Monday, March 23, 2009

இடைவேளையின்பின் மீண்டும் உங்களுடன்


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின்பின் எம்மால் பேசமுடியாத ஒரு காலகட்டம் உருவாகியது. “பேசமுடியாத இடத்தில் அமைதிகாக்க வேண்டும்” என்ற வித்கஸ்டயின் என்பவரின் கருத்திற்கிணங்க “சமபிம தற்காலிகமாக அமைதிபேணியது”.

உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பேச்சுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம், சிவில்சமூகம் போன்ற மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் அவசியமாகியது. அந்த அமைதியான காலகட்டத்தின்போது எமது சக்தியினையும், நேரத்தினையும் நாம் அவ்வாறானதொரு மக்கள் சக்தியினை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்தினோம்.

தற்பொழுது நாம் மீண்டும் “சமபிம”வினை ஆரம்பிக்கத்தீர்மானித்துள்ளோம்.

எமது நோக்கில் இலங்கை சமூகம் ஒரு திருப்புமுனையினை நோக்கி வந்தடைந்துள்ளது. இத்திருப்புமுனையின் ஆரம்பம் என்னவென்று எமக்குத் தெரியாது. இருப்பினும் இலங்கையின் அரசியல் கட்சித்தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் தத்துவஞானிகள், ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் ஒடுக்கப்பட்ட (அடைபட்ட) ஒரு நிலையினை அடைந்துள்ளதுடன் தமது தூதுவர் கடமையினைப்பற்றி மீண்டும் சிந்திக்கவேண்டிய தேவைப்பாடொன்று உருவாகியுள்ளது.

உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரியளவில் மாற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. நடைமுறையிலுள்ள லிபரல் குடியரசு சமூக அமைப்பென்று அழைக்கப்படும் பணம்படைத்த சமூகமுறை வரலாற்றில் முடிவென்பதுடன், தொன்றுதொட்டு நடைமுறையிலிருக்கும் இச்சமூக அமைப்புக்கோ அல்லது அச்சமூக அமைப்பினூடாக தேசிய அரசிற்கு வழங்கப்படும் அறிவூட்டல்கள் அல்லது சவாலிடும் மடையர்கள் என்போர் கூட்டித்தள்ளப்படுவதுடன் இதுகாலம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையென்பதுடன், வடக்கில் யுத்தம் ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் முடிவடைந்து, சமாதானம் உருவாகுவதுடன், தார் வீதிகள் காபட் வீதிகளாக மாறி எல்.ரி.ரி.ஈ அமைப்பு ஆயுதங்களைக் களைந்து தபால் சேவையாக உருமாறும் (Post LTTE) என்று தம்பட்டமடித்தவர்களும் இவ் புது மாற்றம் உலகிற்கும், தெற்காசிய பிரதேசத்திற்கும் மாத்திரமன்றி இலங்கையிலும் எவ்வாறு தாக்கஞ்செலுத்துமென்பதனை யோசிக்கவேண்டியிருக்கும்.

நன்றாக ஓட்டங்களைக் குவித்த சிறந்த ஓட்டங்களுடன் திகழ்ந்த ஒரு கிறிக்கெற் வீரர் தொடர்ச்சியாக கீழ்மட்டத்தை (தோல்வியடைதல்) நோக்கி செல்லும்போது அவருடன் சேர்ந்து அவரது ரசிகர்களும், ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது மனைவி, ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் போன்று அனைவரும் குழப்பமடைவர் (சோர்ந்துபோதல்). இவ்வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வெளிவர தனக்குப் பழக்கப்பட்ட (தனது பாங்கிலான) விதத்தில் ஓட்டங்களை குவிக்க இவ்வீரர் முயற்சி செய்தபோதிலும் அதன் பலன் மீண்டும் தோல்வியையே அடைந்தது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அவரது பயிற்றுவிப்பாளர்கள் வீரனுக்கு வழங்கும் அறிவுரை என்னவென்றால், தான் கடந்த காலங்களில் விருத்திசெய்த மனவலிமையினை சற்று மறந்து மீண்டும் கிறிக்கெற் விளையாட்டினை ஆரம்பத்தில் கற்கும்போது பின்பற்றிய முறைகளை கடைப்பிடிக்கும்படியாகும். அதாவது “Back to the Basic” என்பதாகும்.

எமது கருத்து இலங்கையின் சமூகம் தம்மைப்பற்றி புதிதாக யோசிக்க வேண்டுமென்பதாகும். இதற்காக மீண்டும் ஆரம்பப்படிமுறைகளை நோக்கிப்பயணிக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் மனிதஉரிமை மற்றும் குடியரசைப் பாதுகாப்பதற்காக “சமபிம” மூலம் முன்னெடுத்துச்செல்லவிருந்த கலந்துரையாடல்களைக்கூட இதன் காரணமாக மீண்டும் ஆரம்ப நிலைக்குள் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதனால் கலந்துரையாடலின்போது தினமும் எழும் பிரச்சனைகளிலிருந்து அப்பால் சென்று எமது சமூகத்தின் தேவைப்பாடுகளை இனங்காண வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் எம்முடன் இணைந்திருந்து எமக்கு உதவிய “சமபிம” வாசகர்கள் இந்தத் தளம்பல் நிலையினால் சற்று நிலைகுலைந்திருக்கலாம். இருப்பினும் எம்மால் கூறக்கூடிய ஒன்று சற்றுக் குழப்பமடையாமல் இன்னும் சில வாரங்கள் எம்முடன் இணைந்திருக்கம் படியாகும்.

தங்களது எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் எமக்கு எழுதியனுப்புவது எம்மை மகிழ்ச்சியிலாழ்த்தும்.
பத்திரிகை ஆசிரியர்

சமபிம
றயிட்ஸ் நவ்
24/13விஜயபா ஒழுங்கை
நாவல வீதி
நுகேகொடை
மேலதிக விபரங்களுக்கு 0777342834

No comments: