Monday, October 27, 2008

வடக்கில் கிளைமோர் வைக்கும் சுமணசிறி தம்பியும் கிழக்கில் தற்கொலை செய்துகொள்ளும் செல்லம்மா தம்பியும்

மன்னாரில் வசிக்கும் இளம் பெண்களின் வாழ்க்கைகழிவது யுத்தத்தின் மத்தியிலும் வாழ்வது பாதுகாப்பற்ற நிலையிலுமாகும். அவளது கடின வாழ்க்கைக்கோலம் புத்தளத்தில் வசிக்கும் இளைஞனுக்கு புரியாத ஒரு புதிராகும். வேறுவிதமாகக் கூறினால் வடக்கில் தங்கை செல்லம்மா படும் அவதியினை கிழக்கிலிருக்கும் தம்பி சுமணசிறிக்குப் புரியாது.

இதனை செயற்படுத்துவதற்கான செயற்திட்டத்தை சாதாரணமாக மூன்று டிரக் இன் கீழ் அடக்குவர்.


முதலாவது டிரக் - யுத்தத்திலீடுபடும் தரப்பினரிடையே இணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை.


இரண்டாவது டிரக் - யுத்தத்திலீடுபடும் தரப்பினருக்கேற்ற சமூகத்துடன் ஒன்றிணைந்திருக்கும் அறிவாளிகள் மற்றும் கலைஞர்கள் போன்றோருக்கிடையில் இணக்கத்தினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை.


மூன்றாவது டிரக் - யுத்தத்திலீடுபட்டுள்ள தரப்பினருக்கேற்ப சமூகத்திலுள்ள சாதாரண பொதுமக்கள் மத்தியில் இணக்கத்தினை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை.


சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக செயற்பட்ட காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினரிற்கேற்ற விஷேடமாக இரண்டாவது பகுதியினரிற்காக செய்யப்பட்ட முயற்சி யாதெனில் தங்கை செல்லம்மா மற்றும் தம்பி நடராஜா அனுபவித்த கஷ்டங்களை தம்பி சுமணசிறிக்கும் செனெஹெலதாவிற்கும் விளக்கிக் கொடுத்தலாம் அல்லது விளக்குதலாகும். இதற்காக கிழக்கிலிருந்து வடக்கை நோக்கி யாத்திரிகைகள், கண்காட்சிகள், செயற்திட்டங்கள், பேச்சுவார்த்தைகள், விளக்கேற்றல், மெழுகுதிரி ஏற்றல், கொடியேற்றல் இவ்வாறு பல்வேறு செயற்பாடுகள் ஊரூராக செயற்படுத்தப்பட்டது. இச்செயற்பாடுகளின் மூலநோக்கம் சமூகத்தை தெளிவுபடுத்துவதாகும். (Awareness Raising). இதற்காக அதிகபட்டசமான விடயங்கள் சேகரிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது, அச்சடிக்கப்பட்டது, பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. இச்செயற்பாட்டின்மூலம் நேரடியாகவே பலாபலன்களை பெற்றவர்களிடையே மொழிபெயர்ப்பாளர்கள், அச்சடிப்போர் மற்றும் சிறு கடைகளை தெருவோரத்தில் அடங்குவர். (பார்சல் சுற்றுவதற்காக பத்திரிகைகளைப் பயன்படுத்தினர்).


சமாதானம் முடிவுக்கு வந்ததும் யுத்தம் மீண்டும் ஆரம்பமானது. இதன்போது மூன்று பிரிவினருக்குமுரிய செயற்பாடுகள் முடக்கப்பட்டதுடன் சமாதானமும் மழுங்கியதும் வெளிநாட்டுப் பறவைகளும் பறந்து சென்றன. சுமாதானப் பாடலை இசைத்த தேசியப் பறவைகளும் யுத்தப் பாடல்களை பாடத்தொடங்கின. நாங்கள் யுத்தகாலத்திலிருக்கும் தங்கை செனெஹெலதாவிடம் மன்னாரிலிருக்கும் தம்பி நடராஜாவின் இன்னல் நிறைந்த வாழ்க்கை தொடர்பில் கேள்வியெழுப்பினால் எமக்குக் கிடைக்கும் பதில் என்னவாக அமையும்?


தம்பி நடராஜாவின் கஷ்டங்களை அனுபவிப்பது யுத்தத்தினால், அதிலிருந்து தப்பி நடராஜாவை பாதுகாப்பதாயின் பிரபாகரனை இல்லாதொழிக்க வேண்டுமென்றும் இதனால் தம்பி நடராஜாவுக்கு கௌரவமான இறப்பைப் பெற்றுக்கொடுப்பதாயின் யுத்தத்திலீடுபட வேண்டுமென்றும் தங்கை செனெஹெலதா குறிப்பிடுகின்றார். இவ் யுத்தத்தில் தற்பொழுது புலி தரப்பினருடன் இணைந்துள்ள தம்பி நடராஜாவின் அண்ணனை கொலைசெய்ய நேரிடுமென்றும், இதனால் இவர்களது உறவினர்களை மதவாச்சியை தாண்ட அனுமதிக்கக் கூடாதென்றும், கொழும்யிற்கு வந்துள்ள நடராஜாவின் மச்சானைக் கைதுசெய்து தொடர்ந்து தடுத்து வைக்கவேண்டுமென்றும், நடராஜாவின் குடும்ப அங்கத்தவர்களை தமது பிறப்பிடத்தை விட்டுச்சென்று முகாம்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகுமென்பது அவனது பதிலாக இருந்தது.

No comments: