Wednesday, October 8, 2008

ஐஐஜிஈபி முறையினை வேருடன் அழித்தல்

சர்வதேச சுயாதீன மாண்புமிகுக் குழுவாக அழைக்கப்பட்ட ஐஐஜிஈபி குழு கடந்த காலத்தில் தமது கடமைகளை இடைநடுவே நிறுத்திவிட்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பியது. அவ்வாறு நாடுதிரும்புவதற்கு முன்பாக கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்கள் அவர்களது இறுதி அறிக்கையை வெளியிட்டவேளையில் கூறியிருந்ததாவது மனிதஉரிமைகள் மீறப்படுவது தொடர்பான உண்மை நிலையினை ஆராயவேண்டிய நிலைமை இலங்கையின் அரசிற்கு அரசியல் ரீதியில் தேசைப்பாடு இல்லையென்பதாகும். இச்செய்தியாளர் மாநாட்டின்போதும் அறிக்கையொன்றினை வெளியிட்டபின்பும் இந்த சுயாதீன மாண்புமிக்கவர்களுக்கெதிராக பல “சண்டித்தனங்கள்” முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் சட்டமாஅதிபர் கூறியதாவது “சர்வதேச மனிதஉரிமைகள் மேற்பார்வை குழுவொன்றை இலங்கை;ககுக் கொண்டுவரல் இவர்களது சூழ்ச்சியாக இருந்தது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியதாவது இவர்களுக்கு பொறுப்புக் கொடுத்திருந்த கடமையினை செய்யாது வேறொரு வேலையினை செய்ததாக இவர் கூறியிருந்தார்”. மந்திரி விஜித ஹேரத் கூறியதாவது “சூழ்ச்சியாளர்களுக்கு இலங்கைக்குள் நுழைய இடங்கொடுத்த அரசு கடைசியில் பல பேச்சுக்களுக்கும் ஆளாகியது இது அரசின் பிழையாகும்”. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ் சுயாதீன மாண்புமிகுக் குழுவினை அலரிமாளிகைக்கு அழைத்து அவர்களை பேய்க்காட்டியதாக (தெஹி கபுவே) பல வெப்தளங்களும் (தமிழில் போடுங்கள்) பத்திரிகைகளும் அறிக்கையிட்டது. திவயின ஞாயிறு தினங்களில் வெளிவரும் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததாவது “ஜனாதிபதி இந்த சுயாதீனக்குழுவினர்களை பேசும்போது” மாண்புமிக்கவர்கள்” ஏதும் கூறாமல் கீழே பார்த்தபடி உட்கார்ந்திருந்தனரென்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மாண்புமிக்ககுழு எல்.ரி.ரி.ஈஇற்கு சார்பாக செயற்பட்டனரென்று திவயின மேலும் கூறும்போது சில சட்டத்தரணிகளையும் மேற்கோள்காட்டியிருந்தது”.

இலங்கையில் வசிப்பவர்களின் இவ்வாறான பல கருத்துக்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் என்பவற்றைப் பார்க்கும்போது தென்படுவது என்னவெனில் சர்வதேச சுயாதீன மாண்புமிகுக்குழு “சூழ்ச்சியான, எல்ரிரிஈஇற்கு சார்பானவர்கள், இவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்னவென்று” புரியாதவர்களாக, இவர்களுக்கு பேசும்போது கீழேபார்த்துக்கொண்டிருக்கும் பொம்மைஆட்காட்டிகள் என்பது பலரது கருத்தாக இருந்தது.

இதற்கமைய சர்வதேச மாண்புமிக்கோர் இவர்களால் செய்யமுடியாத வேலையொன்றினை பாரமெடுப்பதன்மூலம் தற்கொலையினை எய்தினரா? அல்லது தற்கொலை செய்துகொண்டவர்கள் வேறு யாராவதா?
பதினொருபேர் உள்ளடங்கலாக சர்வதேச மாண்புமிகுக் குழுவினை இலங்கைக்கு வரவழைத்தது ஜனாதிபதியாகும். ஜனாதிபதி இவர்களிடம் கேட்டிருந்தது என்னவென்றால் பிரதானமாக அவர்களது காலத்தின்போது (2005 ஆவணி 1ம் திகிதி தொடக்கம் 2006 ஐப்பசி 16ம் திகதி வரை) இடம்பெற்ற பாரிய கொலைகள் யாரால்இ எவ்வாறு இடம்பெற்றதென்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் தொழிற்பாடு சர்வதேச தராதரத்திற்கேற்ப இருக்கின்றதா அல்லது தொழிற்படுகின்றதா என்பதனை மேற்பார்வை செய்து அதனை அறிக்கையிடும்படியாகும். இதற்கமைய 2007 மாசி மாதத்தில் மாண்புமிகுக் குழுவினர் அவர்களது தொழிற்பாடுகளை ஆரம்பித்தது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள் தொடர்பில் மாண்புமிகு குழு மேற்பார்வை அறிக்கைகள் பலவற்றை வெளியிட்டனர். முதலாவது அறிக்கையினை ஜனாதிபதிக்கு 2007ம் ஆண்டு 6ம் மாதம் 1ம் திகதி ஆணைக்குழு சமர்ப்பித்தது. இரண்டாவது அறிக்கை 2007ம் ஆண்டு 9ம் மாதம் 18ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையினூடாக அவர்கள் தொடர்ச்சியாக கூறியது என்னவென்றால் ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள் (பேசிக் இன்டநஸனல் நோம்ஸ் அன்ட் ஸ்ரடட்ஸ்)இற்கு ஏற்ப அமையவில்லையென்பதாகும். அவர்கள் முன்வைத்த முறைப்பாடுகள் சில.

1. சட்டமாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டை முன்வைக்கின்றனர். சாட்சியாளர்கள் சாட்சிகளை முன்னெடுக்கின்றனர். இக்கொடூர செயற்பாடுகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றது சட்டமாஅதிபரின் வழிகாட்டலின்படியோகும். அவ்விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறவில்லையென்பதனால்தான் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களது மேற்பார்வையின்கீழ் சரியான முறையில் மேற்கொள்ளப்படாத விசாரணைகளுக்கெதிராக சாட்சிகளை வழிநடத்த சட்டமாஅதிபரின் திணைக்களம் செயற்படுவதனால் அவர்களது கடமையினை நிறைவேற்றுவதில் (கொன்பிளிக்ட் ஒவ் இன்ரெஸ்ட்) உருவாகியுள்ளது.

2. ஆணைக்குழுவின் சாட்சிக்கு அழைக்கபபடும் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்புத்தொடர்பில் சரியானதொரு வழிமுறை இல்லாத காரணத்தினால் குற்றவாளிகளுக்கெதிராக சரியான சாட்சிகள் சாட்சிகொடுக்க முன்வருவதில்லை.

3. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தெளிவற்றதாக இருப்பதுடன் மந்தமாகவும் தென்படுகின்றது.

4. அரச திணைக்களம் அல்லது நிறுவனங்களிலிருந்து (சில விடயங்கள் சாட்சிகளை சேகரிக்கும்போது) ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்குத்தேவையான ஆதரவு கிடைப்பதில்லை.

5. ஜனாதிபதி அலுவலகத்தினூடாக ஆணைக்குழுவின் சகல செயற்பாடுகளும் அல்லது முக்கிய செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்படுவதனால் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் அதற்குக்கிடைக்கும் பணவசதியிலும் பற்றாக்குறைத்தன்மை நிலவுகின்றது.

இவ்வாறான முறைப்பாடுகளை கூறிய மாண்புமிகு குழு முன்னெடுத்துக்கூறியதாவது இவ்வாறான பழிச்சொற்களை சரிசெய்வதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றத்தவறுவதால் கிடைக்கும் பலாபலன் என்னவெனில் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரம் மற்றும் சக்தி சர்வதேச தராதரத்திற்கேற்ப அமையவில்லையென்பதாகும். 2007 ஆவணி 20ம் திகதி இந்த சுயாதீனக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது இந்த விடயங்கள் தொடர்பில் அவரது கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

எவ்வாறிருப்பினும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் மந்தமானநிலை தொடர்பாக மாண்புமிகுக் குழு முன்னிறுத்திய கருத்துக்கள் தொடர்பில் அரசு தொடர்ச்சியாகக் கவனியாது இருந்ததுடன் அவற்றினை எதிர்த்தும் செயற்பட்டனர். ஆணைக்குழுவின் தலைவர் இதுதொடர்பில் தமது விருப்பமற்ற தன்மையினை கருத்துவடிவில் ஊடகங்களினூடாக தெரிவித்தார். அதுமாத்திரதமன்றி அவர்களது கடமை தொடர்பில் மாண்புமிகு குழு செய்தமுன்மொழிகளை தற்போதைய அரசின் சட்டமாஅதிபர் அதுதொடர்பில் விடையளிக்கையில் செயற்பட்டவிதம் மிகவும் பிற்போக்கானதாக தென்பட்டது. சட்டமாஅதிபர் அதற்கு பதிலளித்த விதத்தை மாண்புமிகு குழு பின்வருமாறு எடுத்துக்கூறியது. சர்வதேச மாண்புமிகு குழுவின் முக்கியம் வாய்ந்த தகவல்களின் உள்ளடக்கம் தொடர்பில் தமது அதிருப்தியினை தெரிவிக்கும் உரிமை சட்டமாஅதிபருக்குண்டு. மாண்புமிகு குழுவின் அங்கத்தவர்கள் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நேர்மையான விதத்தில் மதிப்பளிக்கின்றனர். அதேபோன்று சட்டமாஅதிபரின் பதவிக்கேற்றவிதத்தில் கருத்துக்கள் பரிமாற்றப்படுகின்றது என்பதனையும் அவர்கள் அவர்கள் நம்புகின்றனர். மாண்புமிகு குழுவினர்மூலம் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முக்கியபிரச்சனைகளை புறந்தள்ளியும் மியவும் கீழ்த்தரமான வார்த்தைப்பிரயோகங்களையும் பயன்படுத்தி குறிப்பிட்ட கடிதம் வரையப்பட்டுள்ளதென்பது மாண்புமிகுக் குழுவின் கருத்தாகும்.

முடிவில் மாண்புமிகுக் குழு தமது கடமைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது. இதனடிப்படையில் 2008 பங்குனி 31ம் திகதி அவர்களது சேவையினை இடைநிறுத்தியது. சித்திரை 14ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் பின் அவர்களது இறுதி அறிக்கையினை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் உண்மையினைக் கண்டுபிடிப்பதற்கு அரசுக்கு எந்தவிதமான அரசியல் தேவைப்பாடும் இல்லையென்பதனை தெளிவாக குறிப்பிட்டிருந்தனர். மாண்புமிகுக் குழுவுக்கெதிராக பழிச்சொல்லும் அரசின் மற்றும் தேசப்பக்தியுடைய ஊடகசெயற்பாடுகள் அதன்பின்தான்; ஆரம்பித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டதன் பின் தேசிய பிரச்சனைகள் தொடர்பான வழிமுறையாகவிருந்தது. “அழித்து முடிவுக்குக் கொண்டுவரல் என்ற வழிமுறையாகும்”. யுத்தத்தில் ஈடுபடும் இவ்விருதரப்பினரும் இவ்வழிமுறையினை எதிர்த்துச் செயற்பட முடியாமல்போனதுடன் இதன் பலாபலனாக் கிடைத்தது யாதெனில் பாரியளவில் மனிதஉரிமை மீறல்கள் நாட்டினுள் இடம்பெற்றதாகவும் பாரியளவில் மனிதஉரிமை மீறல்கள் நாட்டினுள் இடம்பெறும்போது அதற்கெதிராகச் செயற்பட தேசிய மனிதஉரிமை பாதுகாப்பு நிறுவனங்களிற்கு முடியாமலுள்ளதென்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனடிப்படையில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்கு அறிக்கை செய்வதற்கு அல்லது வெளியிடுவதற்கு மற்றும் பிரசித்திப்படுத்துவதற்கு சர்வதேச மனிதஉரிமை அலுவலகமொன்றை இலங்கையினுள் நிறுவுவது அவசியமென்பது தொடர்பில் நாட்டினுள்ளும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஒரு கருத்து நிலவியது. ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை கவுன்சிலின்போது மட்டுமன்றி அதற்கு வெளியேயும் இக்கருத்து பாரிய அவதானத்திற்குள்ளாகியது. அரசு இந்த யோசனைக்கெதிராக செயற்பட்டது. அரசின் நோக்கமென்னவெனின் நாட்டினுள்ளிருக்கும் நிறுவனங்களினூடாக பிரச்சனைகளை முடிவுக்குள் கொண்டுவர முடியுமென்பதாகும். இதற்கேற்ப 2006 கார்த்திகை மாதம் 3ம் திகதி ஜனாதிபதி ராஜபக்ச மூலம் பாரியளவில் மனிதஉரிமைகள் மீறப்பட்ட 16 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைசெய்து இதற்குப்பொறுப்பானவர்களை கண்டுபிடிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதற்கிடையில் சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதன் நோக்கமாக ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வதேச தராதரத்திற்கேற்ப செயற்படுகின்றதா என்பதனை அவதானிப்பதற்கொருவர் என்ற அடிப்படையில் மிகவும் திறமைவாய்ந்த ஒருவரை அனுப்பும்படி பல நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கேற்ப அந்த நாடுகள் மிகவும் புத்திசாலிகளை தெரிவுசெய்து அனுப்பிவைத்தது. இந்தியா இதற்கு அனுப்பிய நபர் தங்களது நாட்டின் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசராக இருப்பினும் மனிதஉரிமை தொடர்பான விடயங்களை நன்கறிந்து அனுபவம் பெற்றவராகவுமிருந்த திரு. பி. என். பகவதி. பிரான்ஸினால் அனுப்பப்பட்டவர் திரு. பேனாட் குஸ்ஓனர் ஆவார். (அதன்பின் அவர் அந்நாட்டு சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அனுப்பப்பட்ட நபர் சுறறுலா மற்றும் அபிவிருத்தி அமைச்சராக இருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. பியரே கொட் ஆவார்). இந்தோனேஷியாவால் அனுப்பப்பட்ட நபர் திரு. மாசுகி தருஸ்மான் ஆவார். இவ்வாறு அமெரிக்கா, ஜப்பான, இங்கிலாந்து, நெதாடலாநடது, கனடா, சயிப்ரஸ் போன்ற நாடுகள் தமது நாட்டிலிருந்தும் பிரமுகர்களை அனுப்பிவைத்தனர். இதற்கேற்ப இந்த மாண்புமிக்கவர்கள் பேச்சுக்கு ஆளாகுபவர்களும் குறைகூறுபவர்களும் எண்ணுவதுபோல் அவர்களது பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருக்குமளவிற்கு பொம்மைகளல்ல. மாண்புமிக்க இவர்கள் மிகவும் கீர்த்தியுடைய சட்டரீதியான மற்றும் மனிதஉரிமை தொடர்பான விடயங்களில் மிகவும் பிரசித்திவாய்ந்த இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் நாடுபூராவுமுள்ள அனுபவங்களைப்பெற்ற திறமைசாலிகளாவர்.

மாண்புமிக்க மற்றும் இலங்கை அரசிற்கிடையிலேற்பட்ட பிரச்சனை என்ன?

ஆணைக்குழுவின் விசாரணைக்கென நியமிக்கப்பட்டிருந்த பல கொலைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த தரப்பினர் அரச இராணுவப்படையும் பொலிஸ_ருமாகும். விஷேடமாக தற்போது விசாரணையின் அரைப்பகுதியினை அண்டியுள்ள மூதூர் ஏசீஎவ் வழக்கின் 17பேர் கொலைவழக்கு மற்றும் திருகோணமலையில் கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களது கொலைவழக்கு தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்படுவது அரச தரப்பினராகும். இதனடிப்படையில் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் எவ்வாறிருப்பினும் தமது படையின் கீர்த்தியினை பாதுகாக்கவேண்டியது அரசுக்குரிய பாரியகடமை என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. சர்வதேச தராதரத்திற்கும் கொள்கைகளுக்குமேற்ப செயற்படும் ஆணைக்குழுவினால் அவ்வாறான ஒரு நோக்கம் நிறைவேறுவதென்பது உண்மையாகும். இதற்காக முடியுமானவரைக்கும் அத்தராதரங்களை கவனியாதுவிடல் முக்கியமாகும். இச்சுயாதீனக்குழு சூழ்ச்சியாளர்களாகவும் வேண்டப்படாதவர்களாகவும் அரசுக்கும் இராணுவப்படைக்கும் தென்பட மூலகாரணமாக அமைவதென்னவெனில் ஆணைக்குழுவினை சர்வதேச தராதரங்களுக்கு செயற்படும்படி தொடர்ச்சியாக இவர்கள் கட்டளையிட்டது. செய்திகளை வெளியிட்டது. சட்டமாஅதிபருடன் பேச்சில் ஈடுபட்டது. ஜனாதிபதியினை சந்தித்து இதுதொடர்பில் குறிப்பிட்டபடியினாலுமாகும்.

இருப்பினும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பொறுப்பு மத்தியில் பிரச்சினை தொடர்பில் அவர்களது மேற்பார்வை ஒரு துளியேனும் கவனஞ்செலுத்தவில்லை. ஒரு வருடத்திற்குள் முடிவுறுத்தப்படவேண்டுமெனக்கூறி பொறுப்புக் கொடுக்கப்பட்ட செயற்பாடுகளில் ஆணைக்குழு ஆரம்பமாகி இரண்டு வருடங்களாகியும் விசாரணைகளிடம்பெறுவது மூதூர் “அக்ஷன் பாம்” பணியாளர்கள் 17பேர் தொடர்பான கொலையும் திருகோணமலையில் இடம்பெற்ற ஐந்து மாணவர்களது கொலை தொடர்பான விடயமுமாகும். இதன்படி ஆணைக்குழுவின் செயற்பாடு மிகவும் மந்தமான நிலையிலுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உதாரணமாகக் கூறுவதாயின் கடந்த மாசி மாதத்தில் 10 நாட்களாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த பண்டபத்தில் “தயடகிறுள” என்ற நிகழ்ச்சி இடம்பெற்றபோது ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆணைக்குழுவில் சாட்சிகொடுக்கும் சாட்சியாளர்களது பாதுகாப்புத்தொடர்பில் எவ்விதமான முக்கிய ஏற்பாடும் இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சட்டமும் பாலகிரி தோஷத்திற்குட்பட்டுள்ளது. மாண்புமிக்கவர்களின் மேற்பார்வையின்படி ஆணைக்குழுவின்முன் சாட்சி கொடுப்பதற்கு கண்களால் சம்பவத்தை நேரில்கண்ட சிவில் சமூகத்தினரெவரும் முன்வரவில்லை. தமக்கு தெரிந்தவற்றை சொல்லுவதற்குப்பதிலாக திறமையற்றவிதத்தில் தோன்றுவதற்கு பாதுகாப்புப் படைத்தரப்பின் சாட்சியாளர்கள் விரும்புகின்றனர். இதனடிப்படையில் மாண்புமிக்கவர்களின் கருதுகோள் என்னவெனில் “கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு அல்லது அதிகாரம் எனபவற்றை சிறந்தவகையில் செயற்படுத்த ஆணைக்குழுவினால் முடியாததென்பதாகும்.

தற்போது அரசின் கோபத்திற்கு இக்கருத்தே காரணமாக அமைகின்றது. மாண்புமிக்கவர்களை சந்தித்தபோது ஜனாதிபதியால் கேட்கப்பட்டதாவது “எனக்கு அரசியல் நோக்கம் இல்லையெனில் ஆணைக்குழுவினை எதற்காக நியமித்தேன்” என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. மனிதஉரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு அரசியல் தேவைப்பாடொன்று அவசியமாகும். இருப்பினும் ஆணைக்குழுவொன்றினை அமைப்பதால் மட்டும் அவ்வரசியல் தேவைப்பாடு தோன்றவில்லையென்பது அதற்கும்மேலான ஒரு உண்மையர்கும். பலர் கூறுவதனால் மட்டும் ஆரவாரித்து ஆணைக்குழுவொன்றினை அமைத்து பின் அவற்றை வேண்டுமென்றே அங்கவீனமாக்கி பலனற்ற இயற்கை மரணத்திற்குட்படுத்திவிடல் எமது நாட்டின் சம்பிரதாயமாகும். அதற்கிருக்கும் மிகவும் நெருங்கிய உதாரணம் அரசியலமைப்பின் 17வது சீர்திருத்தத்தின்மூலம் நியமிக்கப்பட்ட அரசியலைமைப்புச் சீர்திருத்தச்சபை மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களாகவும் தென்படும் விதத்தில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கேற்பட்ட நிலையுமிதுவாகும்.

அரசின் கருத்துப்படி மாண்புமிகு ஆணைக்குழுவின் கூட்டங்களில் பங்குபெறாமல் அதனை குறைசொல்வதனையே தொழிலாகக் கொண்டிருந்ததென்பதாகும். இது சட்டத்தைப்பற்றி எதுவுமறியாது செய்யப்படும் இழுத்தடிப்புக்களேயாகும். வழக்கொன்றை நடத்துகின்றோமென்ற கருத்தில் காலையிலிருந்து இரவுவரைக்கும் நீதிமன்றத்தின் கதிரைகளை சூடாக்கத்தேவையில்லை. இதற்கு சட்டப்புத்தகமே போதுமானது. இன்னுமொருவகையில் கூறுவதாயின் 2007 மார்கழி மாதம் 17ம் திகதி வரைக்கும் இவ்விருவழக்குகளின் அமர்வுகள் 76ற்கு மாண்புமிக்கவர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் கலந்துகொண்டனரென்பது இவர்களது கருத்தாகும். அத்துடன் மகவும் உற்சாகத்துடனும் விருப்பத்துடனும் வழக்கின் அமர்வுகளை கண்காணிப்பதற்காகவும் மிகவும் உயர்ந்த தகுதிகளைக்கொண்ட உதவிமுகவர்கள்மூலம் கொழும்பு மற்றும் அதற்கேற்ற இடங்களில் விசாரணைகள் ஆராய்ச்சிகளை முற்றுமுழுதாக மேற்பார்வை செய்ததாக இவர்கள் கூறியிருந்தனர். ஆத்துடன் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை ஒன்றாகக்கூடி ஆணைக்குழுவின் நிலைமையினை கலந்தாலோசிப்பதற்கும் இவர்கள் பொறுப்பாக இருந்தனரென்பதுடன் அதனை சரிவரவும் செய்தனர்.

அரசின் எண்ணமென்னவெனில் அது நினைப்பதை மாண்புமிக்கவர்கள் கூறவேண்டுமென்பதாகும். இருப்பினும் துரதிஷ்டவசமாக பகவதி போன்ற இந்திய பிரதமநீதியரசர் எங்களது நாட்டரசிற்கு தேவையானதை கூறுபவர்களல்ல. அவர்கள் கூறுபவை சட்டத்திற்கேற்ற விடயங்களாகும். அரசிற்கேற்ற விடயங்கள் இடம்பெறாதபோதும் தேவையற்ற விடயங்கள் இடம்பெறும்போதும் சட்டம் மற்றும் சாதாரணத்துவத்தை அறிந்தவர்கள் அதற்கெதிராவது சாதாரண விடயமே. இதன்போது அவர்கள் சட்டத்தை மீறுபவர்களுக்கு தலைவலியாகின்றனர். இது தற்போதுள்ள நிலைமையாகும்.

No comments: