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளதென்பதனை முன்வைத்தார்.

அதற்கு மேலான சுவீடன, நெதர்லாந்து போன்ற நாடுகளும் தமது அதிருப்தியை இவ்வமர்வின்போது வெளியிட்டிருந்தனர். விசேடமாக நோர்வே இலங்கையின் மனிதஉரிமை மீறல்களுக்கு நெருங்கிய தொடர்புடைய நிலையினைப் பற்றி நீண்டநேரம் கருத்துக்களை வெளியிட்டிருப்பினும் அது எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பெயரினை முன்வைக்காமல் மிகவும் கவனமாக செயற்பட்டது. மனிதஉரிமை கவுன்சிலுடன் இணைந்ததாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராய நியமிக்கப்பட்டிருந்த அதிவிசேட பத்திரிகை நிருபர்கள, விசேட முகவர்கள், செயற்பாட்டுக்குழுக்கள் என்பவற்றின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் பலவிடயங்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறிப்பாக கொடூர செயற்பாடுகள் அதேபோல் கொடூர மனிதாபிமானமற்ற கேவலமான நடத்தைகள் தண்டனைகள் தொடர்பில் விசேட நிபுணர் மன்பிரேட் நொவாக் 2007 ஒக்டோபர் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் சிறந்த விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அதில் பொலிஸ் நிலையங்களில, இராணுவ முகாம்கள், சிறைச்சாலைகள் என்பவற்றினுள் இடம்பெறும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பில் மிகநீண்ட அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். அக்கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் தொடர்பில் விசேட நிபுணர்கள் மனிதஉரிமை பாதுகாவலர்கள் தொடர்பில் விசேட நிபுணி என்பனவர்களின் அறிக்கைகளிலும் இலங்கையில் மிகவும் பாரதூரமான நிலையிலுள்ள மனிதஉரிமை நிலையின் குறைநிறை பற்றிய விடயங்கள் ஆராயப்பட்டிருந்தது. சுருங்கக்கூறின் மனிதஉரிமையின் முழு அமர்வின்போது இலங்கை குற்றவாளிகளின் கூட்டிலேயே அமர்ந்திருந்தது. அரச சார்பில் அங்கு கலந்து கொண்டவர்களுள் மனிதஉரிமையும் அதற்குப் பொறுப்பான அமைச்சர் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனிதஉரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ ஜெனிவாவின் முகவரான தயான் ஜயதிலக உட்பட சட்டமாஅதிபர் திணைக்களம் பொலிஸ் உட்பட வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகளுக்கு முழு அமர்வின்போதும் ஏற்பட்ட புகார்களுக்கெதிராக தங்களைப் பாதுகாக்கும் விதத்தில் விடையளிக்கவேண்டியிருந்தது. இதற்கான உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய பல்வேறு நாட்டு முகவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது அதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருப்பதற்கும் உடனடியாக அவற்றிற்கு பதிலளிக்கும் உரிமையின்கீழ் மிகவும் செய்வினையுடனும் பதிலளிக்கும் சிறப்புற்ற அமர்வொன்று இலங்கையின் முகவர்களுக்கு கிடைத்திருந்தது. வி.ஐ.பி முகவர்களது கருத்துக்கள் உள்ளிட்ட அமர்வின் ஆரம்ப தினத்திலேயே கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்திருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவுக்கும் மனிதஉரிமையினை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் அதனை பாதுகாத்தல் தொடர்பிலும் அவரது வழமையான கருத்துக்களை தெரிவிப்பதற்குப் பதிலாக அங்கிருந்த கவலைக்குரிய நிலவரம் என்னவெனில் தம்மைப் பாதுகாக்க காரணம் கூறுவதாகும். இலங்கை உலகிலேயேயுள்ள பரிதாபமற்ற பிரிவினைவாத தீவிரவாத குழுவுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை தெளிவுபடுத்திய அமைச்சர் அவ்வாறான ஒரு நிலைமை நீடிக்கும்போதும்கூட மனிதஉரிமையினை பாதுகாப்பதற்கு தமது ஜனாதிபதியும் அரசும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக எடுத்துக்காட்டினார். மனிதஉரிமை உயர்தானிகர் அலுவலகத்தின் கள காரியாலயத்தை இலங்கையில் உருவாக்குவதற்கு தமது அரசு மிகவும் கண்டிப்புடன் தமது எதிர்ப்பை தெரிவிப்பதாக விளக்கிய அமைச்சர் அதற்குப் பதிலாக இலங்கையினுளிருக்கும் அரச மனிதஉரிமை நிறுவனங்களின் நிலை மற்றும் தொழில் திறமையினை உயர்த்துவதற்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்பை தமக்கு வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். தனது நாடு நிரூபிக்கக்கூடிய விமர்சனங்கைளப் போற்றுவதுடன் எப்பொழுதும் தமது அரசை மதிப்பதாக வலியுறுத்தியிருந்தார். மனிதஉரிமை ஆணைக்குழுவின் நிலையினை உயர்த்துவதற்காக பாராழுமன்ற தேர்தல் குழுவொன்றின் ஆலோசனையினை எதிர்பார்ப்பதாகவும் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் என்பனவற்றைப் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இப்பொழுது தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்புக்கருதி விசேட சட்டமூலமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்திருந்தார்.

இவ்வெல்லாத் தகவல்களின் படி குறைந்து கூடியுள்ள மனிதஉரிமை நிலைமையின் பாதக நிலையினை பல நாடுகள் இவ்வமர்வின்போது மட்டுமல்லாது இதற்குமுன் இடம்பெற்ற 6ஆவது அமர்விலும் செய்த கண்டனங்களுக்கு புகார்களுக்கு காரணம் கூறும்வகையில் தப்பிழைக்கும் வகையில் விடயங்களை முன்வைத்தனர். இருப்பினும் மனிதஉரிமை அமைச்சர் மற்றும் அவரது முகவர்கள் கூறிய காரணங்கள் எவையும் உண்மைக்கு அருகிலும் வரவில்லையென்பது தெளிவாகியது. இன்னொரு வகையில் கூறுவதாயின் அமைச்சர் இருந்தது யதார்த்தமாக இலங்கை மண்ணில் இல்லாத ஒரு நிலையினை உருவாக்கிக்கொண்டு கவுன்சிலில் தனது கடமையினை நல்லெண்ணத்துடன் நிறைவேற்றினார்.

அமர்வு மண்டபத்தில் இவ்வாறு இடம்பெறும்போது மனிதஉரிமை கவுன்சில் வளாகத்தின் பல சிறிய மண்டபங்களினுள்ளும் இலங்கையின் மனிதஉரிமை நிலைமை தொடர்பில் பல்வேறு விதமான கலந்துரையாடல்கள் கருத்துக்கள் வெளியிடல் என்பன இடம்பெற்றது. சயிட் இவன்ட் என்று அழைக்கப்படும் இவை பொதுவாக பொருத்தமான அங்கத்துவ நாடுகள் மூலமாகவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் இலங்கைக்கு சர்வதேச மனிதஉரிமைகள் மேற்பார்வை அலுவலகமொன்று அவசியமற்று இருப்பதற்கான காரணம் என்ன? என்ற தலைப்பின்கீழ் இவ்வாறான இரண்டாம் பட்சமான ஒன்றுகூடலொன்று இலங்கை அரசின் பிரதிநிகள்மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு நடத்தப்பட்டது. முஹிந்த சமரசிங்ஹ, தயான் ஜயதிலக, ரஜீவ வீரசிங்ஹ என்பவர்களுடன் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பெரிய எண்ணிக்கையில் இங்கு குறிப்பிடப்பட்ட தலைப்பின்கீழ் கருத்துக்களை தெரிவிப்பதற்கு தயாராக இருந்தபோது அதற்கு கலந்துகொண்ட கண்காணிப்பாளர்களுக்கு விடயங்களை வெளிப்படுத்துதல் ஒருபுறமிருக்க கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் ஒரு அமர்வாக இக் கூட்டம் அமைந்தது. சுருங்கக்கூறின் சம்பிரதாயமாக இவ்விரண்டாம்பட்ச ஒன்றுகூடல்களுக்கு கலந்துகொள்வதற்கு விருந்தோம்புவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த பணிஸ் 30 தொடக்கம் 40 வரையிலான எண்ணிக்கை மண்டபவாயிலில் மீதியாக இருந்தது. இருப்பின் அரச பிரதிநிதிகள் மூலம் பின் ஒரு நாள் இடம்பெற்ற “சிறு உரிமைகள்” என்னும் இரண்டாம்பட்ச ஒன்றுகூடலுக்கு அவ்வாறானதொருநிலை ஏற்படவில்லையென்ற ஒரு குறிப்புமுண்டு.

7ஆவது அமர்வின்போது இலங்கையில் மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தை விழிப்பூட்டும் எண்ணத்துடன் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் ஜெனிவாவிற்கு சென்றிருந்தனர். அவர்கள் பல்வேறு மனிதஉரிமை நிறுவனங்களின் துணையுடன் இரண்டு இரண்டாம்பட்ச ஒன்றுகூடல்களை ஒழுங்குபடுத்தியிருந்தனர் ஒன்று சர்வதேச மேற்பார்வை காரியாலயம் இலங்கை ஏன் அவசியமானது? ஏன்பதும் இக்கூட்டத்தின்போது அமெரிக்காவின் ஹியுமன் றயிட்ஸ் வொச் அமைப்புமூலம் இலங்கையில் காணாமற்போனோர் என்பதுடன் தொடர்புடையவகையில் ஒழுங்கமைக்கப்பட்ட 60 சம்பவங்கள் அடங்கிய விடயக்கொத்து “றிகறிங் நயிட்மெயார்” என்ற பத்திரத்தை வெளியிட்டனர். இலங்கையில் அரச பிரதிநிதிகள் தமது நிரந்தரவிடயத்தை வெளிப்படுத்திக்கொண்டு கூட்டத்தின்போது விடையளிக்கும் உரிமையினை செயற்படுத்தும் விதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையரசு அமர்வின் முழுப்பகுதியின்போதும் மேற்பார்வை அலுவலகத்திற்கெதிராவே தமது கருத்தை வலியுறுத்தியது. இக்கருத்தை நிலைப்படுத்துவற்காக பலவாதங்களை முன்வைத்தனர். அவற்றிலொன்று தற்போது இலங்கையிலிருக்கும் தேசிய மனிதஉரிமைப் பாதுகாப்பு நிறுவனம் அத்தொழிற்பாட்டிற்கு போதுமானதென்பதாகும். தேவைப்படுவது என்னவெனில் அந்த நிறுவனங்களின் சுறுசுறுப்புத் தன்மையினையும் தொழிற்பாட்டுத் தன்மையினையும் உயர்த்துவதற்குத் தேவையான தொழிநுட்ப பக்கபலத்தை உயர்த்துவதாகும்.

மிகவும் கொடூரமான தீவிரவாதக் கும்பலுடன் போரிலீடுபட்டிருப்பினும் இவ்வாறான நிலைமையிருக்கும் பல்வேறு நாடுகளைவிட மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதில் ஏனைய நாடுகளைவிட இலங்கை முன்னணியிலிருப்பதாக இலங்கையின் கருத்தாக இருந்தது. அவ்வாறே மனிதஉரிமைகளைப் பாதுகாக்காது அதை மீறுவோருக்கெதிராக தற்போதைக்கும் சட்டரீதியான ஏற்பாடு செய்யப்பட்;டுள்ளது. உதாரணமாக அவ்வாறான குற்றங்களை செய்ய இராணுவம் மற்றும் பொலிஸ் படைக்கெதிராக தற்போதைக்கு 600க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது காலதாமதமாக தென்பட்டாலும் இவ்வாறான நிலைகளிருக்கும் வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை வேகமாகவே செயற்படுகின்றது. மறுபுறத்தில் இப்போதைக்கு மனிதஉரிமை தொடர்பாக மேற்பார்வை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள சில நாடுகளின் கருத்துப்படி அவ்வாறானதொரு அலுவலகம் இல்லாதிருந்தால் நல்லதெனக்கூறுகின்றனர். இலங்கையில் மனிதஉரிமை தொடர்பாக பேசும் பல நாடுகள் வேறு நாடுகளில் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பில் மௌனம் சாதிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. சில நாடுகள் இலங்கைக்கு கட்டளையிடுவது இலங்கை தமது ஆட்சியின்கீழிருக்கும் காலணித்துவ நாடென்ற எண்ணக்கருவிலாகும். ஒட்டுமொத்தத்தில் இக்காரணங்களுக்காக இலங்கை மனிதஉரிமை தொடர்பிலான மேற்பார்வை காரியாலயத்தை விரும்பவில்லை அல்லது எதிர்பார்க்கின்றது. எவ்வாறிருப்பினும் ஐக்கிய நாட்டின் மனிதஉரிமை கவுன்சிலின் அமர்வின் முடிவின்போது இலங்கைக்கெதிராக எவ்வித தீர்;மானமும் முன்வைக்கப்படவில்லை. இதற்குப்பதிலாக மனிதஉரிமையினை மீறுவோருக்கு பாரிய தலைவலியாகவிருந்த லூயிஸ் ஆபர் தனது பதவியினை இராஜினாமா செய்தது அனைவருக்கும் திருப்தியான முடிவாக இருந்தது. இதற்கேற்ப இலங்கையினுள் மனிதஉரிமை தொடர்பிலான மேற்பார்வை அல்லது கண்காணிப்பு அலுவலகமொன்றை அமைப்பது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்குப்பின் நியமிக்கப்படும் உயர்தானிகர் ஆரம்பத்திலிருந்து தமது கடமையினை ஆரம்பிப்பார். இது இலங்கையில் மனிதஉரிமையினை மீறுவோருக்கு மிகவும் சந்தோசமான ஒரு செய்தியாகும். இதனால் மிகவும் பலன்மிக்க அரசு எனப்பேசும் மகிந்த சிந்தனைக்கு ஒரு சுகமான அனுபவமாகும். இலங்கை மனிதஉரிமை கவுன்சிலினுள் மிகவும் சிறந்த ஒரு இடத்திலுள்ளது என தம்பட்டமடிக்கக்கூடியதாக இந்நிலைமையிருக்கும்.

இருப்பினும் கடைசியில் கவனிக்கப்படவேண்டிய விடயமென்னவெனில் இலங்கை மனிதஉரிமைகள் கவுன்சில் அப்பாவியானதல்ல அதுவொரு பிரதிவாதியாகும். அவ்வாறாயின் பிரதிவாதிக்கெதிராக செயற்பட ஒரு முடிவெடுக்க கவுன்சிலினால் ஏன் முடியாமலுள்ளது. இந்தப் பிரதிவாதிக்கெதிராக வாக்களிப்பவர்களில் இவ்வாறான பிரதிவாதிகள் பலர் உள்ளனர். இவர்கள் எல்லோரும் அவர்களது நாட்டினுள் இலங்கையரசினைப்போன்று மனிதஉரிமையினைமீறும் பலகுறைகளுக்குமுள்ளாகியுமிருப்பவர்கள். பெயர்ரீதியாகக் குறிப்பிடுவதாயின் இலங்கையிருப்பது சிம்பாபே, சூடான, ஈராக், ஈரான, கொலம்பியா போன்ற முக்கியமானவர் மத்தியிலாகும். இதனால் கவுன்சிலினுள் இலங்கை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஜெனிவாவின் முகவராக இருக்கும் தயான் திலகரத்ன மிகவும் சவாலாகக் கூறுவது என்னவெனில் முடியுமானால் இலங்கைக்கு அபிப்பிராயம் சொல்லும்படியாகும் உண்மை. இந்த அசுத்தமான விசுவாசத்தன்மையினால் அவ்வாறானதொன்றை செய்யமுடியாமலுள்ளது.

இதனால் மனிதஉரிமைகளுக்கு இறைவன்தான் துணையென்று கூறிவிட்டு இருக்கவும் முடியாது. அசுத்தமான விசுவாசங்களை தகர்த்தெறிந்து அல்லது இருக்கும் தெரிவான விடயங்களுக்கு அப்பால் சென்று மிகவும் தந்திரோபாயமாக தெரிவுகளை தெரிந்தெடுப்பதில் சவால்களைப் பொறுப்பெடுக்க வேண்டும்.

மனிதஉரிமையினைப் பாதுகாத்தல் தொடர்பில் சர்வதேச வேலைத்திட்டம்


ஒரு நாட்டினுள் மனிதஉரிமையுடன் தொடர்புடைய பாரிய பிரச்சனைகள் உருவாகுவதும் பின்பு அவை மறைந்து போவதுமாக இருக்கும். இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலிருக்கும் முக்கியமான எண்ணக்கரு என்னவென்றால் சர்வதேச மனிதஉரிமை பிரிவு ஒன்று இலங்கைக்கு அவசியமா என்பதாகும். இன்று நாம் எதிர்பார்ப்பது மனிதஉரிமையினை பாதுகாப்பது சர்வதேச வேலைத்திட்டத்தின் அவசியத்தன்மையினைப்பற்றி இலங்கையரசு வேறுதரப்பினர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் சர்வதேச சமூகம் அதுதொடர்பில் கொண்டுள்ள கருத்துக்கள் என்பவற்றைப்பற்றி வாதமொன்றினை ஏற்படுத்தலாகும்.

குளிர்ச்சியான யுத்தகாலத்தின்போது உலகிலுள்ள நாடுகள் சோசலிசம் மற்றும் சோசலிசமற்ற விதத்தில் பிரதான இரண்டு பலம்வாய்ந்த பாசறைகளாகப் பிரிக்கப்பட்டது. சோசலிச நாடுகள் அரசகேந்திர நிலையமென்ற எண்ணக்கருவை கொண்டிருந்தனர். சோசலிசமற்ற (மேற்கத்தேய) நாடுகள் சர்வதேச கொள்கையொன்றினைப் பின்பற்றினர்.
சோசலிச அரசிற்கேற்ப சர்வதேச சமூகத்தின் கடமை என்னவென்றால் ஒரு நாட்டினுனுள்ள சட்ட முறைமைகளுள் பொதுமக்களுக்குத் தேவையானளவு சந்தர்ப்ப வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அராஜக அரசினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டுப்பாட்டுரீதியிலான ஏற்றுக்கொள்ளலை ஏற்படுத்துதல். அதாவது எம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதஉரிமைகள் எவையென்பது தொடர்பில் பரந்தளவிலான சட்டத்தை அல்லது திரளானதிட்டம் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்குவரல். சர்வதேச சமூகத்தினூடாக அவ்வேற்பாட்டை எடுப்பதன்மூலம் ஒவ்வொரு அரசின்மூலமும் அங்கு குறிப்பிடப்பட்ட பரந்தளவிலான சட்டங்களை ஒவ்வொருவருக்கும் தகுந்தவகையில் ஏற்று நடத்தல் வேண்டும். அராஜக அரசின்மூலம்தான் இது செய்யப்படுகிறது. உரிமைகள் என்றால் என்ன, ஆட்சிப் பலத்தை செயற்படுத்தும் அதிகாரிகளின் பலமென்ன, உரிமை மீறப்படும்போது உதவிகோரும் மக்களுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ள கோவை முறையென்ன என்பன தேசிய சட்டத்தினூடாக விளங்கப்படுத்தப்படும். உதாரணமாக இலங்கையின் அரசியலமைப்பில் 10-14வது சரத்துகளில் அரசினால் அடிப்படை உரிமைப பகுதியில் சட்டத்தின்மூலம் ஏற்படுத்தக்கூடிய எல்லைகளென்பது தொடர்பிலும் 17உம் 126வதும் சரத்துக்களில் ஒரு நபரின் மேற்குறிப்பிட்ட உரிமைகள் மீறப்படுமாயின் மேற்கொள்ளக்கூடிய விதிமுறைகள் அல்லது கோவைகள் எவையெனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தின்போது சரியான விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு செய்யக்கூடியவை எதுவும் கிடையாது. அராஜக அரசின்மூலம் தீர்மானங்களெடுக்கப்படும,இ இருப்பினும் அராஜக அரசின்மூலம் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவது எவ்வாறெனின் மனிதஉரிமைகளை பின்பற்ற வேண்டுமென்பதுடன் அதனை செயற்படுத்த வேண்டிய விதம் எவ்வாறென்பது தொடர்பில் (சர்வதேச விதிகளினால் உருவாக்ப்பட்ட எல்லையினுள்) இருந்தே அவற்றை செயற்படுத்த வேண்டும். இது ரிலே விளையாட்டின் போது அதன் கம்பை மற்றைய நபரிடம் கொடுப்பதைப் போன்றது.

இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகம் தேசிய தொழிநுட்பத்தை நோக்கி உரிமைகளைப் பாதுகாக்கும் நடை கம்பை மாற்றும். சோசலிச நாடுகளைக் கருத்திற்கொள்வோமாயின் இங்கு விளங்குவது என்னவென்றால் ஒரு நாட்டை வற்புறுத்துவதென்பது வேறொரு அரசினாலோ அல்லது சர்வதேச சமூகத்திற்கேற்ற ஒரு விடயமல்ல. அவ்வாறு செய்யப்படுமாயின் அது சர்வதேச சட்டத்தின் முக்கிய கொள்கைகளிலொன்றான “அரசினது உள்ளகச் செயற்பாடுகளில் தலையிட்டு அச்செயற்பாடுகளில் ஈடுபடத் தடைசெய்தலென்ற எண்ணக்கருத்திற்கெதிரானதாகும்”. இக்கொள்கையின் அவசியமற்ற நோக்கமென்னவென்றால் அரசின் அராஜக தன்மையினை பாதுகாத்தலாகும்.

வேறு நாடுகளின் செயற்பாடுகளில் தலையிடுவதைத் தடுத்தல் அதிகாரத் தன்மையான விதிக்குள்ள ஒரேயொருமுறையென்பதுடன் மனிதஉரிமை மீறப்படுதல் உலக சமாதானத்திற்கு பயமுறுத்தலாக உள்ளவிதத்தில் மிகவும் பாரதூரமாகவும் ஒழுங்கு முறையாகவும் நடப்பதென்றால் மாத்திரம் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகம் தலையிட உரிமையினைப் பெறும். அங்குள்ள நிலையினை கலந்தாலோசிக்கும்போது ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்திற்கு முடியும். உதாரணமாக அவர்களால் மீட்கப்பட்ட அல்லது பிடிக்கப்பட்ட அராபி நாடுகளில் செய்யப்பட்ட மீறல்களினால் ஈஸ்ரேல் தடைவிதித்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சோசலிச நாடுகள் சர்வதேச சமூகத்தின் தலையீட்டினை அங்கீகரிக்கும். இலங்கையில் இன்றைய நிலைமை தொடர்பில் ஏனைய சோசலிச நாடுகள் தலையிடும் அதிகாரக் கொள்கையினை ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் அவர்களிடம் இலங்கை தொடர்பிலிருக்கும் விசேட விருப்பமோ தெளிவோ அதற்கான காரணமல்ல. அவ்வாறு செய்வது மீண்டும் அவ்வரசுகளின் கோவை அல்லது நடைமுறையினை அச்சுறுத்தலுக்கு இட்டுச்செல்லும். இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கையின் நிலைமை சீனாவின் செயற்பாட்டினைவிட மேலோங்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் இலங்கையின் விடயங்களில் தலையிட அல்லது அதிகாரமுடைய கொள்கைகளினை ஏற்றுக்கொள்வர்.

இலங்கையில் மனிதஉரிமையினை பாதுகாத்தல் தொடர்பிலுள்ள செயற்பாடுகளில் இவ்வாறான ஒரு நோக்கத்தை பின்பற்றுகின்றது. அவ்வாறே குறிப்பிட்ட சில சோசலிச நாடுகள் சர்வதேச சமூகத்தின் தலையிடலுக்கெதிராக முன்வைத்த கருத்துக்களும் இவையே.

அதேபோன்று பல மேற்கத்தேய நாடுகள் விசேடமாக ஸ்கன்டினேவியா மற்றும் பல மேற்கத்தேய ஜரோப்பியாவை எடுத்துக்கொண்டால் அவர்களின் கருத்து என்னவென்றால் நவீன அரசு ஒருவகையான கண்ணாடி வீடு என்பதாகும். எல்லோராலும் உள்ளே என்ன நடக்கின்றது என்பதனை வெளியிலிருந்து பார்க்கக்கூடியதாகவிருக்கும் என்பதுடன் அவை சர்வதேச தராதரத்திற்கேற்ப உள்ளதா என்பதனை வெளியிலிருந்து நோக்கக்கூடியதாக இருக்கும். மேற்கத்தேய நாடுகளை பொறுத்தமட்டில் வெளிப்பாடான மேற்பார்வையினை பல வழிகளில் மேற்கொள்ளமுடியும். அதிலொருமுறை அரசு தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசப் பின்னணிகளை ஏற்று நடக்கின்றனவா என்பதனை உறுதிசெய்வதன் நோக்கத்தின் சர்வதேச மேற்பார்வை தொழிநுட்பத்தினை உருவாக்குதலாகும்.

சில மேற்கத்தேய நாடுகளின் எண்ணக்கருவின்படி மனிதஉரிமை தொடர்பிலான சர்வதேச மட்டத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலும் அப்பொறுப்பை தேசியமட்டத்தில் செயற்படுத்துதல் தொடர்பில் சிறந்தவொரு வேறுபாட்டை வெளிப்படுத்துதலுமாகும். அதற்கான காரணம் மிகவும் எளிமையானது. அதாவது வெயிப்படையாக உருவாகும் சர்வதேசப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கு அரச நிறுவனங்கள் வழமையாகத் தோல்வியடையும். அவ்வாறு இல்லாவிடின் சர்வதேசப் பொறுப்புக்களை தேசிய விதிகளாக மாற்றியமைக்கும் பொறுப்புடைய தேசிய நிறுவனங்கள் இப்பொறுப்பை தேசிய அராஜக தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தும். இருப்பினும் சர்வதேச விதிகளின் பலன் என்னவென்றால் அவ்விதிகளை ஏற்றுக்கொள்வதற்கு உறுதுணையாகவுள்ள ஓர் அரசின் பொறுப்பாகும். அரச ஆட்சியாளர்கள் வேறு வழிகளில் தமது பலத்தைக் கொண்டுசெல்வதற்கு பயன்படுவது நாட்டின் பொதுமக்களையாகும். இதனால் அரச தேவைப்பாடாக இல்லாமல் மக்களின் தேவைக்காக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சர்வதேச தரத்தை சிறந்தமுறையில் பின்பற்றுகின்றனர் என்பதனை உறுதிசெய்யக்கூடியது சர்வதேச சமூகத்தின் கண்களால் மட்டுமே.

மனிதஉரிமையினை பாதுகாப்பதற்கு சர்வதேச ரீதியான அவதானிப்பு இலங்கைக்கு அவசியமா?


மனிதஉரிமையினைப் பாதுகாப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு நிலையமொன்றும் புலக் காரியாலயமும் இலங்கையினுள் நிறுவுதல் அவசியமென்று ஏன் கூறுகின்றீர்கள்?

இது சம்பந்தமாக முயற்சியுள்ள தேசிய மற்றும் சர்வதேச நபர்கள் நிறுவனங்கள் நீண்டகாலமாக கூறுவது என்னவென்றால் இலங்கையில் மனிதஉரிமை தொடர்பான பாரதூரமான நிலை காரணமாக சர்வதேச அவதானிப்பு மையமொன்று அவசியமென்று எழுந்துள்ளது என்று கூறுகின்றனர் குறிப்பாக மனிதஉரிமை பாதிக்கப்படும் அளவும் தன்மையும் மனிதஉரிமை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய நிறுவனங்களில் திறமை ரீதியான மட்டுப்பாடுகள் யுத்தப்பிரதேசங்களிலிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கிருக்கும் தேவைப்பாடுகள் என்பவற்றை நோக்குமிடத்து அவ்வாறான ஒரு நிறுவனம் அவசியமாகின்றது. குற்றஞ் செய்பவர்கள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாகாது நீண்டகாலமாக தண்டனைகள் எதுவுமின்றி இருப்பதும் அரச நிறுவனங்களைப்போன்று எல்.ரி.ரி.ஈயினாலும் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பவர்களுக்கேற்படும் அச்சுறுத்தல்கள் மேலோங்கிவருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு கண்காணிப்பு நிறுவனத்தின் அவசியப்பாடு நன்கு புலப்படுகின்றது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேசிய தொழில்நுட்பமுறைகள் தோல்வியடைந்துள்ளது என்று ஏன் கூறுகின்றீர்கள்? இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவினால் இக்கடமையினைச் செய்ய முடியாதா?

நகரத்தைவிட்டு வெளியில் குறிப்பாக யுத்தம் இடம்பெறும் இடங்களில் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு இருக்கும் கடப்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மனிதஉரிமை மீறல்களை சிறந்த முறையில் விசாரணை செய்வதற்கோ குற்றவாளிகளை சட்டத்தின்முன் கொண்டுவருவதற்கோ பொலிஸ் மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளன. குற்றவாளிகள் நீண்டகாலத்திற்கு தண்டனைகள் ஏதும் அனுபவிக்காது இருப்பதற்கான நிலவரமொன்று உருவாகியுள்ளது. எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டிற்குளிருக்கும் பிரதேசங்கள் எவ்விதத்திலும் சுயாதீனமாக மனிதஉரிமை நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கு இடங்கொடுக்காதுள்ளதுடன் நாட்டில் குற்றவியல்கோவையினை அப்பிரதேசங்களில் செயற்படுத்துவதற்கும் எல்.ரி.ரி.ஈ இடங்கொடுப்பதில்லை. மேற்குறிப்பிட்ட கொடூரமான செயற்பாடுகளின் காரணமாக சிவில் சமூகத்தினரிடையே பயம் மற்றும் பாதுகாப்பற்ற நிலவரம் உருவாகியுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்பவர்களும் சாட்சியாளர்களும் பாதுகாக்கப்படுவதற்கான வழிமுறையொனறில்லாத காரணத்தினால் பாதிப்புக்குட்படும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸிற்கோ வேறு உயர் அதிகாரிக்கோ தனது பிரச்சனைகளைக்கூறுவதற்குத் தயங்குகின்றனர். காரணம் அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்ற பயமேயாகும். விசேட மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கும் சரியான வழிமுறைகளை கற்பிப்தற்கும் இம் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு சக்தி இருப்பினும் தொடர்ச்சியாக அச்சக்தியினை செயற்படுத்துவதற்கு ஆணைக்குழுவால் முடியாதுள்ளது. இதற்கான பிரதான காரணம் அரசு மற்றும் எல்.ரி.ரி.ஈ இருவரும் ஆணைக்குழுவிற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்காமையேயாகும். கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட விபரங்களை கண்காணிக்கும் செயற்திட்டத்தின் பின் டிசம்பர் 2003இல் அறிக்கையொன்று வெளியிட்ட ஆணைக்குழு இவ்வாறு கூறியிருந்தது. “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதஉரிமைகளின் நிலையினை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கோ செயற்படுத்துவதற்கோ திறமையுள்ள தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஒன்றேனும் இயங்கவில்லையென்பது எனது நம்பிக்கையாகும். அதற்கான சக்தி எந்தவொரு நபருக்கோ நிறுவனத்திற்கோ இல்லை”. இவ்விடயம் ஆணைக்குழுமூலம் சித்திரை 2005இல் மேற்கொண்ட ஓர் செயற்திட்டத்தின்பின் மீண்டும் உறுதியாக உள்ளது. எல்.ரி.ரி.ஈயின் கட்டுப்பாட்டிற்குளுள்ள பிரதேசங்களில் மனிதஉரிமை ஆணைக்குழு செயற்படுவதில்லை என்பதுடன் அவ்வாணைக்குழுவிற்கு அப்பிரதேசத்திற்குள் நுளைவதற்கும் முடியாதுள்ளது.

மனிதஉரிமைகள் மீறப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மனிதஉரிமை தொழில்நுட்பங்கள் தோல்வியடையும் சமயத்தில் சர்வதேச மனிதஉரிமைகள் மேற்பார்வை நிலையத்தினால் செய்யக்கூடியது என்ன?

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து பெற்றுள்ள அனுபவங்களுக்கேற்ப இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச மற்றும் ஓரங்காட்டாத (பாரபட்சம் காட்டாத) மனிதஉரிமை மேற்பார்வை நிலையத்தினால் மிகமுக்கிய பணியொன்றினை மேற்கொள்ளக்கூடியதாகவிருக்கும். அவ்வாறானதொரு நிலையத்தினால் பொதுமக்ககையும் பாதுகாக்கமுடியும். சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனிதஉரிமை மீறல்களின் உண்மை நிலையினை அறிந்துகொள்வதுடன் அதற்குமேலாக சிவில் சமூகத்தினருக்கு உதவமுடியும். அதுமாத்திரமன்றி சமூகத்தினுள் யுத்தியை ஏற்படுத்துவதுடன் ஏனைய தேசிய மனிதஉரிமைகள் தொழில்நுட்பங்களை மீண்டும் பலப்படுத்த உதவமுடியும்.

கடந்த காலங்களில் அரசுக்கும் எல்.ரி.ரி.ஈற்குமிடையில் நிலவிய யுத்தநிறுத்தம் சிலகாலம் செயற்படாதிருந்து தற்பொழுது முற்றுமுழுதாக செயற்படாதிருக்கும் சந்தர்ப்பத்தில் சமாதான உடன்படிக்கை இல்லாதிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச மனிதஉரிமை மேற்பார்வைகள் வருகைதருதல் யதார்த்தமாகுமா?
யுத்தநிறுத்த உடன்படிக்கை இல்லாத சந்தர்ப்பத்திலும் அரசுக்கும் எல்.ரி.ரி.ஈஇனருக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை உருவாவதற்கு முன்னதான காலப்பகுதியிலும் அவ்வாறானதொரு மேற்பார்வை நிலையத்தின் தேவைப்பாடு அவசியமாக இருந்துள்ளது. அவ்வாறானதொரு நிலையத்திற்கு தரப்பினரிடையே இல்லாதுபோன நம்பிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவமுடியும். யுத்தம் மேலும் மேலோங்குவதைத் தடுப்பதற்கும் அரசியல் ரீதியில் கலந்துகொள்ளவும் வழிசமைத்துக் கொடுக்கமுடியும்.

உயர்தானிகர் அலுவலகமொன்றை இலங்கை நிறுவவேண்டும் என்பதற்கான யோசனையின் போது இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?

இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவெனில் அவ்வாறானதொரு அலுவலகத்தை இலங்கையில் நிறுவுதல் ……….. தீங்குவிளைவிக்கும் என்பதனால் இதற்கானதேவைப்பாட்டை சிறிதளவேனும் ஏற்றுக்கொள்ள இலங்கையரசு மறுக்கின்றது. இதற்குப்பதிலாக தற்பொழுது இயங்கிக்கொண்டிருக்கும் தேசிய நிறுவனங்களின் திறமையினை வளரச்செய்வதற்கான தொழில்நுட்ப உதவியினை வழங்குவதற்காக அரசு ஐக்கியநாடுகள் ஸ்தானத்தின் உதவியினை கேட்டுள்ளது. இதற்கேற்ப ஐக்கியநாடுகளின் இணைப்பின் கீழியங்கும் மனிதஉரிமை தொடர்பிலான சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் 2004ல் இருந்து இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
மனிதஉரிமைகள் தொடர்பிலான உயர்தானிகர் அலுவலகத்தை இலங்கையின் தலைநகரத்திலும் ஏனைய பிறபிரதேசங்களிலும் நிறுவ இலங்கை அரசின் அனுமதி அவசியமா?
அனுமதியினைப்பெற வேண்டும். அது நிறுவப்படும்போது அரசிற்கும் உயர்தானிகர் அலுவலகத்திற்குமிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு அதன் அடிப்படையிலேயாகும்.

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் உயர்தானிகர் காரியாலயத்தின் பிரதான காரியாலயம் இலங்கையில் நிறுவப்பட்டால் அதன் செயற்பாடு எவ்வகையில் அமைந்திருக்கும்?

அவ்வாறானதொரு சர்வதேச மேற்பார்வையாளர் அலுவகத்தின் சுபாவம் தீர்;மானிக்கப்படுவது அரசு ஜக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் உயர்தானிகர் போன்றோகளுக்கிடையில் கைச்சாத்திடப்படும் ஒப்பந்தத்தில் தங்கியுள்ளது. அவ்வாறானதொரு மேற்பார்வை நிலையம் ஒன்று காணக்கிடைத்தலென்பது மனிதஉரிமை மீறல்களை தடுக்கஉதவும். மனிதஉரிமை மீறல்களுக்கான எதிராக அனைத்துத்தரப்பினரும் உடனடியாக மேற்கொள்ளும் வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுதல் போன்ற செயற்திட்டத்தினூடாக அந்நிலையம் தனது பதிலடியினை கண்டுகொள்ளும். அதற்குமப்பால் நீண்டகால அபிவிருத்திகள் தேசிய மனிதஉரிமை நிறுவனங்களின் திறமையினை வளர்ச்சி செய்தல் என்பனவையும் இதனூடாக எதிர்பார்க்கப்படலாம்.

ஒரு மேற்பார்வை நிலையம் செயற்படுவது அனேக மேற்பார்வையாளர்கள் இயங்கும் சர்வதேச நிறுவனம் போன்றதா?

இல்லை. எல்லாவகையான மேற்பார்வை அலுவலகங்களாலும் அரச மற்றும் அரசசார்பற்ற தேசிய மனிதஉரிமை செயற்பாட்டாளர்களின் வேலைசெய்யும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிவில் சமூகம்இ அரச நிறுவனங்கள்இ ஐக்கியநாட்டு முகவர் அலுவலகங்கள்இ சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள் விசேட பிரதிநிதிகளிடையே ஒரு இணைப்புப் பாலமாக செயற்பட இது உதவும்.

நல்லது மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை உருவாகினால் இவ்வாறானதொரு அலுவலகத்தின் அவசியமென்ன?

நிச்சயமாக யுத்தம் இடம்பெறும் சிலநாடுகளில் சமாதான பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமான யுத்தத்தில் ஈடுப்படுள்ள தரப்பினர்கள் மனிதஉரிமையினைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் பங்கினை அவர்களது சமாதான உடன்படிக்கையில் குறிப்பிடுவர். அவ்வாறும் இல்லாவிடின் பிறிதொரு மனிதஉரிமை உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு அவ்வுடன்படிக்கைக்கேற்ப செயற்படுகின்றனரா என அவதானிப்பதற்கு ஜக்கியநாடுகளின் அமைப்பிற்கு அழைப்பு விடுப்பர்.

மேற்பார்வை காரியாலயங்கள் அமைப்பது தொடர்பில் பேசும்போது அதன் சுயாதீனதன்மை பற்றி பல்வேறுவிதமான கேள்விகள் எழுகின்றது. மிகவும் நம்பிக்கையானவகையில் தனது கடமைகளைச் செய்வதற்கு அவ்வாறானதொரு அலுவலகத்திற்கு அவசியமான விதிமுறைகள் என்ன?

யுத்தத்தினுள் சிக்கியுள்ள அல்லது யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களாலும் மீறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விடயங்களை சேகரிப்பதற்கு அதற்கு முடியுமாக இருக்கும். அதேபோன்று நாட்டின் சகல பிரதேசமும் அத்தேடுதலில் அடங்கவேண்டும். எல்.ரி.ரி.ஈஇன் கட்டுப்பாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்குள்ளும் நுழைவதற்கு அதற்கு முடியுமாக இருக்கவேண்டும். அதேபோன்று அரச நிறுவனங்கள் தொடர்பில் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அடுத்த தரப்பினர் தொடர்பில் நுழையும் திறமை அதற்குமேலாக இருக்கவேண்டும். எந்தவொரு நபருடனும் சுதந்;தரமாக மற்றும் தனித்துவமாக கலந்துரையாட அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் சகல தரப்பினரின் இடமிருந்தும் விடயங்கள் சேகரிப்பதற்கும் ஒருங்கிசைவான ஒப்பந்தமொன்றின்மூலம் மேற்பார்வை அலுவலகத்திற்கு அனுமதி வழங்கியிருத்தல் அவசியமானதாகும். நீண்டகால அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்காக தேசிய மனிதஉரிமை நிறுவனங்களின் அபிவிருத்தி செய்வதற்கும் தொழில்நுட்ப ஒத்தாசையினை வழங்குவதற்கும் அதற்கு பலமிருக்க வேண்டும். அதேபோதன்று மனிதஉரிமை நிறுவனங்களுடனும் சிவில் சமூகத்துடனும் சுதந்திரமாக தொடர்புகொள்ள அதற்கு இயலுமாக இருக்கவேண்டும். பிரசித்திவாய்ந்த பிரசுரங்கள் மற்றும் அறிக்கைகள் என்பனவற்றை வெளியிடுவதற்கும் மனிதஉரிமை உயர்தானிகர் காரியாலயத்திற்கு தனது அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கும் இவ்வாறான மேற்பார்வை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கவேண்டும்.