Monday, March 23, 2009

பழக்கப்பட்ட கதைபோலுள்ளதா? நன்றாக ஞாபகப்படுத்திப் பாருங்கள்


மத்திய லண்டனில் தீவிரவாத தாக்குதலொன்று இடம்பெற்று ஆறு பேர் இறந்ததுடன், மேலும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லண்டன் நகரத்தினுள் அரசியல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது தற்போதைக்கு தடைசெய்துள்ள பிரதமர் ஹபயாஸ் கோபூஷ், சட்டத்தினை அகற்றுமாறு கட்டளையிடுகின்றார் (கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரொருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவரும்படி பொதுமக்கள் கட்டளையிட வழிசமைக்கும் சட்டம்). ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொலிஸ் ஆணையாளரின் கருத்தின்படி, 10000ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மிகவும் சுதந்திரமாக லண்டன் நகரத்தினுள் நடமாடுகின்றனரென்பதாகும். நகரைப் பாதுகாக்கும்முகமாக 50000ற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர், கால்வாய்களினுள் வெடிபொருட்கள் (வெடிப்படையும்) தீவிரவாதிகளினால் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாமென்பதனை கண்டறியும்முகமாக பொலிஸின் மேற்பார்வையின்கீழ் விஷேட படையொன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாராணியும் இந்நிலைமைதொடர்பில் கவனஞ்செலுத்துகின்றார். இத்தீவிரவாதிகளை கண்டஇடத்திலேயே தூக்கில்போட்டு கொலைசெய்யுமளவிற்கு தனது மனமும் மாறியுள்ளதாக ராணி குறிப்பிடுகின்றார். புத்திஜீவி ஒருவரின் கருத்தின்படி தீவிரவாதிகளின் நோக்கத்திற்கு பாரியளவில் துணைநிற்கும் அல்லது ஆதரவு வழங்கும் லண்டன் நகர பொதுமக்கள் இத்தாக்குதலினால் குழப்பமடைந்து பிற்போக்கான அரசின் துணையை நாடி நிற்கின்றது. இருப்பினும் தீவிரவாதத்தைமட்டுமன்றி, தீவிரவாத செயற்பாடுகளில் தாக்கத்தைச் செலுத்தும் அரசியல் அடிப்படைகளுக்கான பதிலைத் தேடுவதற்காக எதிர்கால பிரதமரின் நோக்கங்களை மாற்றியமைக்க இத்தாக்குதல் காரணமாக அமைந்ததென்பதனை காலங்கடந்தே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.

இங்கு கூறப்பட்ட நடவடிக்கைகள்யாவும் நிஜமாகவே இடம்பெற்றவையாகும். ஆனால் இவை இந்நூற்றாண்டிலோ அல்லது கடந்தநூற்றாண்டிலோ இடம்பெற்றவையல்ல, இவை 1867ல் நடந்தவை. அன்றைய பிரதமராக இருந்தவர் பென்ஜமின் டிஸ்ராயேல் அன்றி ரோனி பிளேயர் அல்ல. அன்றைய நகரக பொலிஸ் ஆணையாளராக இருந்தவர் சிறிமத் இயன் பிளேயர் அல்லது சிறிமத் ஜோன் ஸ்டீவன்ஸோ அல்ல றிசர்ட் மென் என்பவரே. அன்றைய ராணியாக இருந்தவர் இரண்டாவது எலிசபெத் அன்றி விக்டோரியா ஆவார். அன்றைய பொதுமக்கள் புத்திஜீவியாக இருந்தவர் சொம்சகி அன்றி கால்மாக்ஸ் என்பவராவார். எதிர்கால பிரதமர் கோடன் பிறவுண் அன்றி கிளஸ்டன் என்பவரே. அன்றைய தீவிரவாதிகளாக இருந்தவர்கள் அல்கய்டா அன்றி அய்ரிஷ் பினியன்களாவர்.

கோனர் கர்ட்
மனிதஉரிமைகள் அழியாது நிலைத்திருக்குமா?

No comments: