Wednesday, October 8, 2008

மனிதஉரிமை பாதுகாவலர்கள் சிவில் பாதுகாவலர்களாதல்

மனிதஉரிமை செயற்திட்டத்தின்போது சந்தித்த பிரதேசரீதியிலான மனிதஉரிமை செயற்பாட்டின் குழு என்னிடம் கூறியதாவது அவர்கள் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு சபையில் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனரெனக் கூறினார்.

பொலிஸ் அதிகாரிகள் தங்களது கிராமத்திற்கு வந்து சிவில் பாதுகாப்பு செயற்குழுவில் தங்களையும் இணையுமாறு அவர்களிடம் கேட்டுள்ளனர். “நீங்களில்லாவிடில் பொலிஸ் பாதுகாப்பற்ற நிலையிலிருக்குமென்று பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். யுத்தப்பிரதேசங்களில் சேவையாற்றுவதற்காக அலுவலர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பொலிஸில் தற்போது சேவையாற்றுபவர்கள் தேவையானளவில் அதாவது 100ற்கு 25 வீதமானோர் மாத்திரமாகும். இதனால் பொதுமக்களின் சேவை இக்குறைபாட்டினைத்தீர்க்க அவசியமாகவுள்ளது. சிவில் பாதுகாப்பு செயற்குழு இருப்பது அந்நோக்கத்திற்காகவேயாகும். முன்னர் குறிப்பிட்ட மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டிருப்பது இச்செயற்பாட்டிற்கேயாகும்.

“தற்பொழுது பொலிஸ் முன்னர் போன்றில்லை” என்று அவர்கள் கூறினர். “மனிதஉரிமைகள் தெபாடர்பில் பொலிஸாரும் கவனஞ்செலுத்துகின்றனர்”. பின்னர் ஒரு தினத்தில் அவர்களது ஒரு பிரதேச செயற்குழுவாக மனிதஉரிமைகள் தொடர்பில் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தியது. விரிவுரையாளர்களாக கலந்துகொண்டவர்களுள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணியும் பொலிஸ் உபபரிசோதகர் ஒருவரும் இருந்தார். “பொலிஸ் உபபரிசோதகர் அதிகாரி மனிதஉரிமை தொடர்பாக மிக உயர்வாகப் பேசினார்” கூட்டத்தின் தலைப்பு பின்வருமாறு அமைந்தது. “சிறந்த ஆட்சிக்கு மனிதஉரிமை தடையாகுமா?”

தற்பொழுது இவ் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் பொலிஸில் வரவேற்புப்பகுதிகளில் கடமையாற்றுகின்றனர். சோதனைச்சாவடிகளில் பொதுமக்களது உடமைகளை பரிசோதிப்பதில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் மற்றும் அவர்களது நடத்தை தொடர்பில் கண்காணித்து பொலிஸிற்கு அதுதொடர்பில் செய்திகளைப் பரிமாறுகின்றனர் அல்லது நபர்களை பொலிஸிடம் பொறுப்புக்கொடுக்கின்றனர். பொலிஸில் பொதுமக்களின் செயற்பாடு தொடர்பில் பொறுப்பாக ஒரு உத்தியோகத்தர் உள்ளார். சீருடையிலிருப்பதுமில்லை சிவில் பாதுகாப்பு செயற்குழு உறுப்பினர்களை தொடர்புபடுத்துவது இவரூடாகவேயாகும்.

எவ்வாறிருப்பினும் பொதுமக்களுக்கும் பொலிஸிற்குமிடையிலான தொடர்பு மிகவும் நெருங்கியதாகத் தோன்றுகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக சிவில் சமூகத்தினரை அரசுடன் இணைத்து அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின்மூலம் பொதுமக்களை இணைக்கும் கொள்கை பலாபலன்களையடைந்துள்ளதேயென்று கூறவேண்டும். “முதல் மாதிரியல்ல பொலிஸார் எம்மை நன்றாகக் கவனிக்கின்றார்கள்” என்று மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு புறத்தில் மனிதஉரிமை தொடர்பில் நல்ல அனுபவமுள்ளவர்கள் பொலிசுடன் இணைந்து உதவமுன்வரல் மனிதஉரிமை மீறப்படுதலைக் குறைக்க ஒருகாரணமாகும் என்பது இவர்களது கருத்தாகும். “ஒருவர் முறைப்பாடு செய்யவந்தால் முதல்மாதிரி என்னடா வந்தனி என்று கேட்பதில்லை. நாங்கள் என்னடா ஐயா தயவுசெய்து இங்குவந்து உங்கள் முறைப்பாட்டை செய்யுங்கள் என்றே கூறுகின்றோம்”. சிறு முறைப்பாட்டு பகுதி தமது பெயரை மாற்றியுள்ளது எவ்வாறிருப்பினும் இங்கு கொன்பிலிக்ட் ஒவ் இன்டரஸ்ட் ஒன்று ஏற்படாதென்று நான் கேள்வி எழுப்பினேன். இவ்வாறெடுத்துக்கொன்டால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது நடவடிக்கைகளால் ஏற்படுத்தப்படும் சித்திரவதைகள் அல்லது வேறுவிதமான மனிதஉரிமை மீறல்கள் அல்லது தமது கடமைகளை செய்யாதுவிடல் அல்லது கடமைகளிலிருந்து விலகல் என்பன தொடர்பிலான முறைப்பாடுகள் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் என்றவகையில் உமக்குக் கிடைக்கின்றது எனக்கொண்டால் இதன்போது நடப்பது என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபர் இதற்காக பொலிஸிற்கெதிராக செயற்படவேண்டுமென்பதாகும். இதன்போது இங்கு பிரச்சனை எழாதா? இல்லை அவ்வாறானதொரு பிரச்சனை எழுந்தால் எங்களால் பொலிசுடன் கதைத்து அதனை முடிவுக்குக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் அல்லது தீர்க்க்கூடியதாக இருக்கும்.

தற்கால யுத்தத்தின் தொனிப்பொருள் “எங்களுக்காக நாங்களென்பதாகும்” இவ்வாக்கியத்தின் ஆரம்பப்பகுதியில் அல்லது முதற்பகுதியில் அடங்குபவர்கள் அரசதரப்பினர்களான பொலிசும் இராணுவமுமாகும். பிற்பகுதியிலிருக்கும் நாங்களென்ற சொல் பொதுமக்களை வலியுறுத்துகின்றது. சுருங்கக்கூறின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது எங்களுக்காக நாங்களென்ற பனர்களை ஏந்தியவண்ணமாகும். இவ்வாறான ஒரு நிலையிருக்கும்போது எங்களது பிரதேச மனிதஉரிமை தொழிற்பாட்டாளர்கள் எங்களுக்காக உழைப்பதில் எந்தவிதமான புதுமையுமில்லை.

இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழும் சிங்களம் பேசும் பொதுமக்களுடன் மனிதஉரிமை பாகாப்புத்தொடர்பில் செயற்படும்போது மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொள்ளுதல் மிகஅவசியமாகும் இல்லது விளங்கிக்கொள்ளுதல் மிகஅவசியமாகும். பிரபாகரன் மற்றும் எல்.ரி.ரி.ஈ யினரை அழிக்கும் கடைசி யுத்தத்தில் கிழக்கு இணைந்துள்ளதுடன் “தீவிரவாதத்தை“ தோற்கடிப்பதற்கான யுத்தத்தில் தமது சுதந்திரத்தை மீது வைப்பதற்கும் பொதுமக்கள் இணங்கியுள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் மனிதஉரிமையினை பாதுகாப்பதற்காக குரலெழுப்புதல் தீவிரவாதற்குத் தேவையற்றவிதத்தில் ஒத்தாசை வழங்குதல் என்ற எண்ணக்கரு பொதுமக்கள்மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைத்தலென்ற விதத்தில் ஒழிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வாயால் அடிக்கடி அக்கருத்து வெயளியில்வரல் புதுமைக்கான காரணமல்ல.

1994ற்குப்பின் பல்வேறு இடையீடுகள்மூலம் குறைந்தபட்சமேனும் சட்டத்தினுள் நின்றுகொண்டு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உரிமைகள் எல்லாவற்றையும் தட்டிக்கழித்துக்கொண்டு அரசு செயற்பட்டது. இவ்வாறான ஒரு நிலைமை நிலவும்போது அதற்கு சிறிதளவேனும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அல்லது குரலெழுப்பாமல் பொதுமக்கள் அதனை யதார்த்தமாக எண்ணி அவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்குவதை காணக்கூடியதாக உள்ளது.

No comments: