Wednesday, October 8, 2008

டேய் நாங்களும் மனிதர்கள்தான்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது அவரது பிரதான கொள்ளை அடிமைத்தனத்தை ஒழிப்பதாகும். இலிங்கனின் எதிர்த்தரப்பு நீதியரசராக இருந்தவர் டக்லஸ் என்பவராவார். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக செயற்பட்ட இலிங்கனின் கருத்துக்கு இவர் எதிர்ப்பாக இருந்தார்.

அடிமைத்தனத்தின் பௌதீக தோற்றம்

எண்ணக்கருஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களுள் பலர் அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்த விவசாய நிலங்களில் வேலைசெய்வதற்காக விவசாயிகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்வதென்பது கிழக்கமெரிக்காவின் பாரிய விவசாய நிலங்கள் அதன் வாழ்வாதாரங்களை இழப்பதென்பதாகும். இதற்கப்பால் அம்மக்கள் சுதந்திரக்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டதுடன் கிழக்குப்பிராந்தியத்தில் பொதுமக்களின் தராதரத்தில் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த விடயமென்னவெனில் சுதந்திர ஆபிரிக்காவின் அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலேற்பட்ட வளர்ச்சியாகும். இது அடிமைத்தனத்தினை மேலும் மேலோங்கச்செய்தது.

அடிமைத்தனத்தினை ஒழிப்பது தொடர்பிலான யோசனையின் பௌதீக எண்ணக்கருவை வெளியிட்டது வடபகுதி விவசாய மக்கள் முகங்கொடுத்த பிரச்சனையாகும். அடிமைத்தனமென்பது “சட்டரீதியானதாக” இருப்பினும் அம்மனிதாபிமானமற்ற வாழ்க்கைக்கோலத்தின் கொள்கைகளின்கீழ் மேற்கொண்டும் வாழ்வதை எதிர்த்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் அவர்களது உயிர்களைக்கூட மதியாது அடிமைகளாக வைத்திருப்பவர்களது பிடிpயிலிருந்து தப்பி வடபகுதிக்குச் சென்று குடியேறுவதற்கான காரணம் இதுவாகும். இதன் காரணமாக வடபகுதிகளில் மக்களின் செறிவு விஷேடமாக நகரப்பகுதிகளில் பொதுமக்களின் செறிவு அதிகரித்ததுடன் ஆபிரிக்க அமெரிக்கர்கள் போன்ற சட்டவிரோத குடிமக்கள் சேவை குறைந்த ஊதியத்துடன் பெற தொழில்வழங்குனர்கள் முன்வந்ததால் வெள்ளையினத்து அமெரிக்கர்களை தொழிலுக்கமர்த்துவதில் கட்டுப்பாடொன்று நிலவியது அல்லது குறைவொன்றைக் காணக்கூடியதாக இருந்தது. அடிமைத்தனம் சட்டரீதியாக இருந்த சந்தர்ப்பத்தில் தப்பியோடிவந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் சட்ரீதியானவர்களாக பதிவுசெய்யப்பட முடியாமலிருந்ததன் காரணத்தினால் அடிமைத்தனத்தையொழிப்பது தொடர்பில் சட்டங்கொண்டுவரப்படல் அவசியமானதாகும்.

பரிசுத்த எண்ணக்கரு

இருப்பினும் இவ் பௌதீக எண்ணக்கருவிற்குப்பதிலாக இவ்விவாதத்தில் பரிசுத்த எண்ணக்கருவும் நிலவியது. ஆபிரகாம் லிங்கனின் விவாதமென்னவெனில் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பில் குறிப்பிட்டதைப்போன்று “அனைத்து மக்களும் சமமென்பதையும்இ இதனால் சமமாக கவனிப்புக்கும் உரித்துடையவர்களாவர்” என்பதனையும் விவாதித்திருந்தார். இவ்வாறு குறிப்பிட்டுடிருப்பதனால் சுதந்திர மக்கள் மற்றும் அடிமைகளென்றவகையில் இரு பிரிவினரை நடத்துதல் அசாதாரணனெ;பதாகும் என்பதுடன் பிழையெனவும் வலியுறுத்தினார். அனைவரும் சமமான விதத்தில் படைக்கப்பட்டுள்ளனரென்பது கிறிஸ்தவ மதத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு படிப்பினையென்பதனால் இவ்வாதம் மக்கள் மத்தியில் பிரபல்யமடையத் தொடங்கியது.
தற்போது எதிர்த்தரப்பை ஆதரிப்பவரான டக்ளஸ் பாரிய சிக்கலினை எதிர்நோக்கினார். “அனைத்து மக்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்ற எண்ணக்கருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இவரால் முடியாதுள்ளது. மறுபுறத்தில் இது அரசியலமைப்பை நிர்மாணித்தவர்களால் குறிப்பிட்ட விடயமாகும். (இலங்கை போன்றல்ல அமெரிக்க அரசியலமைப்பை மீற ஒருவரும் முன்வருவதில்லை அல்லது ஒருவருக்கும் தைரியமில்லை. மறுபுறத்தில் அது கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கொள்கையினை கற்றுக்கொடுப்பதாகவுள்ளது.

மாவீரரின் பிரச்சனை

இதன்தோற்றம் எவ்வாறெனின் எலார அரசைத் தோற்கடித்து அனுராபுரத்தைக் கைப்பற்றி இலங்கையை ஒருவரது ஆட்சியின்கீழ் கொண்டுவந்து துடுகமுனு அரசன் தமது யுத்தத்தினால் இறந்த மக்களை நினைவுகூர்ந்து வெறுப்பேற்பட்டதன்பின் அவ்விடத்திற்கு வந்த மாவீரர் ஏற்பட்ட குழறுபடியைப் போன்றது. பௌத்தசமயத்தின் கற்பித்தலின்படி மனிதர்களைக் கொலைசெய்வது பாவமல்ல என்று எவராலும் குறிப்பிட முடியாது. இது நற்பண்புக் கொள்கையாகும். இருப்பினும் மறுபுறத்தில் “சிங்கள இனத்தவர் பௌத்த கொள்கையின் பிரகாரத்திற்காகவும்” போர்செய்து வென்ற அரசர்கள் வாய்மணக்க வைக்கவும் முடியாது என்ற விடயத்தை அல்லது கருதுகோளை மறுக்கமுடியாது.

நீதியரசர் டக்ளஸ் இச்சந்தர்ப்பத்தில் செய்ததென்னவெனில் மாவீரர் உள்ளிட்ட இவ்வாறான சந்தர்ப்பத்திற்கு முகங்கொடுத்த வேறு பலர் இவ்வாறான சந்தர்ப்பத்திலெடுக்கும் வழிமுறைகளை பின்பற்றியமையேயாகும்.

டக்ளஸ் குறிப்பிட்டிருந்ததாவது அரசியலமைப்பில் சகலரும் சமமானவர்களென்று குறிப்பிட்டிருப்பது தம்மைப்போன்ற வெள்ளையினத்தவரை அன்றி கறுப்பினத்து அடிமைகளையல்ல. இதுதான் அரசியலமைப்பை நிர்மாணிப்பவர்களுக்கு பொறுப்பாக அல்லது சொந்தமாக இருந்தே அரசியலமைப்பை உருவாக்கியவர்களுலொருவரான பேவர்சனை எடுத்துக் காட்டினார். அடிமைகளும் சாதாரண மக்களைப் போன்று சமமானவர்களென்றால் பேவர்சன் அடிமைகளின் சொந்தக்காரன் அல்லது பொறுப்பாளனாக செயற்படமுடியாது. இவ்விவாதத்தின்போது ஆபிரகாம் லிங்கள் குறிப்பிட்டதாவது அரசியலமைப்பை நிர்மாணித்தவர்கள் சகலரும் சாமானவர்கள் உன்று குறிப்பிட்டிருப்பது தற்பொழுது உலகில் எல்லோரும் சமமானவர்கள் என்று தெளிவாகத் தெரியும் பொய்யினை ஏற்றுக்கொண்டலாகாது. மறுபுறத்தில் அரசியலமைப்பின் சீர்திருத்தத்தின்மூலம் ஒரு மாயாஜாலம் சக்தியில் சகல மக்களும் சமமானவர்களென்று குறிப்பிடவில்லை. அவர்கள் செய்தது சகலரும் சமமானவர்களென்ற உரிமையினை சீர்திருத்தமொன்றின்மூலம் அறிவிப்பதாகும். உரிமையினை முதலில் வலியுறுத்தியதனூடாக அல்லது குறிப்பிட்டதனூடாக அதனை பலாத்காரம் செய்தல் கூடியளவு விரைவில் அடுத்தபடியாக செய்யப்படல்வேண்டும். சமத்துவத்தை உண்மையாகவே ஈட்டுவதாயின் நாங்கள் மிக நீண்டபயணஞ் செய்யவேண்டியிருந்தது. அதனை ஒருபோதும் பூரணமாக அடையமுடியாது போகலாம். இருப்பினும் அதனை அண்மித்துச்செல்லக்கூடியதாக இருக்கும். சமத்துவத்தையடைதலென்பது ஒரு போராட்டமாகும்.

அடிமைத்தனத்தை ஒழித்தலும் சிவில்யுத்தமும்

ஜனாதிபதி தேர்தலில் ஆபிரகாம் லிங்கன் வெற்றியடைந்தார். அவர் அடிமைத்தனத்தையொழித்து சமத்துவத்தையடைய செய்த பயணத்தின்போது இன்னுமொரு படிமுறையினை முன்னெடுத்துவைத்தார். இருப்பினும் எதிர்ப்பு இல்லாமலில்லை. கிழக்கு இராச்சியம் இத்தீர்மானத்திற்கெதிராக ஐக்கிய சமஸ்டி முறையிலிருந்து விலகி றிச்மன்ட் இராச்சியத்தை தலைநகராக்கி கூட்டாட்சிமுறையினை உருவாக்கி தழுவிய சங்கத்தை உருவாக்கினார். வுடக்கு மற்றும் கிழக்கு இராணுவத்தினரிடையே அமெரிக்க சிவில் யுத்தம் ஆரம்பித்தது. இச்சந்தர்ப்பத்தில் அடிமைகளாக இருந்த ஆபிரிக்க அமெரிக்கர்கள் யுத்தத்தின்போது ஆயுதமேந்திப் போராடினர். இறுதியில் கிழக்குக் கூட்டாட்சி இராணுவத்தினரை தோற்கடித்து வொஷிங்டன் வெற்றியடைந்தது. அடிமைத்தனத்தை முடிவுக்குக்கொண்டுவர சட்டங்கள் இயங்கத்தொடங்கின அல்லது சட்டங்கள் செயற்பட்டன.

இருப்பினும் இவற்றினால் சமத்துவம் உருவாக்கப்படவில்லை. அமெரிக்கப் பெண்கள் தேர்தலில் வாக்கிட மற்றும் சமமான உரிமைகளை அனுபவிக்க மேலும் நீண்ட காலத்திற்கு போராடவேண்டியிருந்தது. ஆபிரிக்க அமெரிக்கர்கள் சட்டத்தினால் சமத்துவத்தை அடைய மேலும் நீண்டபயணம் செல்லவேண்டியிருந்தது.

இன்றுவரை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சி ஆதரவாளரைத் தெரிவுசெய்வதில் முன்னணியில் தோள்கொடுத்து நிற்பவர்கள் அன்றிருந்த டக்ளஸ் இற்கேற்க மனிதர்களாகக் கருதப்படாத இரண்டு நபர்களாவர். ஹிலாரி க்கிளின்டன் வெள்ளையினத்துப் பெண்ணாவார். பரக் ஒபாமா ஆபிரிக்க அமெரிக்கரொருவர். இவர்கள் இருவருளொருவர் ஜனாதிபதித் தேர்தலில் வென்று ஜனாதிபதியானால் இது சமத்துவத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் இன்னுமொரு அத்தியாயமாகும். இருப்பினும் சட்டத்தினூடாக சமத்துவத்தையடைந்துள்ள பெண்களுக்கு லடினோவரிற்கு இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கர்களுக்கும் ஆசிய அமெரிக்கர்களுக்கும் உண்மை நிலையினையடைவதற்கு இன்னும் நீண்டபயணம் போராடிச்செல்ல வேண்டியிருக்கும்.

பணப்பலம்மிக்க அமெரிக்காவில் வாழும் பலபிரிவினர் சமத்துவத்தை உண்மையாகவே அடைந்துகொள்வதற்கும், அத்துடன் நாடுபூராகவும் வாழும் ஏழைப்பொதுமக்கள் சமத்துவத்தையடைவதற்கும் எதிர்காலத்தில் போராடவேண்டியிருக்கும். அவ்வாறானதொரு சமத்துவத்தையடையும்வரை உண்மையிலே சமத்துவம் சமூகத்தில் நிலவமாட்டாது. இருப்பினும் இவ்வுரிமை பிரசுரிக்கப்பட்டிருப்பதனால் தற்பொழுது செய்யவேண்டியது என்னவெனில் அவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்த அதாவது கனவை நனவாக்க போராடவேண்டியுள்ளது.

சமத்துவமென்பது சகலரும் சட்டத்தின்முன் சமமாகப் பாதுகாக்கப்படவேண்டுமென்ற மனிதஉரிமையாகும். ஐக்கிய நாட்டின் மனிதஉரிமை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதனை எல்லா நாடும் ஏற்றுக்கொண்டு அதனை தமது நாட்டு எல்லையினுள் நடைமுறைப்படுத்த சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யுமென்று வாக்குக்கொடுத்துள்ளது. இதனால் சமத்துவத்திற்குரிய உரிமையும் மற்றைய மனிதஉரிமைகளைப்போன்று காலத்தை மிஞ்சும் உரிமைகளாகும்.

Back to Home page...

No comments: