Wednesday, October 8, 2008

மீன் பிடிக்கும் குசல்ஹாமிக்கு கவுன்சிலின் நுழைவாயிலை முடிவிடவும்

மனிதஉரிமைகள் கவுன்சிலின் உறுப்புரிமைபெறும் அரசுகளைத் தெரிவுசெய்யும் தேர்தல் வைகாசி மாதம் 21ம் திகதி நியுயோர்க் நகரில் ஐக்கியநாடுகளின் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 47 ஆகும். அதில் உறுப்புரிமை பெறுவதாயின் ஒரு நாடு குறைந்தபட்சமேனும் 96 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். 2006ம் ஆண்டு தொடக்கம் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக இருந்ததுடன் அதன் உபதலைவராகவும் பணியாற்றியது.

வைகாசி மாதத்தில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தலின்போது உறுப்புரிமைநாடு தெரிவுசெய்யப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிருந்தது. இருப்பினும் இலங்கை உறுப்புரிமை நாடாக கடந்த இரண்டு வருடங்கள் தொழிற்பட்டது. இதன்போது எல்லா இனத்தவரும் மனிதஉரிமைகள் தொடர்ந்தேர்ச்சியாக மிகவும் பாரதூரமானவகையில் மீறப்பட்டதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. நாடுப+ராகவும் பல்வேறுதரப்பினர் (மக்கள்) வற்புறுத்தப்பட்டு கடத்தப்பட்டனர், கொலைசெய்யப்பட்டனர், காணாமற்போனர், சட்டரீதியற்றவிதத்தில் கைதுசெய்யப்படல் மற்றும் தடுத்துவைக்கபபடல் பல்வேறு கொடூர மற்றும் மனிதாபிமானமற்றமுறையில் நடாத்துதல் என்பவை வழமையில் பேசப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான மனிதஉரிமை மீறல்களை தடுத்துநிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை எடுக்கும்படி நாடடினுள்ளிருந்தும் மற்றும் சர்வதேசரீதியிலும் அழுத்தங்கள் இலங்கையரசிற்குக் கொடுக்கப்பட்டிருப்பினும் அரசு அவற்றை கவனிக்கவில்லை. மிகவும் தெளிவாகத் தென்பட்ட நிலையென்னவென்றால் வேண்டுமென்றே அரசு அக்கோரிக்கைகளை புறந்தள்ளியதென்பதாகும். அதுமாத்திரமல்ல மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்ற ரீதியில் குற்ற்ஞ்சாட்டப்பட்டவர்களுள் மிகவும் பாரிய எண்ண்pக்கையிலானோர் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டாலும் குற்றவாளியாக்கப்படடிரு;நதாலும் அதாவது சட்டத்தின் பிடிpயிலிருந்து தப்பி மிகவும் சுகமான வாழ்க்கையினை வாழ்கின்றனரென்பது தெளிவாகின்றது.



மனிதஉரிமை மீறல்களை ஆராய்வதற்காக நாட்டினுள் இயங்கும் மனிதஉரிமை ஆணைக்குழுக்களில் எவ்விதமான சுயாதீனத்தன்மையினையும் காணமுடியாதுள்ளதுடன் அவற்றின் தொழிற்பாடும் மந்தமாக இருந்ததென்பது எல்லோருக்கும் மிகவும் தெளிவாகத் தெரிந்த விடயமாகுமென்பதும் இது பாரிய பிரச்சனையாகவும் இருந்தது. பாரிய கொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகூட ஒரு வெள்ளை யானையின் நிலையினை ஒத்ததாக இருக்கின்றது. இவ்வாறிடம்பெறும் பாரிய மனிதஉரிமை மீறல்களுக்கு பரிகாரம் நாட்டினுள் கிடைப்பதில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. மனிதஉரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச மேற்பார்வை அலுவலகமொன்றினை நாட்டினுள் நிறுவுவது தொடர்பாக பல்வேறு மனிதஉரிமை தொழிற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தேவையினை எழுப்பியபோதும் அரசு அதுதொடர்பில் காட்டிய பாரிய எதிர்ப்புக் காரணமாக இன்றுவரைக்கும் எவ்வித பலாபலனையும் அனுபவிக்கமுடியாமலுள்ளது. இவ்வாறு மனிதஉரிமை தொடர்பில் எவ்வித மதிப்புமற்ற நாடு பாரியளவிலான மனிதஉரிமை மீறல்களை ஆசிர்வதிக்கும் ஒரு நாடு மேற்கொண்டும் மனிதஉரிமை கவுன்சிலில் அங்கம்வகிக்க வேண்டுமா? உலகம்பூராவும் மனிதஉரிமை வளர்ச்சியினை ஏற்படுத்த செயற்பாட்டு ரீதியில் எடுத்துக்காட்டாக இயங்கவேண்டிய கவுன்சிலின் உறுப்பினரொருவர் தமது நாளாந்தக் கடமைகளினால் அதனை மீறும்போது ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை தராதரங்களுக்கேற்படும் கதியென்ன? இன்னொருவகையில் கூறுவதனால் மீண்டும் கவுன்சில் உறுப்புரிமை இலங்கையரசிற்குக்கிடைத்தால் அதற்குரிய காரணம் தாங்கள் மனிதஉரிமையினை மதித்து செயற்படுவதுதானென தம்பட்டமடிக்குமென்பதுடன் தங்களைப் பாதுகாக்க (போர்வையொன்றை போர்த்துக்கொள்ள) செம்மறியாட்டைப்போன்ற (எருது) ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசிற்குக்கிடைக்கும். ஏதாவதொருவகையில் இம்முறை இலங்கையரசு கவுன்சிலின் உறுப்புரிமையிலிருந்து விலக்கப்பட்டால் மனிதஉரிமை தொடர்பில் சர்வதேசத்தின் வெறுப்புக்கும் பல பிரச்சனைகளுக்கும் ஆளாகுமென்பது தெளிவாகின்றது. இதனால் இலங்கையரசு தற்போதைக்கும் மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்புரிமையினை மீளப்பெறுவதற்கு கடும்முயற்சியினை ஆரம்பித்துள்ளது.



இந்தப் பின்னணியின்கீழ் மனிதஉரிமைகள் மற்றும் பல சிவில் சமூகங்கள் இலங்கையில் யதார்த்தத்தை விளக்கியுள்ளது. மீண்டும் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட வாக்களிப்பதென்பது ஐக்கிய நாடுகளின் மேன்மை தங்கிய கொள்கைகளை தராதரங்களை பகிடிக்கும் உள்ளாக்காவண்ணம் செயற்படும்படி சங்கத்திலுள்ள உறுப்புரிமை நாடுகளிடம் தனித்தனியாகவும் வௌ;வேறாகவும் கேட்கப்பட்டிருந்தது.



உங்களிடம் நாங்கள் மிகவும் பணிவுடன் கேட்பது என்னவெனில் இலங்கையினை இவ்வருடம் மீண்டும் உறுப்புரிமை பெறுவதற்கு துணைநிற்கவேண்டாம் என்பதாகும். எவ்வாறிருப்பினும் எங்களது நாட்டு சிவில் மக்களது உரிமைகள் மேலும் மீறப்படாமலிருக்க வழிசெய்யக்கூடிய முழுமொத்த சர்வதேச மேற்பார்வையின் கீழாகும். இதனால் மனிதஉரிமை சபைக்கு வாக்குகளை பரிசீலிக்கும் செயற்பாட்டின்போது நாட்டினுள் நிலவும் மனிதஉரிமைகள் தொடர்பான கவலைக்குரிய நிலைமை தொடர்பில் இலங்கையரசின் பொறுப்பினை காண்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் சங்கத்தின் சகல உறுப்புரிமை நாடுகளிடமிருந்தும் கேட்டுக்கொள்கின்றோம்.



இவ்வாண்டும் இலங்கை மீண்டும் தெரிவுசெய்யப்படாவண்ணமிருக்க வழிசெய்து கொடுக்கும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். அதாவது இலங்கைக்கு உறுப்புரிமை ஆதரவு வழங்கவேண்டாமென பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு செய்வதன்மூலம் இலங்கையரசிற்கு ஐக்கிய நாடுகளின் சங்கம் போன்றவற்றுக்கிடையிலான தேசிய நிறுவனங்களில் பங்காளராக மேலும் தொடர்ந்து செயற்படவேண்டுமானால் தமது கோவை செயற்படும் விதங்களை மாற்றியமைக்க உங்களது அரசுமூலம் முக்கிய செய்தியொன்று பரிமாறப்படுமென்பது தெளிவாகும். அரசியல் தேவைப்பாடொன்றில்லாமல் தொழிநுட்பஆதரவின்மூலம் மட்டும் இலங்கையின் மனிதஉரிமை நிலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

Back to Home page...

No comments: