Monday, March 23, 2009

நாங்கள் அறியாத செஷ்

உங்களது பேச்சு பேச்சாற்றலில் சரியாக இருந்தாலும் அது உலகநியதியல்ல. தற்பொழுது அரசு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கென நேர்மையாகச் செயற்படுகின்றது. இதற்கிடையில் மனிதஉரிமை தொடர்பாக பேசும்போது ஏற்படுவது என்னவெனில் தீவிரவாதத்தை தோற்கடிப்பது மந்தநிலைக்கு செல்வதாகும். மேற்குறிப்பிட்ட பதில் எனக்குக் கிடைத்தது இரண்டு வாரங்களுக்குமுன் க…….. நகரில் இடம்பெற்ற மனிதஉரிமை தொடர்பான கலந்துரையாடலின் போதாகும்.

ஆயுதந்தாங்கிய குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, மனிதஉரிமை மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரி;த்தது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான கேள்வி அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது. கொலைகள், காணாமற்போதல்கள், கடத்தப்படல், சிறார்களை போரிலீடுபடுத்துதல், சித்திரவதைசெய்தல், சிவில் சமூகத்தினருக்கெதிராக யுத்தத்தாக்குதல்கள் உட்பட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் ஏதாவதொரு ஏற்பாட்டை மேற்கொள்ள பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் நிறுவனம் முன்வரவில்லையென்பதுடன், எவ்வித தண்டனையும் வழங்கப்படாமல் பயமில்லாமல் விரும்பியபடி குற்றச்செயல்கள் செய்வதற்கான வழிவகைகள் தோன்றியுள்ளதுடன், தேசிய மனிதஉரிமை ஆணைக்குழு தமக்கு சட்டரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாத நிலையொன்று தோன்றியுள்ளதாக குறிப்பிட்ட நான், எல்.ரி.ரி.ஈயினரின் கட்டுப்பாட்டு பிரதேசமுட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்வதற்கும், அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அதிகாரமுடைய சர்வதேச மனிதஉரிமை செயற்திட்டமாகிய ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை தொடர்பான உயர்தானிகரின் களக்காரியாலயத்தை இலங்கையில் நிறுவுதல் அவசியமென்பதனை, தேசிய மற்றும் சர்வதேச சங்கங்களினதும், பல மேற்கத்தேய நாடுகளின் கூட்டாகிய சர்வதேச சமூகத்தின் கருத்தும் இதுவென்பதனையும் நான் வலியுறுத்தினேன். குறிப்பிட்ட பதில் அதன் பிற்பாடே கிடைத்தது.

இதற்கு குறிப்பிட்டளவு ஒத்தான கருத்தை ஜெனிவாவில் இலங்கை முகவரான தயான் ஜயதிலக குறிப்பிட்டிருந்தார். அவரிற்கேற்ப யுத்தம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் செயற்படுதல் கடினம். வன்முறைகளடங்கிய யுத்தம் இடம்பெறும் ஒரு நாடு என்றவகையில் இலங்கை மனிதஉரிமையினைப் பாதுகாப்பது தொடர்பில் மிகவும் வரவேற்கத்தக்க செயற்பாடொன்றை செய்துள்ளது. முதலில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்து, பிரபாகரனின் ஏகாதிபத்தியத்தின் கீழிருக்கும் தமிழர்களுட்பட வடக்குக், கிழக்குச் “சுதந்திரத்தை” பெற்று அதனை ஜனநாயக ஆட்சியின்கீழ் கொண்டுவந்தபின் கடந்தகால மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் செயற்பட எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறுவது இதுபோன்ற செயற்பாடுகளாகும்.

இருப்பினும் இந்த சபையின் உள்ளடக்கம் சாதாரண மக்களைக் கொண்டிருக்கவில்லை, பொலிசாரின் சித்திரவதைகளுக்கெதிராக மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தவர்களையும், மரணக்குழிகளைத் தோண்டி – கொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்படி குரலெழுப்பியவர்களையும், தேர்தல் பிரசாரமென்றரீதியில் கொள்ளையடிப்பவர்களுக்கெதிராக தேர்தல் மேற்பார்வையாளர்கள் ஒன்றுகூட்டிய, வீடுகளில், தொழில்ஸ்தாபனங்களில், பாதையில் வன்முறைகளுக்குட்படும் பெண்களுக்காக குரல்கொடுக்கும், சிறுவர்களை தேவையற்ற விடயங்களில் முன்நிறுத்துவதற்கெதிராக மட்டுமல்லாமல் கிழக்கிலிருந்து வடக்கிற்கு உறவுகளைக் காண்பதற்காக பயணஞ்செய்த ஆண்கள், மற்றும் பெண்களை உள்ளடக்கியிருந்தது. எனக்குப் பதில் கிடைத்தது தயானிடமிருந்தோ அல்லது வேறுயாராவது மஹிந்த சிந்தனையாளர்களிடமிருந்தோ அல்ல மனிதஉரிமை பாதுகாவலர் ஒருவரிடமிருந்தாகும். சபையிலிருந்த அனைவரும் அக்கருத்துடன் இணைந்தனரென்றால் அது அசாதாரணமாகும். இருப்பினும் குறிப்பிட்டளவு நபர்கள் அககருத்துடன் இணைந்திருந்தனரென்பது தெளிவானது எவ்வாறெனின் “அக்கதையிலும் உண்மையுள்ளது” என்று சிலர் குறிப்பிட்டதாலாகும்.

மனிதஉரிமை தொடர்பில் முழு உலகளாவிய பிரகடணனத்தில் குறிப்பிடுவதைப்போல் “கொடூர ஆட்சியும் அழுத்தங்களுக்கெதிராக இறுதி மாற்றுவழியான பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கவுள்ள ஒரேவழி சகலமக்களினதும் சகலமனிதஉரிமையினையும் சட்டத்தின்மூலம் பாதுகாத்தலாகும். இதனூடாக ஆயுதமேந்திய யுத்தத்திற்கு காரணமாகிய மனிதஉரிமை மீறப்படுவதுடன் யுத்தத்தின் காரணமாக மேலும் மனிதஉரிமை மீறல்களின் வேகம் அதிகரிக்கும். இதனால் செய்யக்கூடிய யுத்தத்தினுள் இடம்பெறும் மனிதஉரிமை மீறல்களைக் குறைப்பதற்கும், யுத்தத்திற்கு காரணமான மனிதஉரிமை மீறல்களை சரி செய்வதுமாகும்.

எமது பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட மனிதஉரிமை பாதுகாவலர்கள் இதனை அறியாது இருந்தவர்களல்ல. எனது கருத்து மிகவும் சரியானது என்று அவர்கள் குறிப்பிடக் காரணமாக அமைந்தது இதுவாகும். இருப்பினும் இப்பேச்சை இவ்வாறே ஏற்றுக்கொண்டால் கடந்தவாரம் நாங்கள் கதைத்த பிசாசின் கதையின் சபாநாயகரான எனது நண்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது பேச்சுக்களை மாற்றவும் நடைமுறையிலுள்ள நிலைமைகளுக்கெதிராக தோன்றவும் வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் தெரிந்தவற்றை தெரியாதவிதத்தில் நடிப்பது உடலுக்கு சுகமானதாகும். வேறுவகையில் கூறுவதானால் இவர்கள் உண்மை நிலையினை நன்கறிவார்கள். இருந்தாலும் அதனை நம்புவதில்லை. இங்கு இவர்களது துணைக்கு வருவது எனது நண்பனின் துணைக்கு வந்த அதே பிசாசாகும். தமது குடும்பப் பிரச்சனைக்கு காரணமானது தமது மனைவியோ அல்லது பிற நபர்களோ அல்லது பணமோ அல்ல வீட்டில் குடிபுகுந்த ஒரு பிசாசு என்பதனை ஒரு சாத்திரி கூறியதனால் அவர் மனநிறைவடைந்ததுடன் அவர்கள் செய்யவேண்டிய விடயம் அந்தப் பிசாசை தேடிக்கண்டுபிடிப்பதாகும். தேசிய நண்பர்கள் சாத்திரிகளினால் கடந்தவாரம் அந்தப் பிசாசு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது கருத்திற்கேற்ப “இந்த எல்லாத் தோஷங்களுக்கும் காரணம் பிரபாகரனாகும். அவரை அழித்தவுடன் இந்தப் பிரச்சனையும் முடிவுக்குவரும்”. இந்தப் பூதத்தை அழிப்பதற்கான யாகம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தேசிய நண்பர்கள் மற்றும் மனிதஉரிமை பாதுகாவலர்களாகிய இருதரப்புமொன்றாக யாகத்தில் உட்கார்ந்திருப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இதற்காக அவர்கள் பல்வேறு செலவுகளையும் தாங்கிக்கொள்ள தயாராகவுள்ளனர்.

பரக் ஒபாமா
பின்லாடன்மூலம்

No comments: