Wednesday, October 8, 2008

எல்லா குற்றங்களுக்கும் மரணம்தான் தண்டனை

7ம் நூற்றாண்டில் ட்ரக்கோ என்பவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின்கீழ் எல்லா குற்றங்களுக்குமான தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அலைந்து திரிதல், மரக்கறி, பழங்களை களவாடுதல் போன்றவற்றுடன் கொலை செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்பொழுது சிறுகுற்றங்களுக்கும் பாரியகுற்றங்களுக்கும் மரணதண்டனை விதிப்பது பாரபட்சம் என்ற கருத்து எழுந்தபோது ட்ரக்கோ அதற்கு இவ்வாறு விளக்கமளித்தார்.


ட்ரக்கோ கூறிய விதம்


“சிறுகுற்றங்களுக்கும் மரணதண்டனையே உகந்தது. பாரிய குற்றங்களுக்கு மரணதண்டனையைவிட மேலான தண்டனை இல்லாதபடியினால் அக்குற்றங்களுக்கும் மரணதண்டனையே அங்கீகரிக்கின்றேன்”



மனிதனை சட்டத்தின்கீழ் கைதுசெய்வதற்கும், மாட்டை கொலைசெய்வதற்கு கொண்டுசெல்வதற்குமிடையில் தெளிவான வித்தியாசமுண்டு. லிபரல் அரசின்கீழ் (இலகுவான) இன்று வாழும் மனிதர்கள் ட்ரக்கோ காலகட்டத்தில் வாழ்ந்ததைவிட அதிஸ்டசாலிகள் என்று எண்ணுகின்றனர். ஒருவர் கைதுசெய்யப்படுவதும், தடுத்துவைக்கப்படுவதும் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதாகும். சுதந்திர சமூகத்தில் இவ்வாறு சட்டத்தின்மூலம் மட்டுமே செய்யமுடியும். அவ்வாறு இல்லாமல் சுதந்திரத்தை மட்டுப்படுத்துதல் என்பது உரிமையை கட்டுப்படுத்துவதாகும். இக்கருத்தின்படி தேவையற்றவிதத்தில் மனிதர்களை கைதுசெய்து தடுத்துவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் அரசினை விபரிப்பதாயின் அவ்வரசை சுதந்திர அரசு என்று கூறமுடியாது. அதனை அதிகாரமுடைய அரசு என்றே அழைக்கவேண்டும்.



புத்தகத்தில் உள்ளவிதம்



நேரத்திற்கு மழை பெய்கிறது, நேரத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது சுதந்திர, சோசலிச, ஜனனாயக அரசின் கீழ் வாழுகின்றோம் என்று எண்ணும் மக்களுக்கு அவர்களது உரிமையும் சிறந்ததாகவே தெரிகிறது. சட்டத்திற்கு அடிபணிந்தே இச்சுதந்திர அரசு செயற்படுவதாக இம்மக்கள் எண்ணுகின்றனர். ஒருவர் கைதுசெய்யப்பட காரணம் இருக்கவேண்டும். கைதுசெய்யப்பட்டவுடன் உறவினர்களுக்கு ஒரு பற்றுசீட்டின்மூலம் அதனை தெரியப்படுத்தவேண்டும். அல்லது வேறு எந்த வகையிலாவது கைதினை தெரியப்படுத்தவேண்டும். சித்திரவதை செய்தல் முழுமையா தடைசெய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்து ஆஜர்படுத்தாமல் தடுத்துவைத்தல் ஒரு குறிப்பட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின், மனித சுதந்திரத்தை பாதிக்காதவிதத்தில் அரசின் செயற்பாடு சட்டத்தினால் மட்டுப்படுத்தப்பட்டதாக இம்மக்கள் எண்ணுகின்றனர்.



மேற்குறிப்பிட்ட விதத்திற்கு மாறாக ஒருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்டுவைக்கப்படுவாராயின் அது மனிதஉரிமையினைமீறும் செயற்பாடு என மக்கள் எண்ணுகின்றனர். இதன்போது இச்செயற்பாட்டை நீதிமன்றத்திற்கு முன் கொண்டுசென்று தேவையற்றவிதத்தில் தடுத்து வைக்கப்பட்டவரை விடுதலை செய்து அவரது உரிமையினை பாதுகாப்பதுடன் சட்டத்தை கையிலைடுக்கும் அலுவலருக்கும் பாடம் கற்பிக்கவேண்டுமென்று இம்மக்கள் எண்ணுகின்றனர்.



வேலை செய்யப்படும் விதம்



இச்சந்தர்ப்பத்திலே மக்கள் பாரிய இழப்பை எதிர்கொள்கின்றனர். இதன்போதுதான் இவர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டம்இ அவசரகாலச்சட்டம் என்பவற்றை காணுகின்றனர். அத்துடன் இம்மக்கள் பின்வருவனவற்றையும் உணர்கின்றனர்.



சாதாரண சட்டத்தின்கீழ் மக்களைப் பாதுகாக்க அரசின்மீது சுமத்தப்பட்ட மட்டுப்பாடுகள் பல பயங்கரவாதத்தை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களின்மூலம் நேர் எதிர் மறையாக்கப்பட்டுள்ளது. இப்பயங்கரவாத சட்டங்களானது நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்களை எந்தவித குற்றமுமின்றி நீண்ட காலத்திற்கு மனிதாபிமானமற்ற கட்டளைகளின் பிரகாரம் தடுத்துவைத்தலை சட்டரீதியாக்கயுள்ளது.



நாம் எனது உரிமைகளை எமக்கு எடுத்து கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றோம். எனவே தான் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தமுடியுமென அவர் கூறினார்.



செய்யதக்கவை



இந்நிலைமையின்கீழ் பொதுமக்களுக்கு இரண்டு வழிமுறைகளுண்டு. ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்தவர்களுக்கெதிராக ஏதம் முறைப்பாடுகளிருப்பின் அவர்களுக்கெதிராக சாதாரண சட்டத்தின்கீழ் தொழிற்படும் வண்ணமும் முறைப்பாடு இருப்பின் ஆஜர்படுத்தும்படியும் இல்லாவிடின் அவர்களை விடுதலை செய்யும்படியும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன் அத்துடன் நிறுத்தாது மனிதசுதந்திரத்தை மட்டுப்படுத்த வழிசெய்யும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்கும் சட்டம் மற்றும் அதற்கேற்ற சமமான விதிகள் அடங்கிய அவசரகாலச்சட்டம்போன்ற கொடூரமான சட்டங்களை செயற்பாட்டிலிருந்து நிறுத்தும்வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கலாம்.



இரண்டாவது வழிமுறை குடியரசு “நாங்கள்” மற்றும் தீவிரவாதி “மற்றைய நபர்” என்ற இருவர் மத்தியில் தெளிவான பிரிவினை ஏற்படுத்தல். இதன்போது எம்மை இச்சந்தர்ப்பத்தில் த செயற்பபாதிப்பது சாதாரண சட்டம் என்பதுடன் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டும் ரக்கோனியானு சட்டம் உகந்ததென எண்ணி மனசை தேற்றிக்கொள்ள முடியும். இக்கருத்துகளுக்கேற்ப சென்று, தீவிரவாதத் தடுப்புச் சட்டம் அரசின்மூலம் தீவிரவாதிகளுக்கு மாத்திரம் ஏற்புடையதாக்கியதால் கைதுசெய்யப்பட்டவர்கள் சில சந்தர்ப்பங்களில் தீவிரவாதிகளென்பது யாருக்குத் தெரியுமென்று கூறிக்கொண்டு அவர்கள்து வேலையை மாத்திரம் செய்துகொள்வர்.



No comments: